அலங்காரமில்லாது
அனுதினமும் மகிழ்ந்திட
அமைதியாக இன்னாளை
அன்போடு போற்றுகிறேன்
எனையாளும் அரசியாய்
என்னை வசீகரித்த
எழிலரசியே நீ
எனக்காக அவதரித்த தினமானதே
உன் அரிய குணத்தில்
உத்தமியாய் எனைக்கவர்ந்து
உலகம் உன்னாலென
உணர்த்திவிட்டாய் எனை அடைந்து
இன்று பிறந்த தினமென்று
இவ்வுலகை யாழும் தினமென்று
இல்லறம் நாடத்துடிக்கிறது
இருந்தும் தூரம் எமை தடுக்கிறது
அன்பானவளே உனை
அகிலம் போற்ற என்னுள் ஏந்தினேன்
அன்புக்கடலாய் நீயிருக்க
அதில் நான் தத்தளிக்கிறேன்
இன்னாளென்ன உனக்கு
என்னாளும் திருநாளாய்
இறைவனின் துணையுடன்
எப்பொழுதும் மலர்ந்திட வேண்டுகிறேன்
வரிகள் மட்டும் வாழ்த்தாகிட
வானகமும் மண்ணககும் சாட்சியாகிட
எம் காதலுலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே
என்றும் நீ சிறந்திட வாழ்த்துகிறேன்