இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 10, 2021

நிர்பந்தச் சிறைவாசம்



எண்ணக் கருக்கள் கொட்டிக்கிடக்க 
ஏன் இப்படி ஓடியிருக்கிறேனென்று 
நிர்ப்பந்தச் சிறைவாசமொன்றில் 
நிந்திக்கிறது என் கனத்த மனமிங்கு 

ஓராயிரம் நிகழ்வுகள் 
என்னைக் கடந்திருந்த போதும்
தேவைகளின் அழுத்தத்தில் 
வேலையில் மூழ்கியிருந்தேன்  

தன்னந்தனிமையில் எத்தனை துரம் 
கடந்திருக்கிறேன் என்று 
நின்று நிதானித்தபோது அறிகிறேன் 
ஆதலால் ஒற்றை மரமாய்த் தெரிகிறேன் 

தந்தையின்  மரணமும் 
தரணியெங்கும் கொரோணா அவலமும்
மனதின் வடுவாய் வருடிய போதும் 
மரணத்தீக்களின் சுவாலை
மனதில் கொழுந்துவிட்டெரிந்த போதும் 
எழுதத் துடித்தும் எழுதாது விரண்டிருந்தேன் 

என் வாழ்நாளில் அத்தனை சுமைகளும் 
எழுத்தும் நானுமாய் அமைதியாகியிருக்கிறேன் 
விட்டிருந்தவைகளை வடித்தெடுத்துவிட்டு 
நெருடலின் வருடல்களைக் கடந்திட 
தொடர்கிறேன் மீண்டும் என் பக்கத்துடன் 





நிர்ப்நதச் சிறைவாசத்தின் முதல் நாள் 






Related Posts Plugin for WordPress, Blogger...