இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 31, 2011

ஈடேற்றம் தருமா புதுவருடம்.....??




வருடங்களின் எண்ணிக்கை
வருகையிலும் செல்கயிலும்
கழிந்து செல்லும் வயதுகளாகிறது


விடியாத இரவுகளும்
இருளாத பொழுதுகளுமாய் - பல
கேள்விக்குறிகளோடு வேதனைகள்


ஈழத்தேவையில் ஏங்கும் இனங்களும்
அழிவில் அகப்பட்ட ஏழைகளுமாய் -இன்னும்
ஈடேற்றத்திற்கான ஏக்கங்களோடு


அதிகாரம் கையிலிருந்தும்
அடிமையாய் ஆட்சிசெய்து
இழிவுறும் ஆட்சியாளர்கள் 

Saturday, December 24, 2011

பிரிவோடு பிரிந்திடாதே.....!!



பிரிவுகளின் ஆரம்பத்தில்
உருவாகும் வாழ்க்கைப் பாதையில்
பரிவுகளின் தேவைகளும்
உணரப்பட்டு உருமாறுகிறது


அன்பே என்றாகிய ஆதரவுறவு
அன்னம் மறந்து அன்பனின் நினைவில்
அவன் உலவிய நிழல்களோடு
உறவாடிக் காத்திருக்கிறாள்


விக்கித்த நினைவுகளை மறக்க முடியாமல்
விதியின் சுமையில் கனத்த வலிகளை
இறக்கி வைத்திட வழிதேடி
போராட்டத்துடன் பொழுதுபோக்கிறான்


குளிரின் நடுக்கமும் சூட்டின் புழுக்கமும்
உணரும் போதெல்லாம் உயிர்பிரிய
உறவானவனின் இறுக்கத்தின் ஏக்கத்தை
ஒவ்வொரு நொடியும் உணர்கிறாள்


Thursday, December 22, 2011

வாழும்போதே இறப்பதேன்.....




இளசுகளின் இன்பக்காதலை 
இன்புறச் சுவைத்திருந்தோம் 
இனியொரு பிறவியற்று - இணைந்தே 
மடிந்திடவும் நினைத்திருந்தோம் 


காதலர்களாய் வாழ்ந்த எம் 
காதலுக்கொரு பரிட்சையாய் - எம் 
செல்வங்களே எமக்கு 
பரிட்சார்த்தம் நடத்துகின்றனர் 


எம்காதலில் உருவானவர்கள் 
எமக்கும் காதலை கற்றுத்தருகின்றனர் 
இணைபிரிய மறுத்திருந்த எம்மை 
பிரித்திணைத்தொரு காதலை 
கண்டிடச்செய்கின்றனர் 

Saturday, December 17, 2011

வாழத்தகுதியற்ற... வாழ்வு


கணவனிழந்த என்தாயும் 
பசியோடழுத சகோதரங்களும் 
ஏக்கத்தோடழுதிருந்தார்கள் 
வாலிபமட்டுமே மூலதனத்துடன் 
வாழ்வளிக்க வழி தேடிநின்றேன் 


அழகுசிலையென்றார்கள் 
அந்தரத்தில் பறந்திருந்தேன் 
இளமையில் அனுபவியென்றார்கள் 
இன்பத்துடன் இணைந்திருந்தேன் 


அங்கம் மின்னுகிறதென்றார்கள் 
அனுபவித்திட பணம் பெற்றிருந்தேன் 
பணமுன் தேவையென்றார்கள் 
பக்கவிழைவு மறந்திருந்தேன் 


நிழல்களையெனக்கு காட்டினார்கள் 
நிஜங்களையெல்லாம் மறந்திருந்தேன் 
சுகமொன்று தந்தார்கள் 
சுமைகளை நானே தாங்கிநின்றேன் 

Monday, December 12, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)



வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை

அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை

ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்ததில்
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை

Wednesday, December 7, 2011

(பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்..


முல்லைப்பெரியார் அணையென்று
முனைப்புடன் மோதல்கள் ஆங்காங்கு
அரங்கேற்றம் நிகழ்ந்துவிட்டது
அரசுகளின் அசமந்தம் எங்கு
அழைத்துச்செல்லவிருக்கிறதுவோ
ஆழ்ந்து சிந்திப்பீராக


கடந்தகாலங்களில் கற்றிருக்கும்
கறுப்பு நிகள்வுகளின் கண்ணீர்கள் 
இன்னுந்தான் ஓயவில்லை 
கருத்துகளோடும் குரோதங்களோடாகும்
குதர்க்கத்தின் வடுக்களெல்லாம் 
விதைத்துவிடும் ஓர் அழிவுநோக்கி 

வீணர்களின் விவேகமற்ற செயலும் 
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும் 
வலிந்து வரளைத்துக்கொள்ளும் 
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும் 
சீர்தூக்கி சிந்திப்பீராக...

Monday, December 5, 2011

எந்த விளைவில் இதுவானது....( பறித்தெறிந்த பிள்ளை..).


அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??


மானத்தின் விளைவிதுவோ 
காமத்தின் விளைவிதுவோ 
வறுமையின் விளைவிதுவோ 
வருந்தாத மனங்களின் 
வறிய செயலிதுவோ..


உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

Thursday, December 1, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 09)


தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை

இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை

உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை




Related Posts Plugin for WordPress, Blogger...