காவியங்கள் பாடி நிற்க
காதல் வலி என்று
காகிதத்தில் கீறிச்சென்றாய்
காத்திருந்து கைபிடிக்க
காலமெல்லாம் ஏங்கிநின்று
காதல் பூங்காவனத்திற்கு
காவலனாய் நானிருக்க
காட்சிகள் பல அமைத்து
காதலை நாடகமாக்கி
காத்திரமான பாத்திரமாய்
காவிச்சென்றாய் எனைவிட்டு
காதோரம் பல கவிபடித்து
காதலை உச்சரித்து
காலிலும் விழச்செய்தாய்
காலி செய்து சென்றுவிட்டாய்
காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்
5 comments:
அருமை வாழ்த்துகள்
நன்றி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
//காதலை மட்டும் ரசிக்க செய்தாய் //
அருமையான வரிகள் ஹாசீம்
நன்றி நண்பா சசி
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment