இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, December 31, 2015

நகரும் நாட்கள்.........


மாற்றங்களில்லா நாட்களோடு  
மகிழ்வுகளில்லா வாழ்க்கையுடன் 
மனங்களிங்கு தவிக்கிறது 
மனிதமில்லா மனிதர்களோடு 

முதலாளித்துவம் முதன்மையாகி 
சுறண்டல்கள் சாதாரணமாகி 
நெருடல்களின் கவலையில் 
இழந்தவைகள் அதிகமாதிகம் 

விலைபோன இளமையும் 
எதிர்கொள்ளும் முதுமையும் 
விதி செய்த கோலங்களென்று 
வேடிக்கைகள் வாழ்விலென்றும் 

நாளையிலும் இன்றிலும் 
நமக்கெங்கே மாற்றமென்று 
என்னாளும் ஒன்றாய்க் கண்டு 
மகிழ்வதற்கும் மனமில்லை இன்று 

கடந்தவைகளை மற்நதவைகளாக்கி
பிறப்பவைகளை  மாற்றங்களாக்கி 
சுபீட்சங்களை  வாழ்விலேற்று 
சுகங்காண வகைசெய்திடுவாயாக.....!

Saturday, December 26, 2015

சுனாமி உலவுகிறது இன்றும்........


பல்லாயிரம் வருடங்களில் 
ஓரலையாய் வந்து 
பேரலையாம் சுனாமியாய் 
இன்றும் நினைவலைகள் தொடர்கிறது 

அமைதிக் கடலனப்போற்றி 
அன்னை மடி அன்னம் தேடிய 
ஆயிரமாயிரம் உயிர்களை 
இழந்த நாள் மறந்திடுமா  

இறைவன் எழுதிய தீர்ப்பு அது 
அறிந்திடாத காரணி எது 
வல்லவன் வழி மறப்பை 
உணர்த்திவிட்ட நிகள்வுதானோ......

நெஞ்சங்கள் பதைத்திருந்தது 
நெடு நாட்கள் உண்ண மறுத்து 
நித்தமும் நடு நடுங்கி 
அங்குமிங்கும் சுனாமியென 
கனவிலும் ஓடிய நாட்களாகியது 

வடுக்கள் தடங்களாகி 
அதன் எச்சங்கள் மிச்சமாகி 
எத்தனை உயிர்கள் மந்தமாய் 
மகிழ்வின்றித் துவண்டர்கள் 

காலத்தின் வேகம் கடத்தியது வருடங்களை 
கட்டளைகள் மறந்த அதே மானிடங்கள் 
அனியாயங்களின் உச்சியில் 
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள் 

பாத்திருக்கிறான் இறைவன் 
பகுத்தறிவு மனிதன் திருந்துவானென்று 
உணர்த்தும் வடிவம் எச்சுனாமி என 
அவனையன்றி யாரறிவார்

ஆகு என்றாலாகிவிட - அவன் 
கட்டளைக்காய் காத்திருக்கிறது பிரபஞ்சம் 
ஆகு நீ மனிதமாய் என 
சிறுசிறு சுனாமிகள் உலவுகின்றது இன்றும் 


qatar : 1:20am

Wednesday, December 23, 2015

உளமிங்கு அழுகிறது........

கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 

வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 

அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 

கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 

விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 

உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 

குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

Monday, December 21, 2015

புதிய இலங்கையுன்னால்........




பல்லாயிரம் வருட வரலாற்றில் 
இலங்கைத் தலைவர்களுள் உன் அவதாரம் 
இன்று யாழ் மண்ணில் உன் வரவு கண்டு 
உண்மை உணர்வுகளுடன் மெய்ச்சிலிர்க்கிறது 

வாய்ப் பேச்சு அரசியல் வாதிகளின் வாயடைத்து 
உண்மை அரசியல் வழி எதுவென்றுணர்த்தி
வறியவர்களின் வாய் மொழி கேட்டு 
புத்துணரச்சியும் வழங்கி நிற்கின்றாய்  

வாக்கிடும் காலம் மட்டும் வாதங்கள் செய்து 
வெற்றியாளர்களாய் மகுடம் சூடிவிட்டு 
வறியவன் பிச்சையில் அரியாசனமேறி 
வந்த வழி மறந்த சல்லாப வாழ்வவர்களுக்கு 

மக்களறியா மொழிச்சொற்களானாலும் 
மகிழ்வு தரும் மென்மை கொண்டு 
அன்னியோன்யமாய் அரவணைத்து 
பாசப் பரிமாற்றத்தில் மனசிங்கு அழுகிறது 
ஆனந்தக் கண்ணீர்களோடு 

எத்தனை தலைமைகள் ஆண்டிருந்தும் 
அதே ஆண்டியாய் வாழ்க்கை 
உன் காலடித் தடம் கண்டு 
யாழ் அன்னையும் அழுகிறாள் மகிழ்ந்து 

என்ன செய்தாயோ எதைச் செய்வாயோ 
நீயே உனக்கு அத்தாட்சி 
உன் வருகையில் வரம் கிடைத்திட்டதாய் 
வளரும் குழந்தையும் மகிழ்கிறதிங்கு 

அடித்தவனே அணைக்கிறானென்று 
திரும்பியுனைப் பார்க்கிறது உலகம் 
தீண்டாதோரும் திகைத்திடுமளவு 
தீர்வுகளைத் தொடர்ந்திடு மகிழ்ந்து 

அஷ்தமனக் காலங்களோடு 
அழுது புரண்ட நாட்கள் மறக்க 
அன்னையாய் உச்சிமோர்ந்து 
அகம் நிறைந்த அபிவிருத்திகளைத் தந்துவிடு 

புதியதோர் உலகம் படைக்க 
புத்துணர்வும் உன்னால் பிறந்திருக்கிறது 
புதுமைப் புரட்சியமைத்து 
புதிய தலைவனாய் தொடர்ந்திடு 
புதிய இலங்கையையும் அமைந்திடும் 

Saturday, December 19, 2015

இரண்டாம் உயிருக்கொரு வாழ்த்து


கவிஞர்களின் மன்றில்
கவிதைகளின் அலங்காரங்கள்
வார்தைகளின் ஜாலங்களால்
கோலமிடுகிறோம் கவிதைகளாய்

உனக்கென என் உள்ளத்தில்
கவி வரிகளாய்த்தான் ஊற்றெடுக்கிறது
வாழ்த்தவொரு சந்தர்ப்பமெனக்கொண்டு
வரிகளமைக்கிறேன் வாழ்க வென்று

பாலமுனைக் கவித்தாய் பெற்றெடுத்த
இளவல் நீ என்று மகிழ்கிறாளெம்தாய்
உனை ஈன்றதாயின் இறுமாப்பில்
உணர்வுகளும் அஸ்தமித்திருக்கும்
நலமாய் வாழ “அமீர் மூமினையும்” வாழ்த்துகிறேன்

சிந்தும் உன் சிந்தனைகளை
செதுக்கியதால் கவிதைக் கருவேற்று
இன்று “இரண்டாம் உயிர்” என்று
கையில் குழந்தையாய் பிரசவித்திருக்கிறாய்

நீ யாகிய முதலாம் உயிர்
ஈன்றிருக்கும் கவிதைகளின் தொகுப்பை
மற்றொரு உயிராய்க் கொண்டிருப்பாய் போலும்
இவ்வுயிரும்  பேறுகளைடைந்திட வாழ்த்துகிறேன்

பாலமுனை பாறுக் ஆசுகவி அன்புடீன் - என
முத்தாய் எம் முன்னோடிகளின் வழியில்
பல கவிச் செல்வங்களின் சேமிப்பில்
சொத்தாய் சேர்கிறாய் நீயும்  - வாழ்க பல்லாண்டு

கல்வி உணர்வாளனாய் உம்பயணத்தில்
கவிதை எனும் ஆயுதமுன் கையில்
எம் சமுகத்துக் களை பிடுங்க
கூர்மையாக்கிடு உன் கவிதைகளை 

பாலமுனை பஸ்மில் என்றிருந்தாய் 
இன்று பாவலர் பஸ்மிலாய் உன் அவதாரம் 
கவியுலகில் என்றும் புலவராய்த் திகள 
பெருமையுடன் வாழ்த்துகிறேன் 

நீ செல்லும் பாதையில் 
நானும் இருக்கிறேனென்று மகிழ்கிறேன் 
உன்பாதையில் என்றும் வெற்றிகளை 
இறைவன் தந்திட இருகரமேந்துகிறேன் 
வாழ்க வாழ்க ஈருலக வெற்றியோடு வாழ்க 

Wednesday, December 16, 2015

நிம்மதி வேண்டும் ...??


நிம்மதி தொலைத்து நிம்மதி தேடும் 
நிர்க்கதியற்ற மானிடனே - நீ 
நின்று நிதானித்து நிமிர்ந்து பார் 
நின் நிம்மதி உன்னை கேலி செய்யும் 

ஆசைக்கு அடிபணிந்து 
பேராசையுடன் போர்தொடுத்து 
சொற்ப வாழ்நாள் உனதென்று மறந்து 
அற்ப சுகங்களுக்காய் அலைகிறாய் 


கொடை வெறுக்கும் கருமியாய் 
கண்மூடிய மானிடனாய் 
நாளைக்காய்  சேர்த்து வைத்து 
இன்றய நிம்மதிக்குத் தீ இடுகிறாய் 

இம்மியளவும் இறைவனை மறந்து
அவன் வழி நிம்மதி மறுத்து 
படைப்புகளுக்கே அடிமையாகி 
பாரிதவிக்கிறாய் நிம்மதிக்காய் 

குழந்தையாய் நீ இருந்தபோது 
அடைந்திருந்த நிம்மதி போல்  
குழந்தை மனங்கொண்டு 
அனைத்தையும் ஆண்டு பார் 
நிம்மதி உன்னிடமே சரணடைந்திடும் 

Thursday, December 3, 2015

தோல்விகண்டு வெற்றிகொள்


தோல்வி கண்டு துவண்டிடாதே 
வெற்றி நோக்கி வெருண்டு எழு 
எதனால் தோல்வியென்று கண்டு 
துடைத்தெறிந்திடு வெற்றிக்காய் 

தோல்வியால் அச்சங்கொண்டு 
வெற்றியைத் தூரமாக்கி 
தோல்விக்கே இன்னும் உரமூட்டி
தோற்றிடாதே உன் வாழ்வில் 

சுற்றார் கூற்றில் சுறுண்டு 
சுவர்களுக்குள் சிக்குண்டு 
சிதைத்திடாதே உன்னை 
சினங்கொண்டெளு -உன்
சீற்றம் வெற்றிகளைத் தேடித்தரும் 

உற்றார் உனக்கு ஊட்டிடும் 
உண்மையான உரைகளை ஏற்று 
சுற்றும் முற்றும் உற்றுப்பார் 
உன்னருகில் காண்பாய் வெற்றிகளை 

எத்தனை முறை வீழ்ந்திருப்பாய் 
உன் தத்திமித்தும் பருவத்தில் 
எழுந்திராவிட்டால் நடந்திருப்பீரா இன்று 
உனைத் தூக்கிவிட நாங்களுண்டு 
எழுந்துநட வெற்றி நோக்கி 

வயதுகள் உனைக் கடந்து செல்லும் 
விடுபட்டவைகள் மீண்டும் திரும்பிடாது  
நாளைய வயது  உன் தவறுணர்த்துமுன் 
இன்றய வயதின் தேவைகளை அகற்றிடு....

தோற்றாயென்று தூற்றுவோருக்கு 
வென்றாயென்று வெதும்பிட 
வகுத்து நட உன்வழியில் - நாளை 
என் வீரத்தாய் நீயாவாய் 

Saturday, November 28, 2015

சென்னை மழை........


மழை வேண்டுமென்று 
மடிப்பிச்சை வேண்டியோரும் 
மழைத்தூறலின் மத்தாப்பில் 
மகிழ்ந்து மனம் நிறைவடைந்தோரும் 
மண்டியிட்டு அழுகிறார்கள் 

இறைவனின் அருளாய் வந்து 
வறட்சியென்னும் நோயகற்றி 
செழுப்பின் அழகுகளோடு 
அலங்காரமிடும் பூமித்தாய் -இன்று
என்று நீ ஓய்வாயென அழுகிறாள் 

உலகமெல்லாம் மழைபெய்தும் 
சென்னை மழையென்று அவலமாகி 
அன்றாடத்தவிப்புகளோடு மக்களை 
அல்லல் படச்செய்தமையால் 
கண்ணீர் மழையின்னும் ஓயலியே......

இறைவன் நாடினாலன்றி 
சரிசெய்திட முடிந்திடாத 
இயற்கை அனரத்தமிது 
வல்ல நாயன் இரக்கமுடையவன் 
மனமுருகி மன்றாடுங்கள் அவனிடமே....

Tuesday, November 24, 2015

துரோகத்தால் நரகமுனக்கு


துரோக அரங்கேற்றத்தினை 
துச்சமாய்த் துணிந்து செய்து 
துணைவனின் துறவுக்கு 
தூண்டியதுன் காமம் 

வேண்டியது வேண்டுமென்று 
நீ வேண்டாத போதும் - ஒரு 
ஆண்மகனாய் உனக்காக 
ஆசைகளுக்கு விலங்கிட்டு 
அடிமையாகினான் அவலங்களுக்கு 

ஏழ்மையாய் அவன் பிறந்து 
ஏளன வாழ்வை ஏற்க மறுத்து 
நாட்டாரின் வழமைகளுடன் 
நாடு கடத்தப்பட்டானே - அவனது 
குற்றமா நீ செய்யும் துரோகம் 

ஒவ்வொரு நொடியும் 
உணர்வுகளை இறுக்கி வைத்து 
சோகங்களின் சுமைகளை 
உமது சுகத்திற்காகச் சுமக்கிறானே 
எப்படி நீ குற்றம் சுமத்துகிறாய் 

ஆசையாய் உனைக்காண 
அன்புச் சுமைகளோடு வந்தவனுக்கு 
அடிவயிற்றுச் சுமையில் 
அன்னியனின் அசிங்கத்தினை 
இவன் தலையில் இடியாய் இறக்கின்றாயே....

என்ன இது அனியாயம் 
பெண்ணினத்துக்கே அவமானமுன்னால் 
அப்பாவி அவன் செய்யாத குற்றத்தில் 
ஆயுட்காலத் தண்டனையுன்னால் 
ஏற்றிருப்பதுவும் தகுமோ.......

இச்சைக்கு இசைந்து 
இன்னல்களை விலைக்கு வாங்கி 
இடிபாடுகளுடனான வாழ்வை விட 
இறைவனுக்கு அஞ்சி இனிய நல்லறத்துடன் 
இன்புற வாழ்ந்திட வேண்டாமா.....????
சிந்திப்பீராக.......................................................!!!!




நான் கண்ட ஒரு அனியாயம் என் மனதைத் தைத்த வண்ணமிருந்தது கட்டியவளின் துரோகம் கணவனுக்காகியதால் கைவிட்டு விட்டு மரணத்தினை தேடிக்கொண்டான் துரோகமிளைத்தவளுக்கு தண்டனை எதுவுமற்று உலவுகிறாள் இவ்வுலகில் மறுமையில் இறைவனின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை மறந்தவளாக...... காலம் பதில் தரும் 

Thursday, October 15, 2015

சமூகத்துச் சிற்பி.....


ஏணியாய் நிமிர்ந்து நின்று - எமை 
ஏற்றிவிட்டு அழகுபார்க்கும் 
உத்தம மனிதர் எம் ஆசான் 
அறிவை அன்பாலூட்டி - அன்னையாய் 
அகமகிழும் இன்னோர் தாய் 

வாழ்நாள் மாணாக்கனாய் -என்றும்
கல்வி கற்றுக் கற்பித்து - பல 
கல்வி மான்களை உருவாக்கிடும் 
சமூகத்துச் சிற்பிகளவர்கள் 
சுவனமடைந்திட பிரார்த்திப்போம் 

Wednesday, October 14, 2015

பிறைலி(BRAILLE) கல்வி முறை


உலகில்  உள்ள   கண்பார்வை அற்றவர்களின்  எண்ணிக்கை 40  மில்லியன் எமது சூழலிலும் நீங்கள் இவர்களை  அவதானித்திருப்பீர்கள் இவர்களது வெள்ளை பிரம்பும் கறுப்பு கண்ணாடியும் இவர்களை அடையாளப்படுத்தும் குறியீடுகளாக மாறிவிட்டது  .இவர்களுக்கே உரித்தான தனித்துவமான எழுத்து மொழிதான் braille .நாம் பயன்படுத்தும் பல  அன்றாட சாதனங்களில் சில அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறீர்களா ?
இவை கண்பார்வை அற்றோர் இலகுவாகப் பயன்படுத்துவதற்காக பொறிக்கப்பட்டுள்ளது key  board  ,phone  ,coins ,lift swith ரூபாய் நோட்டுக்கள் ,ATM machine என பலசாதனங்களில் இவை பொறிக்கப்பட்டுள்ளன  பெரும்பாலான உலகநாடுகளில் கண்பார்வை அற்றோருக்காக  இவ்வாறு  குறியீடுகள் பொறிக்கப்படுதல் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன 

ATM  keypad


lift switch 


இவ்வெழுத்தை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த Louis braille என்ற டீன்ஏஜ் பையன் 1821 இல் கண்டுபிடித்தார் அப்போது இவருக்கு வயது 15  இவர் இவர் ஒரு விபத்திலே தன் கண்பார்வையை இழந்தவர் இவர் braille ஐ கண்டுபிடித்ததும்  இதை தனது பாடசாலையில் உள்ள ஏனைய பார்வைஅற்ற மாணவர்களுக்கு  கற்பித்தார் .இவரது இக்கண்டுபிடிப்பால் பார்வை அற்றோருக்கான கற்பித்தல் முறை முழுவதுமாக மாற்றப்பட்டது 
braille இன் அறிமுகத்திற்கு முற்பட்ட காலத்தில் இவர்களுக்கான கற்பித்தல் முறையில் எழுதுதலையும் வாசித்தலையும் தவிர்த்து வந்தார்கள் braille  இவற்றை மாற்றி அமைத்தது  

அத்துடன் braille இன் கண்டுபிடிப்பிற்கு முன் கண்பார்வை அற்றோருக்கு கல்விகற்பதற்கும் அலுவலக வேலைகளை செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவாகவே காணப்பட்டன  
இன்று எழுத்துமொளிகளில் முக்கிய கண்டுபிடிப்பாக braille திகழ்கிறது கண்பார்வைஅற்றோற்கென தனித்துவமான எழுத்தாணியும் சிலேட்டும் உள்ளது 

கண்பார்வை அற்றவர்களுக்கென தனித்துவமான எழுத்தாணியும் சிலைட்டும் இருக்கின்றது இவற்றை கண்டுபிடித்தவர் Charles barbier


Braille  இன் 100 வது நினைவுதினத்தின் போது கண்பார்வை அற்றவர்களில் மிகப்பெரிய சாதனையாளர்களில் ஒருவரான Helen  keller  "பார்வையற்றவர்களாகிய நாம் louis  Braille இற்கும் Gutenberg இற்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள் "என்று கூறி உள்ளார் (Gutenberg அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் )


Braille ,gutenberg ஆல் பலர்   கல்வியில் முன்னேற முடிந்தது ஆனால் அதிலும் ஒரு தடைக்கல் இருந்தது பதிப்பகங்கள் Braille எழுத்துக்களை இலகுவாக கண்பார்வை அற்றவர்களுக்கான புத்தகங்களை உருவாக்கிவிடுகின்றன அனால் அவற்றை அதிக விலைக்கே விற்கின்றன
Braille  எழுத்தும் காலத்தோடு சில மாற்றங்களை அடைந்துள்ளது பிரிட்டின் ,அமெரிக்கா விற்கிடையில் இம்மொழியில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன


charles barbier  1828 இல் Royal institution of blind youth இற்கு சென்றார் அங்கு louis   braille யிடம் night  writing   ஐ அறிமுகப்படுத்தினர் barbier இதை கண்டுபிடித்தது இரவில் ராணுவ வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாக உரையாடுவதற்காக அனால் night writing வரவேற்கப்படவில்லை இவரது நைட் writing எழுத்தும் braille எழுத்தும் அடிப்படையில் ஒத்தவை




braille எழுத்துக்கள் 2 dot அகலமும் 3 dot உயரமும் உடையவை.மொத்தமாக ஒரு செல்லில் 6 டொட்கள் காணப்படும்.

braille  எழுத்துக்களில் டாஸ் பயன்படுத்தப்படுவதில்லை.ஒரு செல்லில் அமைந்துள்ள டொட்களின் அடிப்படையில்தான் இலக்கங்கள் இருக்கின்றன.1,2,3 ஆகிய இலக்கங்கள் இடது புறத்தில் டொட்டாக இடப்படும்.4,5,6 வலது புறத்தில் டொட்டாக இடப்படும்.சரி கப்பிட்டல் லெட்டர்,கொமா போன்றவற்றை எப்படி குறிப்பிடுவார்கள்?
அதற்கும் வழி இருக்கின்றாது.
6 ஆவது டொட் இருக்கும் இடத்தில் ஒரு டொட் இருந்தால் அச்செல்லின் அடுத்த செல்லில் எழுதப்பட்டிருக்கும் எழுத்து கப்பிட்டல் லெட்டராகும்.4,5,6 இலும் 3இலும் டொட்கள் இருந்தால் அடுத்த செல்லில் இருப்பது எண்களாகும்.அத்துடன் "a" இல் இருந்து"j" வரையான எழுத்துக்களும் 0 இல் இருந்து 9 வரையான எண்களும் ஒரேமாதிரியானவை.

braille எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள ஒரு வரி அண்ணளவாக 40 எழுத்துக்களை கொண்டிருக்கும் braille எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள ஒரு பக்கம் இவ்வாறான 25 வரிகளைக்கொண்டது.சாதாரண ஒரு புத்தகத்தின் பக்கத்தைவிட braille எழுத்துக்களை கொண்ட புத்தகத்தின் பக்கம் பெரியது.அத்துடன்  சாதாரண புத்தகத்தின் பேப்பர் தடிப்பை விட இதன் தடிப்பு அதிகம் நிறையும் அதிகம்.இதனால் புத்தகம் பெரிய பருமனுடையதாகவே ஆக்கப்பட்டிருக்கும்.

இதை மேலும் விளக்க வேண்டுமானால் harrypotter புக் 8 பாகங்களாகத்தான் வெளிவந்தது
ஆனால் braille எழுத்துக்களால் ஆன harrypotter  புக் 14 பாகங்களாக வெளிவந்தது

braille எழுத்துக்களில் 2 வகை உண்டு

 1 .Contracted braille /Grade 2 
இதில் சொற்களாக எழுத்துவடிவங்கள் ஆக்கப்பட்டிருக்கும்.இதைத்தான் அதிகமானவர்கள் கற்கின்றார்கள்.


2 .Un contracted braille /Grade  1
இவற்றுள் எதை ஆரம்ப மாணவர்களுக்கு கற்பிப்பதுஎன்பதைப்பற்றி பல கருத்துவேறுபாடுகள் உண்டு.Un contracted braille யானது contracted braille ஐ கற்பதற்கு முக்கியமாக அவசியமானது என கருத்துக்கூறுகின்றார்கள்.ஆனால் Un contracted braille யானது  contracted braille ஐ விட அதிக நேரமெடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதில் தனித்தனி எழுத்துக்கள் சிம்போல்கல் சேர்ந்தே சொற்கள்  ஆக்கப்படுகின்றன.
அமெரிக்க வேர்ஸன் Braille இல் அண்ணளவாக 200 வரையான சுருக்கக்குறியீடுகள் உள்ளன. "and," "you", "for", "ed" போன்ற பல குறியீடுகள் காணப்படுகின்றன.

Braille ஐப்பயன்படுத்தும் விசேடதேவையுடையோர்  Braille எழுத்துக்களை தமது விரல் நினிகளின் உதவியுடன் விரல்நுனிகளால் எழுத்துக்களை தடவியே வாசிப்பார்கள்.இவர்கள் ஒரு புத்தகத்தின் பக்கத்தில் இடதுபுறமிருந்து வலப்புறம் நோக்கியே தடவிவாசிப்பார்கள்.ஆனால் எழுதும் போது வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதுவார்கள். அதாவது வலதுபுறமிருந்து இடதுபுறம் நோக்கி எழுதி முடித்ததும் எழுதிய ஒற்றையின் மற்றைய பக்கத்தை கைவிரல்  நுனியால் தடவி வாசிப்பார்கள்.
இது ஒருமுறைதான் ஆனால் இப்படிப்பல முறைகள் இருக்கின்றன.

Braille ஐ படிப்பதோ எழுதுவதோ அவ்வளவு இலகுவான காரியமல்ல.காரணம் எழுத்துக்கள்,எண்கள்,குறியீடுகள் என அனைத்துமே குறியீடாக இருப்பதுதான்.முத்லாவதாக குறியீடுகளின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும்.அடுத்ததாக எழுத்துக்களுக்கான வடிவங்களை உருவாக்கப்பழகவேண்டும்.அதற்குப்பிறகுதான் சொற்களை உருவாக்கப்பழகமுடியும்.கண்பார்வையற்ற சிறுவர்களது முதன்மைப்பாட நூல்களில் Braille பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்க விடயம்தான் ஆனால் சிறுவர்களது ஆரம்பக்கற்கைகளில் வார்த்தைகளை விளங்கிக்கொள்வதற்கு அதிகமாக படங்களையே பாடப்புத்தகங்களில் வரையப்பட்டிருக்கும்.துரதிஸ்ரவசமாக இப்படங்களால் பார்வையற்ற சிறுவர்களுக்கு எவ்விதப்பயனுமில்லை.

இதற்காக மாறுபட்ட பாடத்திட்டமொன்றை உருவாக்கினார்கள்.அதில் அதிகமாக கதைகள் இடம்பெற்றிருந்தன.ஆசிரியர்களுக்கு கற்பிப்பதற்கான விஸேட உபகரணங்களை வழங்கினார்கள்.புடைத்த உருவாமைப்பைக்கொண்ட எழுத்துக்களை வாசித்தல் எழுதலை விட புத்தகமாக உருவாக்குதல்தான் மிகவும் கடினமானது. ஒரு நாவலை புத்தகமாக வெளியிடவேண்டுமானால் இது பற்றிய அறிவுடைய ஒருவர் Braille எழுத்தில் புத்தகமாக்க வேண்டிய  பகுதியை கைஎழுத்துப்பிரதியாக எழுதவேண்டும்.இதற்கே 100 க்குமேல் நேரம்தெவையில்லை.பின்னர் இதை அவர்கள் optical character recognition (OCR) இன் உதவியுடன் ஸ்கான் செய்வார்கள்.பின்னர் புடைத்தேழுத்துக்களாக பிறிண்ட் செய்யப்படும்.

Braille யை வாசிப்பதும் சற்றுக்கடினம்தான்.அண்ணளவாக கண்பார்வையற்ற ஓருவரால் 125 தொடக்கம் 200 சொற்களை 1 நிமிடத்தில் வாசிக்கமுடியும்.ஆனால் ஒரு  college student ஆல் ஒரு நிமிடத்தில் 280 சொற்கள் வரை வாசிக்க முடியும்.கண்தெரியாதவர்கள் புத்தகங்களை audio books ஆகவே பயன்படுத்துகின்றார்கள்.

6 டொட்களைக்கொண்ட Braille எழுத்துக்களால் 63 combinations களை உருவாக்கமுடியும்.எழுத்துக்கள்,எண்கள் இவற்றுடன் குறியீடுகள் இவை எல்லாவற்றையும் சேர்த்துஎழுதினால் எல்லாம் கடினமாகிவிடும்.இதனால் பலசுருக்கக்குறியீடுகளைக்கண்டுபிடித்திருக்கிறார்கள்.விஞ்ஞான,கணித,மற்றும் இசைக்குறியீடுகள் இந்த வகையறாக்கள்தான். 63 combinations ஐ வைத்து பில்லியன் கணக்கான குறியீடுகளை உருவாக்க முடியும்.இதன் காரணமாக பலர் குழப்பங்களை சந்திக்கவேண்டிஏற்பட்டது.இதன் காரணமாக  International Council of English Braille (ICEB) ஆனது Unified English Braille ஐ உருவாக்கியுள்ளது.இது நியமமாக பயன்படுத்தப்படுகின்றது.ஆங்கிலம்பேசுகின்ற அனேகனாடுகளில் Unified English Braille ஐயே பயன்படுத்துகின்றார்கள்.ஆனால்  Britain இல் Braille Authority of Great Britain (BAUK) உருவாக்கிய சிஸ்டமே பயன்படுத்தப்படுகின்றது.


இதனால் Braille Authority of North America (BANA)  ஸ்ராண்டட் ஆன Braille கோட்களை அறிமுகப்படுத்தியது.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கோட்கள் 
  • English Braille, American edition for literary material, like novels and magazines
  • Nemeth Code of Braille Mathematics and Scientific Notation for math and science
  • Computer Braille Code
  • Braille Code for Chemical Notation
  • Music Braille Code

சில முக்கியமான இடங்களில் 6 டொட்களிற்குப்பதிலாக 8 டொட்களும் பயன்படுத்தப்படுகின்றன.உதாரணம்  ASCII கோட்.

Chinese Braille,Hebrew Braille ,Tibetan Braille என Braille இல் பல வகைகள் இருந்தாலும்.அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.பல நாடுகளில் Braille மாற்றங்களை அடைந்துள்ளது அவ்வ்ளவுதான்.ஆனால் சிலர் முற்றுமுழுதாகவே மாற்றங்களைrefreshable Braille  என்றவகையில் முயற்சிசெய்வதுதான் சிக்கலைமேலும் கூட்டும்.

 Braille ஐ அறிந்திராதவர்கள்கூட  Braille ஐ வாசிப்பதற்கான வழியை Hyung Jin Lim கண்டுபிடித்திருக்கிறார்.இந்த கருவியை கையில் அணிந்துகொண்டு

 வழக்கமாக வாசிப்பது போல் விரல் நுனியால் எழுத்துக்களை தடவியபடி

 செல்லும்போது விரல் நுனியில் இருக்கும் சென்சரினால் உருவாக்கப்படும் 

சிக்னல் bluetooth மூலமாக வாசிப்பவர் அணிந்திருக்கும் headphone க்கு

 செல்லும்.இதை அவர் ஒலி வடிவில் கேட்கமுடியும்.


Zhenwei இனால் உருவாக்கப்பட்ட கருவி.இது டச் ஸ்கிறீனைப்போல் செயற்படும்.சாதரண எழுத்துக்களை இது ஒலி வடிவில் வெளிப்படுத்தும்.குரல்மூலம் இதை செயற்படுத்த முடியும்.



Yanko என்பவரால் பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட  smartphone இதில்  தட்டச்சில்  உள்ள எழுத்துக்களை மாற்றமுடியும்.வேறு வேறு மெனுக்களை உருவாக்க முடியும் அத்துடன் மேலே குறிப்பிட்ட கருவிகளின் வசதிகளையும்  கொண்டது.




 Danni Luo வால் அமைக்கப்பட்ட பிரின்ரர்.


embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer


நன்றி : naharvu

Tuesday, October 13, 2015

வீரியம் உன் ஆத்திரம்

பார் முழுதும் பார்த்திருக்க 
பாலகன் உன் வீரம் பார் 
பரிதாபத்தின் உச்சமுன் மண்ணில் 
படைத்தவன் உமைக் காத்திடட்டும் 

நீ ஓங்கிய கைக்குள் 
அடங்கிடுமா அனியாயங்கள் 
வலியின் சுமை தாங்கிய 
வீரியம் உன் ஆத்திரம் 

யுத்த வரலாறு கற்றுத்தரும் 
வீரச் சமுகத்திலின்று 
யூதர்களால் அட்டூழியங்கள் 
வீரர்களாய் உங்கள் மரணம் 
நாளை வரலாறாகிடும்  

அத்தனையும் இழந்து 
அனாதைகளானாலும் நாளை 
சுவனத்துப் பூங்காவின் 
சொந்தக் காரர்கள் நீங்கள்தான்  

தூங்கிக் கிடக்கும் உலகமிது -மரணத்
துயில் கொள்ளத்துடிக்கிறதுன் உள்ளம் 
துணிந்து நில் தொடர்ந்து செல்
துரும்பும் உன் ஆயுதமாகும் 





Related Posts Plugin for WordPress, Blogger...