இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 24, 2020

சிறுநாளாகிய பெருநாள்


காரிருளில் அடர்ந்த காட்டில் 
கண்களைக் கட்டி விட்டதுபோல் 
தளர்ந்த மெய்யுடனும் 
சோர்ந்த உள்ளத்துடனும் 
கண்விழித்த நாளிது....!!

பூட்டிய அறையினுள் 
புத்தாடை  ஏதுமின்றி 
புத்துணர்வுக் குறைவுடன் 
உற்றார் உறவுகளற்று
 புலர்ந்து விட்ட நாளிது ...!!!

மரணப்பயத்தினால் 
அஸ்தமித்த உலகத்தில் 
எதிர்காலக் கேள்விக்குறிகளோடு 
நிகழ்காலக் கொலைகளாக்கிய
நிம்மதியற்ற நாளிது......!!

றகுமத்தான நோன்புகளை 
சுமந்து வந்த றமழானுக்கு 
விதியாக்கிய நடமுறைகளுடன்
வேதனைகளோடு விடைகொடுத்த 
வெறுமையான நாளிது.....!!!


என்றும்  குதூகலமாய் 
எல்லோருக்கும் சுபீட்சமாய் 
மலர்ந்து வந்த பெருநாளே 
என்றுமில்லா சாதனைகளோடு 
சிறுநாளாய் ஆனதேனோ......????

படைத்தவனிடமே மண்டியிடுவோம்  
அவனின்றி அணுவுமசையாது 
நடந்தவைகள் கடந்துவிட 
இனிவரும் நாட்களையாவது 
பெருநாளாய் மாற்றிடு இறைவா....!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...