இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 17, 2012

தப்பாகியது காதலா.......???


முறுக்கேறிய இளமைக்கு 
முதுமையின் அறிவுரை புரிவதில்லை 
விடலையவன்(ள்) வீழ்ந்துவிட்டான்(ள்) 
காதலெனும் சமுத்திரத்தில் 

துடுப்புள்ள உறவுகளுக்கு 
துணைகொடுக்கத் தெரிவதில்லை 
தீயது காதலென்று தீய வார்தைகளால் 
எரித்திடுவார்கள் எரிந்து......


நீ காதலிக்கிறாயா? துணை கண்டாயா? 
என்ற கூக்குரலில் தலைகுனியச் செய்து
தளும்புகளால் கோலமிட்டு 
வம்புகளால் வெறுக்கச்செய்து 
தேடிய துணை நாடி 
திரும்பிடச் செய்தல் முறையோ 

கிடைக்காத ஆதரவுகளால் 
கிடைத்த காதலை ஏற்றதில் 
துரோகிகளாய் மாற்றப்படும் 
தளிர்களோ ஏராளம்.....ஏராளம் 

Wednesday, December 12, 2012

நீயும்...அனாதையாவாய்.


மங்கிப்போன மனிதநேயங்களின் 
அறுவடையில் விழைநத மாணிக்கங்கள் 
புழுதி படிந்து கிடக்கிறது 
பொழுது விடிந்தும் விடியாத வாழ்வுடன் 
வீதியில் இன்னும் உறங்கிக் கிடக்கிறது 

தாயின்றிய தளிர்கள் 
தரைகொடுத்த மடியில் 
தன்னை மறந்து துயில
பெற்றவரம் பசியின் கொடுமையோ 
கருணையின்றிய மானிடமோ

பஞ்சணை தரமறுத்த உலகில் 
நெஞ்சணை கிடைத்ததே என்றும் 
ஆரத்தழுவ மறந்த உலகில் 
அதரவளித்தேன் என்றும் 
பரிமாறிக்கொண்ட பாசங்களிங்கு 

கிழிசல்களும் கீறல்களும் நிறைந்து 
கற்களிலும் முட்களிலும் படர்ந்து 
கழிக்கின்ற வாழ்வுக்கு நிகர்தேடும்
நிர்க்கதியான ஜென்மங்களுக்கு 
நிளல்களிலேனும் இடந்தாருங்கள் 

Sunday, December 9, 2012

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......


பெண்ணாய்ப் பிறந்தேன் - நல்ல
பிள்ளையாய் வளர்க்கப்பட்டேன்
குலத்தின் விளக்காய்
குடும்பத்தோடு கலந்து மகிழ்ந்தேன்

வயதெனக்கு வந்ததென்று
வரண்கள் பல தேடுகிறார்கள்
வருகின்ற மாப்பிள்ளைகளெல்லாம்
(சீதனம்) மலையளவு கேட்கிறார்களாம்

ஒரு சாண் என்வயிற்றுக்கு
சோறுபோடத்தகுதியற்ற
நொண்டியெனக்குத்தேவையில்லை
மகருக்காய் ஒரு சொல்லேனும்
கற்றுத்தரும் மாந்தரொன்றை தேடுகிறேன்

என்னிடம் பணம்பெற்று
எனக்கவன் உடுத்தத்தேவையில்லை
சீதனம் பத்துலட்சம் வாங்கிவிட்டு
மகரெனக்கு நூத்திஒன்றும் தேவையில்லை
ஹறாமாய் ஆரம்பிக்கும்
இத்திருமணமும் தேவையில்லை

Saturday, December 8, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)



திருமணவாழ்வுடன் தொடர்ந்து
இருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை

வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை

மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்ததை மனம் மறக்கவில்லை

Wednesday, December 5, 2012

பாசத்தின் போர்வலம்......


ஆனந்தமாய் அன்னையோடிருந்தேன் 
கலைத்தெங்களைப் பிரி்த்தவரெவரோ..?
இரு மனங்களுக்கும் கடிவாளமிட்டுக்
கைது செய்து அடைத்தவரெவரோ ??
வெறுக்கப்பட்ட எதிரிகளாய்ப் பாசத்திற்காய்
எங்களுக்குள் போர்வலம் நடக்கிறது

அம்மா வழி காணத்துடிக்கிறேன்
அவளின் மொழிச்சலைக் கேட்கத்துடிக்கிறேன்
அவள் மார்பில் அன்றும் உதைத்திருப்பேனே..
தூக்கி எறிந்து விட்டு தூர இருந்திருப்பாளா??
இன்று செய்த தவறென்னவென்று
உணர்த்தப்படாத குற்றவாளியாய்த்- தாயின்
தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறேன்

உலகத்துத் தாய்களெல்லாம்
பெற்ற குழந்தைகளைப் பேறுகளாய்க் கொண்டு
நாற்செல்வமும் நாளும் தேடி
மனமகிழ்வை நலங்களாய்க் கொடுத்து
தன் மனம் மகிழ்ந்திருப்பார்களாம்





Related Posts Plugin for WordPress, Blogger...