இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 12, 2013

அழுகையின்றி அழுகிறேன்


விட்டுச்சென்றாய் விதியின் வழியே
விடியும் வரை உறக்கமில்லை - என்
விழிகளிலும் ஈரமின்றி - வாழ்வின்
விடியலுக்காய் காத்திருக்கிறேன்

விண்ணில் உலாவந்த
விடிவெள்ளியாய் ஆனதினால்
விட்டில் பூசியாய் என் வாழ்வில் நீ
விதியின் வரைவில் வீழ்ந்தது நான்

விம்பமாய் காண்பித்த வாழ்வில்
வியந்துநான் ஐக்கியமாகியிருந்தேன்
விடுபட்ட இடைவெளிகள்
விடைகளற்றுத் தேங்கிக்கிடக்கிறது

விஞ்ஞானம் வெண்றிராத மரணம் - எனை
வியப்புக்குள்ளாக்கிவிட்டது - உன் மரணத்தில் 
விழுதுகளற்ற மரமாய் - மண்ணில்
சாய்ந்துவிட்டேன் பாதியில் 

எம் கொடியில் மலரந்த இரு மலர்களும் 
உம் நொடிப்பொழுது மறைவில் 
வாடிய வதனங்களுடன் வல்லோனை 
வாஞ்சையுடன் வேண்டுகின்றனர் 

ஆதரவற்ற ஆதரவுகளுடன் 
ஆனாதைகளாய் ஆகிவிட்டோம் 
அல்லும் பகலுமிங்கு அஷ்தமனமாகிறது 
ஆனவைகளத்தனையும் அறிந்தவனின் 
அமைதியான செயலென்று 
அழுவதை மட்டும் நிறுத்தியிருக்கிறேன் 




Related Posts Plugin for WordPress, Blogger...