இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, August 22, 2013

உணரும் குழந்தை உதித்திடட்டும்......


நீ என்னுயிரைச் சுமந்து 
பிரசவிக்கும் தருணத்திற்காய் 
காத்திருக்கும் பொழுது உன்னில் 
என் தாயின் வலி தெரிகிறது 
சகித்திட மனம் தவிக்கிறது....

ஒவ்வொரு நொடியும் 
உயிர்த்தெழும் வலியால் 
அவதிகொள்ளும் தாய் நீ 
பிள்ளையாய் நானும் இன்று 
உணர்கிறேன் கண்டு.....

குழந்தைகள் உணராத வலி 
அம்மாக்களுக்கான விதியானதில் 
உதாசீனமின்று சாதாரணமானது 
உன்னதத் தாய்க்கு ஈடுயிணை 
எம் உயிர்கொடுத்திடினும் தகுமா??

பிறப்பென்னும் பெயரில் 
பார்(உலகம்) உயிர்பெறுகிறது 
சிசுவை ஈண்றெடுத்திடத் தாய் 
அவளுயிரை பணயம் வைக்கிறாள் 
உணரும் குழந்தைகள் மட்டும் 
உலகில் பிறந்திடட்டும்....

உத்தமத்தாயின் உணர்வுகளை 
உயிருள்ளவரை மதித்திடல் வேண்டும் 
மதிக்கத் தவறும் மானிடங்களோ.. 
மரணித்தல் மேலாகிவிடும் 

Wednesday, August 7, 2013

பாலைவனத்துப் பெருநாட்கள்.....


மலரும் வருடங்களை 
மகிழ்விக்க வரும் 
திருநாட்களில் பெருநாட்கள் 
எம் அருட்கொடைகள்.

பசித்திருந்து தாகித்திருந்து 
நோன்பு நோற்றோருக்கு 
வெகுமதியாய் மலரந்து 
மகிழ்விக்கிறது இன்நாள் 

உறவுகள் பிரிந்து 
பல துறவுகள் கடந்த 
தனிமை வாழ்வில் 
தாகமதிகம் இன்நாளில் 

எத்தனை பெருநாட்கள் 
இதுநாள் வரை கடந்தும் 
தனிமையில் கிடந்த நாட்கள் 
வெறுமையில் முடிந்தன 

நாளையும் மலர்கிறது 
நன்நாளாய் ஒரு பெருநாள் - ஆனால் 
பாலைவனத்துப் பெருநாட்கள் 
பாலைவனங்களாய் எம் வாழ்வில் 

தேசங்கள் கடந்து பாசங்கள் தேடும் 
தவிப்போடுள்ள பெருநாட்களை 
தரமுள்ளதாய் மாற்றிட..... 
வல்லோன் துணை அனைவருக்குமாய் 
கிடைத்திட பிரார்த்திக்கிறேன். 




Related Posts Plugin for WordPress, Blogger...