இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 16, 2016

“நான் முதல்வனானால்”

படைத்தவனைத் தொழுதெழுந்து 
பெற்றவர்களை ஆரத்தழுவி 
போற்றும் உலகொன்று காண
புதுமைப் புரட்சிக்காய் உழைத்திடுவேன் 

சட்டங்களைச் சீர்செய்து 
குற்றங்களை ஒழித்திடுவேன் 
பேதங்களை மறக்கச்செய்து 
மனிதர்களென உணர்த்திடுவேன் 

துறைசார்  அபிவிருத்தியென்று 
நாட்டையே செழிப்புறச்செய்து  
சூழல் குற்றவாளிக்குத் தண்டனை தந்து 
சுற்றத்தின் சுகந்தம் காத்திடுவேன் 

வேலையற்ற  நிலைமாற்ற 
தொழிற்சாலைப் பேட்டைகளமைப்பேன் 
பிறக்கும் குழந்தையானாலும் 
அழு குரலுக்கும் சம்பளம் தருவேன் 

உலகம் சிறக்கும் கல்விதந்து 
நாடு துறக்கும் நிலை மாற்றுவேன் 
சுதந்திரம் அனைத்திலும் தந்து 
தேசப் பற்றாளர்களை உருவாக்குவேன் 

அமைச்சர்களை மக்களுக்காய் அமைத்து 
நேரடித்தொடர்பும் என்னுடாக்கி 
மக்களின் தேவைகளகற்றி 
மக்களுக்காய் வாழ்ந்து மடிவேன் 



"கவிதைப் பட்டறை- 2016-ஏப்ரல் கவிதைப் போட்டி"
தலைப்பு: "நான் முதல்வரானால்"




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...