இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 14, 2019

வியர்வைகளால் புது யுகம் படைப்பவர்களே


விழிபிதுங்கி நிலைதடுமாறி
வியர்வை நிலத்தில் சிந்த
கொட்டும் மழையிலும்
எரிக்கும் வெயிலிலும்
உழைப்பை மூலதனமாக்கிய
உத்தம வர்க்கம் நீங்கள்

காடுகளாய் கற்காளாய்
படைக்கப்பட்ட உலகை
சொர்க்க பூமிகளாக்கி
சொப்பன வாழ்வளிக்கும்
உயரிய படைப்பாளிகள் நீங்கள்

தொழிலாளியாய் உங்கள் பரிணாமத்தில்
அடைந்த துயர்களைத் துச்சமாக்கி
பிறர்வாழ்வின் உச்சத்திற்காய்
தன்நிலை நொந்தேனும்
துணிந்து நிற்கும் மாவீரர்கள் நீங்கள்

தேசங்கள் கடந்தும் தேடியலைந்து
நாசங்களைக் கண்டும் நடுங்காது
புத்துணர்வுடன் புதியதோர் நிலைக்காய்
கற்றுத்தேறி கால்பதித்து
கண்ணியமாய் தொழிலமைத்து
சம்பாதிக்கின்ற சத்தியவான்கள் நீங்கள

சரித்திரங்களின் நாயகர்களாய்
அரியதோர் யுகம் அமைத்து
அரியணை முதல் அடுக்களைவரை
அத்தனையும் உங்களால் உருவானதே
நாளைய சுவனத்திலும் நீங்களாக
பிரார்த்திக்கிறேன்.

Saturday, April 13, 2019

அரவணைத்து அன்பு செலுத்துங்கள்


பச்சிளம் பாலர் நாங்கள்
படித்தறிந்து தேறிவருகிறோம்
நவீன உலகமிதில்
நலன் காணத் துடிக்கிறோம்

தந்தைமுகம் காணவில்லை
தடுமாறுகிறார் அவர் வேலையுடன்
அன்னை மனம் அலைகிறது
அடுக்களையுடனும் அவர்காணும்
சீரியலுடனும்

சகோதரனும் சகோதரியும்
அலைபேசியுடன் சங்கமமாகி
சரிகாணாத தவறுகளுடன்
சீரழிகின்றனர் தினந்தோறும்

வரைவிலக்கணமற்ற அன்பு தேடி
அலைகிறோம் எங்கள் வழியில்
அறிகிறோம் துஷ்பிரயோகங்களுடன்
அலறுகிறார்கள் ஆனபின்புதான்

கடன்தீராத பேறுகளோடு
அரவணைக்கத் தவறினீர்கள்
அன்புகாட்ட மறந்ததினால்
ஆனதினை கண்டீரா?

கபடமற்ற அன்புகாண
ஏக்கமுண்டு எங்களுக்கு 
உங்களன்பு எங்களையடைந்தால்
எங்களாட்சி உலகைவெல்லும்





Related Posts Plugin for WordPress, Blogger...