இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, March 17, 2016

புறப்படுங்கள் போராளிகளே.....




கைநழுவும் எம் தருணங்கள் 
எமைத் தவித்திடச் செய்திடும் 
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு 
இழந்தவைகளை உணர்த்திடும் 

வகுக்கப்படும் வியூகங்களும் 
கொடுக்கப்படும் வாக்குறிதிகளும் 
நிறைவேற்றாதவனுக்குச் சுமையாகி 
ஏமாறியவன் அதன்பால் உயர்ந்து நிற்கிறான் 

எமக்குள்ள காலம் பொன்னானது 
எதற்காகவும் வெறுத்திட முடியாதது 
எமக்கான சோர்வுகளெல்லாம் 
எம் சந்ததிகளுக்காவது சுகங்களாகட்டும் 

எமைப் படைத்தவனுக்குத் தெரியும் 
எம் தேவை எதுவென்று 
மானிட சக்திகளுக்கப்பால் 
அவன் நாட்டத்தில் நிறைவு பெறும் 

எவர் மீதும் குறைகூறி 
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து 
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய் 
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள் 

அபிவிருத்தி மாயைக்கும் 
சுயநலத்தின் போதைக்கும் 
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட 
தயாராகுங்கள் தோழர்களே....

வீணர்களின் வியாபாரம் 
விலைகளற்ற பதறுகளென 
நாம் கூறும் அல்லாஹூ அக்பரில் 
நாசமாகிடணும் - இன்றே
புறப்படுங்கள் போராளிகளே....

ஜனசமுத்திரமாய் எம் ஒன்றுகூடல் 
ஆற்றாமைகளை அகற்றிடும் 
எதிர்கால நிகள்வுகளின் 
ஏடுகளாய் பதிவேற்றப்படும் 
நீங்களும் அதிலொரு அங்கமாகிட 
புறப்படுங்கள் பாலமுனை நோக்கி



கருத்து வேறுபாடென்னும் 
கறையான்கள் வந்துங்கள் 
புரிந்துணர்வை சீரழிக்கும்!மிகவும் 
புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் 

என்னும் மறைந்த எம் தலைவர் அஷ்ரஃபின் வரிகளுக்கொற்ப கருத்து வேறுபாடுகளை தூர வைத்துவிட்டு எம் சமுகத்தின் ஒற்றுமைக்காகவும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வுக்காகவும் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது மகாநாட்டுக்காக அனைத்து தரப்பினர்களையும் வருக வருகவென பாலமுனை மண் சார்பாக மனமகிழ்வுடன் வரவேற்கிறோம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...