இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, January 24, 2017

இன்று என் தலைவனில்லை சென்றுவா நிலா...



உன் பௌர்ணமி முகங்கண்டு 
என் மணாளனின் சுகங்கொண்டேன் 
திகட்டாத தித்திப்பில் திளைத்திருந்து 
தினந்தினம் இன்ப மழை கண்டிருந்தோம் 

உன் ஒளி விழாவில் 
என் மடி தலைவைத்துக் குழைந்து 
அவனளித்த ஸ்பரிசத்தில் 
மெய்மறந்த தருணமிருந்தது 

அவன்  விரல்கோதித் தலைநீவி
என் வட்டமுகம் சொட்டச்சொட்ட
முத்தச் சுகங்களை முழுதாய்க்காண 
உடனிருந்த நிலாவே - இன்று
தனிமையில் அல்லவா அழுகிறேன் 

பிரிவின் துயர் தந்து - 
பிணியின் துணைதந்து 
சென்றுவிட்டான் வெகுதூரம் 
அவனின்றிய உன்னால் 
எனக்கேது சுகமுண்டு நிலாவே....

நீ சென்றாவது சொல் 
என் நிலையின் அவலத்தை 
என் தலைவனோடு வா 
சேர்ந்து நாம் மகிழ்ந்திடலாம் 

தமிழா தங்கத் தமிழா.....



வதை செய்வதைக் கண்டு 
பதைக்கிறது உள்ளம் - என் 
சதைகளும் துடிக்கிறது 
சரிசெய்திடத் தோன்றுகிறது...

அகிம்சை வழிசெய்து - நீ
உரிமை வேண்டுமென்றாய் 
அரக்க குணம்கொண்டு - உன் 
உயிரை பறிக்கிறார்களே.... 

உன் மீது  இன்று விழுந்த அடிகளெல்லாம்  
நாளைய சரித்திரத்தின் படிகளாகட்டும் 
திரண்டெளு என்தமிழனே - இன்றே 
வெருண்டெளு என்இளைஞனே......

அவமானங்களின் அவலங்களும் 
அடிகளின் தழும்புகளும் 
ஆறியவுடன் அடங்கிடாதே...
அறிவிலிகளின் ஆட்சியதை 
அடியோடொழித்திடப் புறப்படு.....

அம்மாவென்ற சிம்மாசனத்தை வீழ்த்தி
அத்துமீறி அரங்கில் வீற்றிருக்கும் 
அசிங்கங்களைத் துடைத்திட 
ஒற்றுமை என்னும் ஆயுதமெடு - அவர்களை  
அடக்கும் வரைப் போராடு.....

வாலிபத்தின் வீரியத்தை 
ஆட்சியமைக்க வித்தாக்கு 
மேதைகளின் வளிகாட்டலில் 
மூடர்களை ஒழித்துக்கட்டி
வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பு.....

உன்னை அடிமையாக்கிய 
அருகதையற்ற ஆட்சியாளனை 
உன் புத்திக்கூர்மையில் வென்று 
உன்  சந்ததிக்கொரு வாழ்வுதரப் பாடுபடு 

தமிழனாயப் பிறந்ததைத்தவிர 
குற்றமென்ன நீ செய்தாய் 
சுத்தமொன்று செய்துவிட 
சந்தர்ப்பமும்  அவனளித்தான் 
சலனமின்றிக் காய்நகர்த்து....

ஊடகச் சக்தி உண்டு 
உணர்வுகளின் சங்கமமுண்டு 
மொத்தமாய்த் தமிழகமும் 
உன் காலடியில் 
திரண்டுவிடக் காத்திருக்கிறது 
இனமத பேதமின்றி 
மனிதம் என்ற எழுச்சிகண்டு 
மகிழும் நாளையை உருவாக்கிடு தமிழா....
என் தமிழா தங்கத் தமிழா......

Monday, January 9, 2017

ஆயுதம் தொலைத்தோம்


விழிகளில் முட்டும் கண்ணீருக்கு
விடைகள் கிட்டாத கேள்விகளுடன்
அரசியல் சாணக்கியங்களுடனான
அனாதைகளாய் எம் சமுகம்

அரசுகள் மாறிமாறி அரங்கேற்றும்
நாடகங்களில் ஒரே நடிகர்களானதில்
புளித்துப்போன வேசங்களைக் கண்டு
புளுங்கி நிற்கும் ரசிகர் பட்டாளங்கள்

இன்று நாளை விடிவு என்று - என்றுமே
இருளை மாத்திரங் கண்டு
இடிந்து போன இதயங்கள்
திசையறியாப் படகுகளாய் தத்தளிக்கிறது

கேட்ட உரைகளை மீண்டும் கேட்டு
பச்சோந்திகளின் பசப்பில் மயங்கி
தன் பாலகனின் எதிர்காலத்தையும்  மறந்த
தத்துணிவின்றிய கோழைகளாய் நாம்

எம் சமுகத்தின் காவலனான இளைஞன்
பேஸ்புக்கில் அரசியல் செய்கிறான்
சிந்தனைகளைச் சிதறச்செய்து
மந்தைகளாய் வலம் வருகிறான்

எழுவது எங்கிருந்தென்று தெரியாது
விழுந்து கிடக்கும் எம் சமுகத்தை
தூக்கிவிடப் புறப்படுங்கள்.......
தொலைந்த எம் ஆயுதம் எதுவென்று
தேடியெடுத்திட முனைந்திடுங்கள் 

கண்துடைப்புகளுக்குள் கட்டுண்டு
கண்கசக்கிக் காலில் வீழாது
கண்ணியத்துடன் தலைநிமிந்து வாழ
வழி செய்திடப் பாடுபடுங்கள் 





Related Posts Plugin for WordPress, Blogger...