இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 29, 2016

எப்போது உணர்வாய்......


நித்தம் உன் சித்திரவதையில்
செத்துவிடத் தோன்றுதடி....
சித்தம் உன் காலடியிலான என்னை
பித்தமென்று உதறுகிறாய்

நிகள்வுகளின் நிளல்களில்
நிஜங்களையல்வா தொலைக்கிறாய்
சத்தியம் உணர மறுத்து
சலனங்களை ஏற்படுத்துகிறாய்

சந்தேகப் பேய் உன்னுள்
மெத்தையிட்டு உறங்குகிறது
தாலாட்டுப் பாடியதை உன்மடியில்
தங்கவைத்திருக்கிறாய்....

உன் நியாயப் பார்வைக்குள்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வித்தியாசம் தெரியவில்லை - ஆதலால்
தீயொன்றை மூட்டிக்கொண்டிருக்கிறாய்

 நீ உன் உண்மைக் காதலால்
கட்டிவைத்திருக்கின்ற
வாழ்கை என்னும் அழகிய மாளிகையை
உன் கைகொண்டு எரிக்க ஆரம்பித்திருக்கிறாய்

கற்பனையில் செய்யாத குற்றங்களை
என் மீது சுமத்திச் சிறைவைக்கிறாய்
உன் தண்டனைக்குள் அகப்பட்டுவிட்ட என்னை
இழந்த பின்னர் உன் தவறில் உணர்வாய்




Related Posts Plugin for WordPress, Blogger...