இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, August 19, 2010

காதல் வலி..


காதல் சுகமென்று
காவியங்கள் பாடி நிற்க
காதல் வலி என்று
காகிதத்தில் கீறிச்சென்றாய்

காத்திருந்து கைபிடிக்க
காலமெல்லாம் ஏங்கிநின்று
காதல் பூங்காவனத்திற்கு
காவலனாய் நானிருக்க

காட்சிகள் பல அமைத்து
காதலை நாடகமாக்கி
காத்திரமான பாத்திரமாய்
காவிச்சென்றாய் எனைவிட்டு

காதோரம் பல கவிபடித்து
காதலை உச்சரித்து
காலிலும் விழச்செய்தாய்
காலி செய்து சென்றுவிட்டாய்

காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை வாழ்த்துகள்

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்

சசிகுமார் said...

//காதலை மட்டும் ரசிக்க செய்தாய் //

அருமையான வரிகள் ஹாசீம்

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி நண்பா சசி

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...