இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 24, 2010

ரோஜாவின் வாசனையால்...


சிவந்த மலரே...
வழியில் சென்ற நான்
ஈர்க்கும் வாசனையில்
மயங்கிய மதியில்
மீண்டேன் உன்னிடம்

சூட குழல் அற்ற என்னால்
சூடிக் கிடைக்கும் அழகை
பார்த்தே ரசிக்கிறேன்
முகர்ந்து தவிக்கிறேன்

இத்தனை குதூகலத்துடன்
அன்னை மடியில்
தவழும் உன்னை
அணைக்க நாடினேன்
முட்கள் தடுத்தன

உன் இதழில் என் இதழ் பதித்து
என்னாசை தீர்த்திட
முத்தம் ஒன்று கொடுத்து
மொத்தமாய் வாசம் பெற்றேன்
உன் வாசனையின் இளமையால்
பிரிய மனம் மறுக்கிறது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...