இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 8, 2010

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்..

மாதம் ஒன்று நோன்பிருந்து
மாறா பக்தியும் தினமடைந்து
மாசுகள் பல அகற்றிட வேண்டி
மாற்றி அமைத்த ஈமானுடன் -புதிய
மாந்தர்களாய் - மலரும்
மாதத்தின் முதல் நாள் எங்கள் திருநாள்

நோன்புப்பெருநாள் - ஏழைகளின்
நோவினை தீர்க்கும் நாள்
நோன்பின் பிரதிபலன்களாய் - வறியவர்களை
நோக்கி வாரி வழங்கும் கொடைநாள்

மனிதனாய் பிறந்ததில்
மனிதம்களை சமமாய் நோக்கி
மகிழ்ச்சியுடன் தர்மம் அழித்திட
மலரும் நன் நாள்

பகைமைகளகற்றி நல்ல
பண்புடன் உறவுகளை நோக்கி
பரிவுடன் அளவளாவி
பசி தீர்க்கும் உன்னத நாள்

கண்டிப்புடன் (பித்ரா) ஒரு தலைக்கு
கணக்கிட்டு செல்வங்கள் சேர்த்து
கட்டுக்கோப்பினை வலியுறுத்தி
கனிவுடன் அழித்திடும் நாள்

புத்தாடையுடன் பாலர்களும்
புத்துணர்வுடன் இளைஞர்களும்
புதுப்பொலிவுடன் உறவுகளுமாய்
புள்ளரிக்கும் புதுமை நாள்

மலரும் இத்திருநாளை
மகிழ்வுடன் வரவேற்று
மனித அவலங்கள் தீர்ந்திட பிரார்தித்து
மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய்
மனதாற ஆர்ப்பரித்து
மகிழ்ந்திட என் பிரார்த்தனையுடனான வாழ்த்துகள்


நண்பர்கள் வாசகர்கள் ஊக்குவிப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் என் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகள்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

சசிகுமார் said...

ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்

தங்களுக்கும் உரித்தாகட்டும் மிக்க நன்றி நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய நண்பர் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள்...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...