இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 27, 2012

தேசத்தை நேசிக்க மறுக்கும் ஆட்டமா....???



கிரிக்கட் எனும் விளையாட்டை 
ஆடவருகிறான் அன்னியதேசத்துச் சோனகன்
கொடிபிடிக்கத்தயாராகிறான் என் தேசத்துச் சகோதரன்
அன்புச் சகோதரனே உன்தேசத்தை வெல்ல வருகிறான்
மாற்றானின் வெற்றிக்காய் எப்படி உன்னால்
குரலெழுப்ப குதூகலிக்க முடிகிறது


எம்மார்க்கம் கற்றுத்தந்த தேசத்துக்கான தியாகத்தை
துச்சமென தூக்கியெறிந்து என்மதத்தவனென்று
எம்தேச ஒற்றுமைக்குப் பங்கம் விழைவித்து
உடன்பிறப்பிற்கே எதிரியாய் நீயானதை
எப்படி உன்னால் மறுக்க முடியும்


தூரதேசத்தவனுக்கு கூஜா தூக்கிவிட்டு
என்தேசமென்று மார்புதட்டுபவனிடம்
எதிர்வாதம் புரிதலில் நியாயம்தான் கிடைக்குமா
நீ நேசிக்க மறந்த உன்தேசத்தை
பூஜிப்பவன் சொந்தம் கொண்டாடினால்
உன்வாதம்தான் ஜெயித்திடுமா??


உன்தாய்க்கு நிகரான தாய்நாட்டைநேசித்து
மதத்தின் வாயிலாக மாற்றானின் மனங்களை வென்று
உன்தேசத்தில் பிறந்தபயனுக்காய்
நாசம் கண்டிடாத ஒற்றுமையினை
நிலைநிறுத்துவதில் தர்மமாகிடாதா...???

Thursday, May 24, 2012

றிஸ்வானா அபுபக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்


எனது ஊரின் மீது பற்றும் நான் என் ஊரவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் வீண் பேகவில்லை கடந்த சில வாரமாக ஒரு தர்ம சங்கடமான நிலையொன்று பேஸ்புக்கில் உலவியதை யாவரும் அறிவீர்கள் அதாவது றிஸ்வானா அபுபக்கர் என்ற பெயர் தாங்கிய பேஸ்புக் பக்கம் ஒன்றில் பாலமுனை என்ற எனது ஊரின் பெயர் விலாசமாக இடப்பட்டிருந்தது அதிகமான எனது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது நண்பர் பட்டியலில் இப்பெயரை சேர்த்திருந்தார்கள்


திடீரென கடந்த வாரம் முதல் அந்த பக்கத்தில் மிகவும் அசிங்கமான (ஒட்டுத்துணி கூட இல்லாத நிர்வாணமான ) புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது விபரிப்பதற்கே நாகூசும் அளவு மிகவும் வெறுக்கத்தக்க புகைப்படங்களாக இருந்தது இந்த புகைப்படங்கள் எங்களை நண்பர்களாக ஏற்றவர்களெல்லாம் பார்வையிட்டுவிட்டு இது தொடர்பாக கேள்விகளை எங்களிடம் கேட்கலானார்கள் இந்த பிரசுரத்தின் பின்னர் மிகவும் அவமானங்களையும் அவப்பெயர்களையும் எங்கள் ஊர் சம்பந்தமாக சந்திக்க நேர்ந்தது இதன் தொடரில் இதனை ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம் அதன் வாயிலாக திடுக்கிடும் சில உண்மைகள் தெரியவந்தது அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையிருப்பதால் இந்தப் பகுதியினை எழுதுகிறேன்


றிஸ்வானா எனும் பெயர்தாங்கிய அந்தப் பெண் பாலமுனையைச் சேர்ந்தவர்தான் என்பதை முதலில் கண்டு பிடித்துக்கொண்டோம் ஆனால் அங்கு பிரசுரமாகியிருந்த புகைப்படங்கள் எதுவும் அந்த பெண்ணுடையது அல்ல எதற்காக இந்த பக்கமும் பிரசுரமும் என்று துருவி அராய்ந்த போதுதான் உண்மை புலப்பட்டது அதாவது றிஸ்வானா என்ற இந்த ஏழைப்பெண்மணி சவுதிக்கு சென்று அங்கு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்திருக்கிறார் அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்த சம்மாந்துறையினை பிறப்பிடமாக கொண்ட கேடுகெட்டவன் அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் முடிப்பதாக வாக்குறிதியும் அளித்து பணம் நகைகளை அந்த பெண்ணிடமிருந்து பெற்று அனுபவித்திருக்கிறான் இந்த பெண் திடீரென நாடு செல்ல நேர்ந்ததால் இவன் அதைத் தெரிந்து கொண்டு தனக்கு இரண்டாயிரம் றியால் தந்து விட்டு செல்லும் படி கேட்டிருக்கிறான் பணமில்லாத அந்தப்பெண் இவனிடம் அறிவிக்காமலே நாட்டுக்கு திரும்பியிருக்கிறாள் இதைக் காரணமாக வைத்து அந்த பெண்ணின் பெயரில் பக்கத்தினை உருவாக்கி அவளது தொடர்பிலக்கத்தினை இட்டு அவள் உரையாடுவது போலவே உரையாடி இந்த அசிங்கமான பிரசுரத்தினை ஏற்படுத்தியிருக்கிறான் 


இந்த விடயத்தில் எங்களது ஊரை சரியென்று காட்டுவதற்காக மற்றய ஊரை பிழையாக சொல்ல முன்வரவில்லை அந்த ஊரைப் பிறப்பிடமாக கொண்டதாக அவன் சொல்லியிருக்கிறான் அவனது பெயர் ஆசிர் தற்போது ஜித்தா நகரில் வேலை செய்கிறான் இவனுக்கு தக்க பாடம் கற்றுத்தர வேண்டும் அவன் வைத்திருந்த தொலைபேசி இலக்கங்களாக 00966599525942/00966591069867/00966582408686 என பல இலக்கங்கள் கிடைக்கப்பெற்றன இவனை அடையாளங்காண இந்த இலக்கங்கள் உதவியாக இருக்கும் சவுதியில் இருக்கின்ற நண்பர்கள் இவனை அடையாளங்கண்டு பொலிசுக்கு தெரியப்படுத்துங்கள் தேவையான ஆதரங்களை மெயில் மூலம் அனுப்தித்தருகிறோம் இவனது புகைப்படமும் இருக்கிறது விரைவில் பிரசுரிக்கிறோம் இலங்கைக்கு வராதவகையில் பொலிசில் புகார் பதிவு செய்யப்பட இருக்கிறது இவன் கத்தாரில் இல்லாததால் இவன் தப்பித்தான் இங்குள்ள சகோதரர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இவனை விட்டுவிடாதீர்கள் 

Sunday, May 20, 2012

யுத்த வெற்றி என்ற மாயை......!!!!



சத்தமின்றிக் கடந்த 
யுத்த நிறைவின் மூன்றாண்டில் 
இன்னும் மருந்தின்றிய 
தழும்புகளோடு அழுகிறது நாடு 


வென்றோம் எங்கள் நாடென்று 
குதூகலிக்கும் சாராரும் 
இறந்தவர்களுகாய் இரங்கல் செய்வோரும் 
இருப்பவர்களின் பிணிதீர்க்க 
இம்மியளவும் நினைத்திடவில்லை 


மூன்றாண்டு கடந்தும் 
முடிவுக்கு வராத சிறைபிடிப்புகளும் 
நிறுத்திடாத இனத்துவேசங்களும் 
நிர்க்கதியற்ற வாழ்வுகளும் 
உண்மையான வெற்றியாகிடுமா??


அழிந்தவர்களின் நாமங்களோடு 
அழித்தவர்களைப் பழிதீர்க்க
இருப்பவர்களின் வதை போக்காது 
வாய்ப்பேச்சுகளில் யுத்தம் செய்து 
ஊனங்களுக்கு உபத்திரம் சேர்ப்பதில் 
காணத்துடிப்பதுதான் எதுவோ....!!!

Saturday, May 19, 2012

வேரை மறுத்த விழுதுகள்



விருட்சமாய் வேரூன்றி 
விழுதினைப் பிரசவித்து 
தாங்கும் விழுதுகளைத் 
தேடும் வேர்களாய்த் தாய் 


வேர்களின் சக்தியில் 
உருவம் பெற்றதை மறந்து 
வானத்திலிருந்து வீழ்ந்ததுபோல் 
நிலத்தையாளத்துடிக்கும் 
விழுதுகளாய் பிள்ளைகள் 


பட்சிகளும் ஊர்வனங்களுமாய் 
பாதியில் கண்ட உறவுகளில் 
தனையென்றும் தாங்கும் 
வேர்களை நோக்கிடாத 
நன்றி மறந்த விழுதுகளங்கு 

Friday, May 18, 2012

விபத்தில் மரணம் வீர மரணம்

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியுன் 

விபத்தில் மரணம் விழிகள் குளமானது 
விம்முகிறது மனம் ஜீரணிக்க முடியவில்லை 
இன்னாரது நட்பெனக்கு மூன்றரைவருடம் 
ஓரறையில் உண்டு மகிழ்ந்திருந்து 
அளவளாவிய தருணங்கள் கண்முன்னே 
நிழல்களாய் எனைத்தொடர்கிறது 


கால ஓட்டம் இத்தனை வேகமாவென
மரணச்செய்தியில் உணர்ந்து நொந்தேன்
வெகுதொலைவு தொடர்பின்றிருந்தும்
பழகிய நட்பினை பரிதாபச்செய்திவந்து
பதைக்கச் செய்கிறது நெஞ்சை


மனிதர்களுக்குப் பல பக்கங்கள்
அத்தனை மனிதர்களின் நிலைகளில்
மரணம் மாத்திரம் நன்றியுடைய பகுதியினை
நினைத்திடச்செய்து உரைத்திடமுடிகிறது


துணைவனைக் காத்திருந்த மனைவிக்கும்
தந்தையினைக் காத்திருந்த பிள்ளைகளுக்கும்
பிரிவின் துயர்நீத்திட எதிர்பார்த்திருந்த
உறவுகளுக்கும் புகைப்படவாயிலாக
மரணத்தின் தரிசனம் அனைத்திலும் கொடுமையானது

Thursday, May 17, 2012

காதலின் வெற்றி



கண்ணெதிரில் கடந்தாயொரு மின்னலாய் 
கண்பார்வை வீ்ச்சில் சிக்கிவிட்டேன் மீனாய் 
கவர்ந்ததன் மாயமென்னவென்றேன் 
காவியிலும் தடுமாறச் செய்யும் 
கன்னியுன் காதலென்று உணர்த்திவிட்டாய் 


திடமான உறுதிகொண்டும் 
திருவாசகம் ஓதிக்கொண்டும் 
திரும்பியேனும் பார்காது - எனைக்
காத்துநின்று வீற்றிருப்பேனென்றவெரை 
காலில் விழச்செய்யும் சக்தியாம் காதல் 


மனிதனாய் மலர்ந்ததுமே 
காதலனாய் ஆனாயென்ற கருவில் 
மானிடனின் வாழ்வோடு பிணைந்து கொண்ட 
அற்புத உணர்வும் காதலென்று 
வீழ்ந்தவரெல்லாம் விலகிநிற்கின்றனர் 


காதலும் காமமும் காரணமாகி 
அன்பும் பாசமும் விழைவுகளாக 
காலத்தையும் வாழ்வையும் கடத்தும் 
மனித ஜனனத்தின் நிகழ்வில் 
நிலைத்திருக்கிறது உலகம் 

Sunday, May 13, 2012

மாதருக்கு மகுடம் தாய்மை



உலகத்து ஜனனத்தின் சொந்தக்காரி - என் 
உருவத்தின் அழகுக்கு உரிமைக்காரி
உருவான உயிர்களில் உத்தமி
தாயென்ற நாமத்தின் அதிபதி 


மாதருக்கு மகுடம் தாய்மை ஏற்று 
மடிதவழ்ந்து மார்பேந்தி மகிழ்வுதந்து 
சேயென்று சோர்வெதுவும் கருதாது - தன்
சுகமின்றி சுகவாழ்வளிக்கின்ற சுடரொளி 


சேய்நலம் தான் கருதி 
சுயநலம் மறந்திருந்ததில் 
சுற்றமும் போற்றும் 
சுவனத்து வாசலும் உம் வழி 


பேதங்களேதுமற்று பேறுகளும் நோக்காது 
பிள்ளை நிலையில் பிழைகளிருந்தாலும் 
மன்னிக்கும் மாந்தருள் முதன்மையானவளாய்  
மகிழ்வுறும் மனிதத் திலகமிவள்


அம்மா புகளை அகிலத்திலைடைந்து 
அன்னை அவளின் பாசத்தில் திழைத்து 
உயரிய வாழ்வை ஈருலகிலும் அடைய 
உணரும் பிள்ளைகள் உம்மால் உருவாக வேண்டும் 

Tuesday, May 8, 2012

விலைவாசியா..கொலைவாசியா ??


முன்னேற்றமற்ற பணப்பெறுமதியில் 
வீழ்வது மக்களாகிறது 
வருமானத்திற்கு வழியற்று 
விலை ஏற்றத்தில் முழ்கின்றனர் 


உலகப்பொருளாதாரத்துடன் 
கையேந்தும் நிலையில் 
யாசகத்திற்கும் வழியற்ற 
பொருளாதாரப்பின்னடைவு 


பெறுமதியற்ற ரூபாவினால் 
அத்தனை பெருட்களும் அயலவரிடம்
கொள்வனவில் குறைவின்றி 
விற்பனைக்கு ஏதுமற்று 
திண்டாடுகிறது நாடு 

Sunday, May 6, 2012

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை

இஸ்லாத்தினைப் பொறுத்தவரை அதன் கோட்பாடுகளுக்கு அப்பால் செயல்பாடாமல் பாதுகாத்துக் கொண்டோமானால் உண்மை முஃமீனாக விளங்க முடியும் எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளில் இருந்து நாமும் தவிர்ந்து நடந்தாலே போதுமானது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்ற வகையில் மீண்டும் இதனை பிரசுரிக்கிறேன் 

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை
  • அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது
  • சிசுக்களைக் கொல்வது.
  • தற்கொலை செய்வது.
  • விபசாரம் செய்வது.
  • ஓரின சேர்க்கை புரிவது.
  • சுய இன்பம் அடைவது.
  • மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.
  • திருடுவது.
  • பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.
  • போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
  • முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.
  • அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.
  • ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.
  • பெற்றோரை மாற்றிக் கூறுவது.
  • நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.
  • இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.
  • பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.
  • முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.
  • முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.
  • மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.
  • அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)
  • பொய் சத்தியம் செய்வது.
  • வீணாக சத்தியம் செய்வது.
  • ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.
  • அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.
  • ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.
  • அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.
  • அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.
  • தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது
  • தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
  • செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.
  • இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)
  • பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.
  • பிறர் குறைகளை ஆராய்வது.
  • நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.
  • பொறாமை கொள்வது.
  • குரோதம் கொள்வது.
  • உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.
  • அசத்திய வழியில் செல்வது.
  • பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.
  • உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.
  • பூமியில் பெருமையாக நடந்து செல்வது.
  • மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)
  • கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)
  • தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.
  • பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)
  • பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)
  • சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
  • கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.
  • தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.
  • பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.
  • வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.
  • வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.

Saturday, May 5, 2012

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!


விழித்தெழு என் வாலிபனே 
உன் தூக்கம் கலைத்து விழித்தெழு 
உன் தலைவனின் பாதையில் 
படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு 


உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும் 
உனக்கு ஆசையூட்டிய பசப்பு வார்த்தைகளும் 
கானல் நீராயானது இன்னுமா தூக்கம் 
விழித்தெழு உன்னை நீயறிவாய் 


சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு 
உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து 
தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய
உன் தவிப்பிலிருந்து விழித்தெழு 


சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு 
அடக்கு முறைக்கு சாவுமணியடித்த 
தங்கத்தலைவனின் உரைகள் மறந்து 
தாரைவார்த்த தலைவர்களின் வழியறுத்து 
வீரியம் கொண்ட விழுதுகளாய் விழித்தெழு 


அன்னியன் உனை அவமதிக்கிறான் 
ஆட்சியாளன் உனை ஏறிமிதிக்கிறான் 
நிராயுத பாணி உனை நிற்கவைத்துச் சுடுகிறான் 
உணர்வற்ற உறக்கமெதற்கு விழித்தெழு 

கல்முனைக் கொடியேற்றம்



எமது பிரதேசத்தில் அப்பட்டமான இணைவைத்தலோடு அனாச்சாரத்திற்கு வழியமைத்துத்தரும் ஒர் இடமாக இருந்துவருகின்ற கல்முனைக் குடி கொடியேற்றப்பள்ளி வாசலைப் பற்றி பரவலாக அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவற்றை ஆரம்பிப்பதற்கும் இதை ஊக்குவிப்பதற்கும் ஊரின் மேயரும் உலமாக்களும் ஒத்து நிற்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது


இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த விடயம் மாற்று மதத்திலிருந்து பரவிய கொடிய நோய்.  பண்டய காலத்தில் பல பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது காலப்போக்கில் திறம்பட இஸ்லாத்தை விளங்கிய ஆலிம்களால் அவை முழுவதுமாக தடுக்கப்பட்டு ஓரளவு ஏனய ஊர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கல்முனை என்ற மிகப்பெரிய ஊரும் அதன் நிருவாகமும் இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை


அங்கு என்னதான் நடக்கிறது என்று ஆய்ந்து பார்த்தால் அப்பட்டமான அனாச்சாரம் என்றோ மரணித்த ஒரு சாதாரணமான மனிதனின் கபுரைச் சுத்தி மக்கள் வலம் வருவதும் பிள்ளை கேட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கின்ற எண்ணையினை வயிற்றில் தடவுவதும் குழந்தைகளின் தலைகளில் தடவுவதும் அவர்களுக்கு காணிக்கை என்ற பெயரில் ஆடு மாறு போன்றவற்றை கொடுப்பதும் இன்னும் பல எழுத முடியாத வணக்கங்கள் என்ற பெயரில் இடம்பெறுகிறது

Wednesday, May 2, 2012

தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???



அன்பார்ந்த தோழர்களே......



காலத்திற்குப் பொருத்தமான ஒரு விடயத்தினை தங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலே நான் இட்டிருக்கின்ற புகைப்படங்கள் பரவலாக சமுக தளங்களில் உலவக்காண்கிறோம் இது முற்றிலும் எமது மார்கத்திற்கும் சமுகத்திற்கும் மாறுபட்ட விடயமாகும் இவர்களை பழிவாங்குகின்றோம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் தவறுகளை இவ்வாறு நாம் இழிவு படுத்தி பழிதீர்க்கலாகாது காரணம் எமது மார்கத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள், இவர்களை எமக்குப் பிடிக்காவிட்டாலும் இவர்களை நேசிப்பவர்களும், இவர்கள் பிரதிநிதித்துப்படுத்தும் எம் சமுகத்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காகவாவது இவ்வாறான விடயத்தினை தவிர்ந்து கொள்ளுதல் சிறப்பாக அமையும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்கள் இவற்றை மீண்டும் மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 


நடந்தேறிய(தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு) முஸ்லீம் சமுகத்திற்கு எதிரான நடவெடிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாத இந்த காலகட்டத்தில் இருக்கின்ற அத்தனை முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆதரிப்போரை ஒரே கொடியின் கீழ் திரட்டியேனும் எமக்கான தீர்வுகளை எட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான உங்கள் உழைப்புகளைச் செய்யுங்கள்.

தாய் தேடும் விடை

பட்ட மரங்களின் நடுவே
பட்டமரமாய் இத்தாய்
வரண்ட நிலத்துடன்
நா- வரண்ட இத்தாயோ
வேதனை தீர்ப்பாயா ? என்று
வேண்டுகிறாள் இறைவனிடம்


விதியின் விளையாட்டோ
வீணர்களின் விழைவோ 
பேறுகளற்ற பேதையாய்
விடும் கண்ணீருக்கு
விடை தேடுகிறாள்


இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து 
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம் 


தாய் விடும் கண்ணீரில் மூழ்கி 
தரணியில் வாழ்விழந்து 
தனிமரமாய் நீயும் மாறுமுன்  
தாய்பாசத்தில் நனைந்திடுங்கள் 

Tuesday, May 1, 2012

உத்தமத் தொழிலாளி...


உதிரத்தை வியர்வையாக்கி
உலகத்தின் பசிதீர்க்க
தனக்கென உண்ணமறந்த
உத்தம அவதாரம் தொழிலாளி


ஊரார் உறவினர் உளமாற
உவகை மட்டும் தனதாக்கி
உறக்கம் தொலைத்த
உயிரில் உயர்ந்தவன் தொழிலாளி


இவன் கை சோர்ந்து விட்டால்
உலகமும் இயங்க மறுத்துவிடும்
இதுநாள்வரை ஓயாது உழைக்கும்
இயந்திரத்தில் திலகம் தொழிலாளி


இவனையும் வதைத்து மிதிக்கிறான்
ஈரமற்ற மனங்கொண்ட முதலாளி
இவனுக்கானதேதுமில்லை
இன்றொருநாள் இவன் தினமாம்
இனிய வாழ்த்தும் கூறிடுங்கள்




Related Posts Plugin for WordPress, Blogger...