இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 24, 2016

தலைவர் ஹக்கீமை முனாபிக் என்கிறார்களே.....


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே........

நீண்ட இடைவெளியின் பின்னர் வெகு நாட்களாய் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற அட்டாளைச் சேனை தேசியப்பட்டியல் விடயம் பற்றிய எனது ஆதங்கத்தினை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். எம் சமுகம் சார்ந்து ஒரு விடயம் பேசப்படுகின்ற போது அது சம்பந்தமான குறைநிறைகளை ஆய்ந்தறிந்து சரியான விடயங்களை மாத்திரம் கருத்துகளாக பதிவேற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக அமையும். இதை அனைவரும் பின்பற்றுவோமானால் எம் ஊரின் மானமும் எம் சமுகத்தின் ஒழுக்கமும் பேணப்படும் என்பதில் ஐயமில்லை, இதை தயவு செய்து தற்கால இளம் எழுத்தாளர்களும் சமுக வலையத்தளங்களை பாவிப்பவர்களும் பின்பற்றுமாறு அன்பான வேண்டுகோளை முதலில் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த தேர்தல் காலத்து அட்டாளைச் சேனையில் தபால் நிலையத்துக்கு அருகாமையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தலைவர் ஹக்கீமால் பேசப்பட்ட தேசியல் பட்டியில் விடயம் இன்று பேசு பொருளாகி அனைவர் மத்தியிலும் சலசலப்பினை ஏற்படுத்திவிட்டிருக்கிறது அந்த மேடையில் தலைவர் வாக்குறி அளித்தபோது “அல்லாஹ் அக்பர்” என்று ஆரவாரப்பட்ட ஆயிரக்கணக்கானோர்களின் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன் இது சம்பந்தமாக இது நாள்வரை தலைவராலோ உயர்பீட உறுப்பினர்களாலோ எந்தவித முடிவுகளும் அறிவிக்கப்படாத போது பலரும் அவரவர் பாணியில் சமுக வலையத்தளங்களில் கருத்துப் பரிமாற்றங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இதை அனைவரும் பார்த்தும் கேட்டும் கண்டு கொள்ளாது அதன்போக்கில் விடபப்பட்டடிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற மிகப்பெரிய சக்கி இன்று பலம் குன்றிய ஒரு விடயமாக மறைவிலும் வெளிப்படையாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம் அதற்கான சான்றாக தலைவருக்கு எதிரான விவாதங்கள் மற்றும் அனைத்து ஊர்களிலும் எழுகின்ற எதிர்ப்பலைகளைக் கவனிக்கின்ற போது புரிந்து கொள்ளலாம் அடிப்படைப் போராளிகள் கூட வெறுத்தொதுக்கின்ற நிலையினை அவதானிக்க முடிகிறது காலம் பதில் சொல்லுமென்று காத்திருந்தவர்கள் கூட கைவிடும் நிலை உருவாகிவிட்டது
மாற்றான் எம் தலைவருக்கும் கட்சிக்கும் ஏசியபோது எழுத்திலும் நேரடியான எதிர்ப்பிலும் வாதடிய என்னைப்போன்ற போராளிகள் கூட தற்போது மௌனிக்கும் நிலைக்கு சமகால நடவெடிக்கைகள்  அழைத்துச்செல்கிறது

அட்டாளைச் சேனை விடயத்தில் என்னைப் போன்றவர்களின் பார்வை என்னவனில் தலைவரால் யாருக்கு தேசியப்பட்டியில் கொடுத்தாலும் அதில் எந்தவித நன்மையையும் நாங்கள் அடையப்போவதில்லை இவ்வாறான பகிரங்கமான வாக்குறிதிகள் கூட மறுக்கப்படுகிறதே என்பதுதான் மனங்களில் அசைபோடப்படுகின்ற விடயமாக இருக்கிறது இந்த நிலையிலும் எந்த முடிவுக்கும் யாரும் வந்துவிட முடியாது இன்னும் காலமிருக்கிறது தலைவருக்கான நெருக்கடிகள் பல ரூபத்தில் இருக்கும் என்பதைக் கூட அறிந்தவர்கள் நாங்கள் மிக விரைவில் இதற்கான தீர்வினை முன்வைத்து இந்த விடயத்திற்கு முற்றுப் புள்ளியிடுங்கள் என்பது மட்டுமே எங்களது வேண்டு கோள். அது மாத்திரமல்லாது இப்போது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள் வெறுப்புகளைக் கழைந்து ஒற்றுமை நோக்கிய பயணத்தினை இனியாவது ஆரம்பியுங்கள் இல்லையென்றால் எதிர்காலம் இருள்மயமாகும் என்பது உறுதி செய்யப்படும் தயவு செய்து சிந்தியுங்கள் 

முனாபிக்கென்று தூற்றுகின்ற சகோதரங்களே இது நாள்வரை பொறுமையுடன் இருந்து விட்டோம் இனியும் இருந்து பார்ப்போம் எமது மார்க்கம் கற்றுத்தந்த சகிப்புத்தன்மையினை கடைப்பிடிப்போம் இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே எமக்கு நடந்தேறும் அனைத்தும் சமநிலைபெற்று எம் சமுகத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் வீண்ணான வார்தைப்பிரயோகங்களை சமுக வலையத்தளங்களில் பாவிக்காதீர்கள் நாம் அனைத்திலும் ஒழுக்கமானவர்கள் என்பதை உறுதி செய்யுங்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருங்கள் எமது ஒவ்வொரு விடயமும் நன்மைகளாக அமைந்து நாளை இறைவனின் சன்னிதானத்தில் உயர்ந்தவர்களாவோம் 

இறைவன் எமது எண்ணங்களையும் செயல்களையும் நன்மையுடயதாக மாற்றுவானாக ...........ஆமீன் ஆமீன் 

நேசமுடன் ஹாசீம்  





Related Posts Plugin for WordPress, Blogger...