இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 9, 2010

என்னவளின் பிறந்தநாள்

அலங்காரமில்லாது
அனுதினமும் மகிழ்ந்திட
அமைதியாக இன்னாளை
அன்போடு போற்றுகிறேன்

எனையாளும் அரசியாய்
என்னை வசீகரித்த
எழிலரசியே நீ
எனக்காக அவதரித்த தினமானதே

உன் அரிய குணத்தில்
உத்தமியாய் எனைக்கவர்ந்து
உலகம் உன்னாலென
உணர்த்திவிட்டாய் எனை அடைந்து

இன்று பிறந்த தினமென்று
இவ்வுலகை யாழும் தினமென்று
இல்லறம் நாடத்துடிக்கிறது
இருந்தும் தூரம் எமை தடுக்கிறது

அன்பானவளே உனை
அகிலம் போற்ற என்னுள் ஏந்தினேன்
அன்புக்கடலாய் நீயிருக்க
அதில் நான் தத்தளிக்கிறேன்

இன்னாளென்ன உனக்கு
என்னாளும் திருநாளாய்
இறைவனின் துணையுடன்
எப்பொழுதும் மலர்ந்திட வேண்டுகிறேன்

வரிகள் மட்டும் வாழ்த்தாகிட
வானகமும் மண்ணககும் சாட்சியாகிட
எம் காதலுலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே
என்றும் நீ சிறந்திட வாழ்த்துகிறேன்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

சசிகுமார் said...

en indiliyil inaikkavillai

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இதயபூர்வமான தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளை சகோதரிக்கு தெரிவிக்கவும்...

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...