இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, September 28, 2015

வாழுமுன் சாகின்றாய் மானிடனே....


குடிக்கிறாய் குடிக்கிறாய்
குடிகெடுக்கக் குடிக்கிறாய் 
குடித்துவிட்டுக் கெடுக்கிறாய் 
குலப் பெருமை கெடுக்கிறாய்

அற்ப சுகத்திற்க்காய் மண்டியிட்டு 
மனை வித்துக் குடிக்கிறாய் 
விசமாகுது குடியென்று தெரிந்தும் 
தாலியறுத்துக் குடிக்கிறாய்  

பண்பாடு பேசும் சமுகத்தில் 
பகலிரவாய்க் குடியாலாட்டங்கள் 
குடித்த பின் மதிமயங்கி 
மகள் மடியிலும் கை வைக்கிறாய் 

குடியால் பணமும் விரயமாகி 
உடல் நலமும் நலிவுற்று 
சமுகத்து உதவாக்கரையாக - நீ
வாழுமுன் சாகின்றாய் மானிடனே....

டாஸ்மாக்கை மூடென 
போராட்டத்தால் என்னபயன் 
குடிகாரன் திருந்தினால் 
டாஸ்மாக்கே அழிந்திடும் தானாக 

மக்களைக் காக்கும் அரசுகளே....மதுவினை
இலபத்திற்காய் இறக்குமதி செய்து 
கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்வதா - அதை  
தடைசெய்து நல்ல தலைமுறை உருவாக்குங்கள்  


இப்படைப்பானது *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்" என்பதற்காக  நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி...

போட்டி விதிமுறைகளின் படி தங்களின் தகவல்களை அனுப்பவும்...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

Nagendra Bharathi said...

உண்மை

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...