பசித்திருந்து தாகித்திருந்து
பகலிரவாய் பிரார்த்தித்து
நோன்பு நோற்று நன்மை பெற்று
சுவனத்து வாயல்களடைந்திட
வந்ததெமக்கு றமழான்
நாட்களின் நகர்வுகளோடு
வந்தவாறு செல்கிறது
வரவுகளெமக்கு எதுவானது
முடியுமுன் முனைந்து
அடைந்திடுங்கள் வெகுமதிகளை
வேலைப்பளுவின் சுமையும்
வேதனைதரும் வெயிலும்
சோதனைகளாய் அமைந்து
றமழானோடு யுத்தமாக்கி
தியாகிகளாய் வடிவமைத்திருக்கிறது
தனிமையின் துயரும்
தயவுகளின் கோர்வைகளும்
இத்தரணி வெறுக்கச்செய்கிறது
பிறப்பில் நல்மாந்தராகி
இறப்பிலாவது சுவனமெய்திடனும்
வரம் தரும் றமாழானில்
வளம் தர இறைவனை வேண்டி
வறியதெம் வாழ்வகற்றி
வெற்றியாளர்களாய் அவன் முன்னில்
ஒன்று சேர்வோம் நாளை மறுமையில்