இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, October 2, 2011

அகிம்சையும் ஆசைப்படுகிறது



மாற்றானின் இரத்தமும் 
வலியும் சமமென்றுணர்ந்த 
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை 
நாதியற்ற அனாதையாய் 
போர்களோடின்று போர்புரிகிறது 


வன்முறையில் உயிரொன்று பிரிவதை 
ஏற்காத மனங்களறியும் அகிம்சை  
நீ மரித்தாலும் மாறது என்னுள்ளமென்ற 
உயிர்(மனிதங்)களைப் பார்த்து 
வெட்கித் தலைகுனிகிறதிப்போ  


சாதாரணமாய் சாவடிக்கும் 
சாத்தான்களாய் இன்றய மனிதங்கள் 
மீண்டுமொரு மனிதன் (காந்தியடிகளார்) 
பிறந்துவிட்டால் அமைதி நிலைக்குமோவென்று 
அகிம்சையும் ஆசைப்படுகிறது 



ஆயுதங்களை உருவாக்கியவனும் 
ஆயுதங்களை துக்கியவனும் 
சாமானியனின் குருதியாற்றில் குளித்து 
மனித சவங்களின் மெத்தையில் 
சல்லாபங்காண்கிறான் 


அகிம்சைப் போராட்டங்களோடு - அன்னியனிடம் 
அறவழியில் சுதந்திரம் பெற்றிருந்தும் 
அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய் 
அழுது மடியும் காந்திகளுக்கு 
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா?? 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

செய்தாலி said...

//ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான் //

என் புரட்சிக் கவியே
நீ தீட்டும் வரிகளுக்கு
ஏனோ இத்தனை கூர்மை

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...