இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 2, 2010

ஈகரைத்தாய்...

உலகம் கண்ட
உன்னதத் தாய்மைகளுள்
உயிரற்ற தாயென
உறவு கலந்த ஈகரைத்தாய்

உமை ஈன்ற சிவா
உனக்குத்தாய்
உனை அடைந்த
உறவுகளுக்குத் தாயாக நீ

எத்துயரில் நீயிருந்தும்
எழுந்து வரவேற்று
எழிதாகப் பாசமழை
எப்பொழுதும் வீசுகிறாய்

உன்தாயின் போற்றுதலும்
உடன் பிறப்பின் பராமரிப்பில்
உளமகிழும் நீ
இன்முகத்தில் என்னாளும்

தாயன்பைத்தேடும் அனாதைக்கும்
துணையன்பைத்தேடும் அபலைக்கும்
உன் அரவணைப்பில்
சாந்தமாய் திழைக்கின்ற சுகம்

ஒரு முகம் உனக்கிருந்தும்
உலகம் முழுதும் பார்க்கிறாய்
உனைக்கண்ட முகம் சுழித்தாலும்
சழைக்காத இன்முகம் உன்னதுதான்

தமிழ் தாகத்தின்
உண்மை உணர்வில்
உனையடையும் எச்சேயும்
உனையகலா வசியம் செய்கிறாய்

தாயே.... நீயின்றிய
சில நொடிகளில்
உன் மீதான காதலை
உணரச்செய்தவள் நீ

உலகம் முடியும் வரை
அழிந்திடா அன்னையே
உன் தயவில் என்
உலகவலம் தினமும்தான்

குறிப்பு: என்னைப்போன்ற பல்லாயிரம் கவிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தளமான ஈகரையைப்பற்றி அதன் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதையிது இதனை எனது பக்கத்திலும் நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் ஆனந்தம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சசிகுமார் said...

arumai nanba

பவள சங்கரி said...

நன்றாக இருக்கிறது.....ஹாசிம்......வாழ்த்துக்கள்.

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்

மிக்க நன்றி நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...