இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 24, 2016

தலைவர் ஹக்கீமை முனாபிக் என்கிறார்களே.....


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே........

நீண்ட இடைவெளியின் பின்னர் வெகு நாட்களாய் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற அட்டாளைச் சேனை தேசியப்பட்டியல் விடயம் பற்றிய எனது ஆதங்கத்தினை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். எம் சமுகம் சார்ந்து ஒரு விடயம் பேசப்படுகின்ற போது அது சம்பந்தமான குறைநிறைகளை ஆய்ந்தறிந்து சரியான விடயங்களை மாத்திரம் கருத்துகளாக பதிவேற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக அமையும். இதை அனைவரும் பின்பற்றுவோமானால் எம் ஊரின் மானமும் எம் சமுகத்தின் ஒழுக்கமும் பேணப்படும் என்பதில் ஐயமில்லை, இதை தயவு செய்து தற்கால இளம் எழுத்தாளர்களும் சமுக வலையத்தளங்களை பாவிப்பவர்களும் பின்பற்றுமாறு அன்பான வேண்டுகோளை முதலில் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த தேர்தல் காலத்து அட்டாளைச் சேனையில் தபால் நிலையத்துக்கு அருகாமையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தலைவர் ஹக்கீமால் பேசப்பட்ட தேசியல் பட்டியில் விடயம் இன்று பேசு பொருளாகி அனைவர் மத்தியிலும் சலசலப்பினை ஏற்படுத்திவிட்டிருக்கிறது அந்த மேடையில் தலைவர் வாக்குறி அளித்தபோது “அல்லாஹ் அக்பர்” என்று ஆரவாரப்பட்ட ஆயிரக்கணக்கானோர்களின் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன் இது சம்பந்தமாக இது நாள்வரை தலைவராலோ உயர்பீட உறுப்பினர்களாலோ எந்தவித முடிவுகளும் அறிவிக்கப்படாத போது பலரும் அவரவர் பாணியில் சமுக வலையத்தளங்களில் கருத்துப் பரிமாற்றங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இதை அனைவரும் பார்த்தும் கேட்டும் கண்டு கொள்ளாது அதன்போக்கில் விடபப்பட்டடிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற மிகப்பெரிய சக்கி இன்று பலம் குன்றிய ஒரு விடயமாக மறைவிலும் வெளிப்படையாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம் அதற்கான சான்றாக தலைவருக்கு எதிரான விவாதங்கள் மற்றும் அனைத்து ஊர்களிலும் எழுகின்ற எதிர்ப்பலைகளைக் கவனிக்கின்ற போது புரிந்து கொள்ளலாம் அடிப்படைப் போராளிகள் கூட வெறுத்தொதுக்கின்ற நிலையினை அவதானிக்க முடிகிறது காலம் பதில் சொல்லுமென்று காத்திருந்தவர்கள் கூட கைவிடும் நிலை உருவாகிவிட்டது
மாற்றான் எம் தலைவருக்கும் கட்சிக்கும் ஏசியபோது எழுத்திலும் நேரடியான எதிர்ப்பிலும் வாதடிய என்னைப்போன்ற போராளிகள் கூட தற்போது மௌனிக்கும் நிலைக்கு சமகால நடவெடிக்கைகள்  அழைத்துச்செல்கிறது

அட்டாளைச் சேனை விடயத்தில் என்னைப் போன்றவர்களின் பார்வை என்னவனில் தலைவரால் யாருக்கு தேசியப்பட்டியில் கொடுத்தாலும் அதில் எந்தவித நன்மையையும் நாங்கள் அடையப்போவதில்லை இவ்வாறான பகிரங்கமான வாக்குறிதிகள் கூட மறுக்கப்படுகிறதே என்பதுதான் மனங்களில் அசைபோடப்படுகின்ற விடயமாக இருக்கிறது இந்த நிலையிலும் எந்த முடிவுக்கும் யாரும் வந்துவிட முடியாது இன்னும் காலமிருக்கிறது தலைவருக்கான நெருக்கடிகள் பல ரூபத்தில் இருக்கும் என்பதைக் கூட அறிந்தவர்கள் நாங்கள் மிக விரைவில் இதற்கான தீர்வினை முன்வைத்து இந்த விடயத்திற்கு முற்றுப் புள்ளியிடுங்கள் என்பது மட்டுமே எங்களது வேண்டு கோள். அது மாத்திரமல்லாது இப்போது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள் வெறுப்புகளைக் கழைந்து ஒற்றுமை நோக்கிய பயணத்தினை இனியாவது ஆரம்பியுங்கள் இல்லையென்றால் எதிர்காலம் இருள்மயமாகும் என்பது உறுதி செய்யப்படும் தயவு செய்து சிந்தியுங்கள் 

முனாபிக்கென்று தூற்றுகின்ற சகோதரங்களே இது நாள்வரை பொறுமையுடன் இருந்து விட்டோம் இனியும் இருந்து பார்ப்போம் எமது மார்க்கம் கற்றுத்தந்த சகிப்புத்தன்மையினை கடைப்பிடிப்போம் இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே எமக்கு நடந்தேறும் அனைத்தும் சமநிலைபெற்று எம் சமுகத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் வீண்ணான வார்தைப்பிரயோகங்களை சமுக வலையத்தளங்களில் பாவிக்காதீர்கள் நாம் அனைத்திலும் ஒழுக்கமானவர்கள் என்பதை உறுதி செய்யுங்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருங்கள் எமது ஒவ்வொரு விடயமும் நன்மைகளாக அமைந்து நாளை இறைவனின் சன்னிதானத்தில் உயர்ந்தவர்களாவோம் 

இறைவன் எமது எண்ணங்களையும் செயல்களையும் நன்மையுடயதாக மாற்றுவானாக ...........ஆமீன் ஆமீன் 

நேசமுடன் ஹாசீம்  

Saturday, October 29, 2016

எப்போது உணர்வாய்......


நித்தம் உன் சித்திரவதையில்
செத்துவிடத் தோன்றுதடி....
சித்தம் உன் காலடியிலான என்னை
பித்தமென்று உதறுகிறாய்

நிகள்வுகளின் நிளல்களில்
நிஜங்களையல்வா தொலைக்கிறாய்
சத்தியம் உணர மறுத்து
சலனங்களை ஏற்படுத்துகிறாய்

சந்தேகப் பேய் உன்னுள்
மெத்தையிட்டு உறங்குகிறது
தாலாட்டுப் பாடியதை உன்மடியில்
தங்கவைத்திருக்கிறாய்....

உன் நியாயப் பார்வைக்குள்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வித்தியாசம் தெரியவில்லை - ஆதலால்
தீயொன்றை மூட்டிக்கொண்டிருக்கிறாய்

 நீ உன் உண்மைக் காதலால்
கட்டிவைத்திருக்கின்ற
வாழ்கை என்னும் அழகிய மாளிகையை
உன் கைகொண்டு எரிக்க ஆரம்பித்திருக்கிறாய்

கற்பனையில் செய்யாத குற்றங்களை
என் மீது சுமத்திச் சிறைவைக்கிறாய்
உன் தண்டனைக்குள் அகப்பட்டுவிட்ட என்னை
இழந்த பின்னர் உன் தவறில் உணர்வாய்

Monday, July 18, 2016

கடலோரத்து மணலுக்கான எனது வாழ்த்து.......

கவிஞர்களை ஈன்றெடுத்த பாலமுனை
என்றோ உன்னையும் கவிஞனாய் ஈன்றிருந்தது
தனித்துவப் புலமையாய் உன் பரிணாமத்தால்
எம் தாய் மண்ணுக்கு என்றும் பெருமிதமே

நாம் கற்றிருந்தது ஒரே பாசறையானாலும்
எமை இரு வேறு திசைகளில் பயணிக்கச்செய்த
விதியின் சதுரங்கத்தில் கவித்துவம் என்னும்
ஒரு பாதை எமை மகிழ்வித்திருக்கிறது தோழா.....

தட்டுத்தடுமாறிய வாழ்வில் துணிந்து திசைதேடி
முனைந்து முத்தெடுத்து இன்று உன் சொத்தாய்
கடலோரத்து மணலைக் கையிலேந்தி நிற்கிறாய்
இக்காலத்தின் வெற்றியாளன்நீ வாழ்க வாழ்க!

இம் மணலின் அருமை போற்றிட
தமிழ் அறிஞர்கள் கூடிநிற்கும் வேளையில்
எமைப் படித்திடும் உள்ளங்களுக்கும் மகிழ்வுதர
என் மன முற்றத்தில் உண் மணலைத் தூவியிருக்கிறேன்

நல்லதோர் சமுகம் நோக்கிய படைப்பாளியாய்
சுமைகளேந்திய சொற்களால் செப்பனிட்டு
சமுகக் குறைகளாய்ந்திடும் கவிதைகளை
தன்னகத்தே கொண்ட மணலை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்

சொற்ப வாழ்நாளில் சுடர்விடும் நன்னறங்களாய்
காலத்தால் அழியாத தமிழ்த்தொண்டாய்
இலக்கியப் பாதையில் விளக்கவுரைகளாய்
உம் படைப்புகளும் பதிவாகிட மனதாற வாழ்த்துகிறேன்

அனைவரும் கூடிக் குலாவும் கடலோரத்து மணல்போல்
அனைவர் மனதையும் கொள்ளைகொண்டதாய் அமைந்த
உன்னால் உருவாக்கிய இம் மணல் மீதும்
கலந்து மகிழும் சான்றோரையும் போற்றி வாழ்த்துகிறேன்.
நன்றிகள்.



நண்பன் முஹாவின் கவிதை நூலுக்கான என் வாழ்த்து என்றோ எழுதி சேமித்திருந்தேன் தமதமாய் பிரசுரித்தாலும் உள்ளத்தின் வெளிப்பாடு என்றும் உண்மையாய் அமைந்திருக்கிறது என்பது திண்ணம். நன்றிகள்

Wednesday, June 8, 2016

வந்ததெம் றமழான்......!!!


பசித்திருந்து தாகித்திருந்து 
பகலிரவாய் பிரார்த்தித்து 
நோன்பு நோற்று நன்மை பெற்று 
சுவனத்து வாயல்களடைந்திட 
வந்ததெமக்கு றமழான் 

நாட்களின் நகர்வுகளோடு 
வந்தவாறு செல்கிறது 
வரவுகளெமக்கு எதுவானது 
முடியுமுன் முனைந்து 
அடைந்திடுங்கள் வெகுமதிகளை 

வேலைப்பளுவின் சுமையும் 
வேதனைதரும் வெயிலும் 
சோதனைகளாய் அமைந்து 
றமழானோடு யுத்தமாக்கி
தியாகிகளாய் வடிவமைத்திருக்கிறது 

தனிமையின் துயரும் 
தயவுகளின் கோர்வைகளும் 
இத்தரணி வெறுக்கச்செய்கிறது 
பிறப்பில் நல்மாந்தராகி 
இறப்பிலாவது சுவனமெய்திடனும் 

வரம் தரும் றமாழானில் 
வளம் தர இறைவனை வேண்டி 
வறியதெம் வாழ்வகற்றி 
வெற்றியாளர்களாய் அவன் முன்னில் 
ஒன்று சேர்வோம் நாளை மறுமையில் 

Tuesday, May 24, 2016

உமை மாற்றாத அனர்த்தம்


உணர்வால் உயர்ந்தவன் 
கொடையால் மகிழ்ந்தவன் 
கோடிகோடியாய் கொட்டித்தர 
ஏழனம் செய்கிறான்  உலோபி 

பதுக்கலில் பலசாலியாய் 
சுறண்டலில் புத்திசாலியாய் இருந்தவன்
கொடுத்தல் கண்டு பொறாமை கொண்டு 
கொச்சைப்படுத்தும் வாதம் கொள்கிறான் 

கண்டாயா உன் கண்முன்னே 
இவ்வுலகமது நிச்சயமற்றது 
நின் வாழ்க்கையதுவும் நிரந்தரமற்றது 
நல்லறம் நோக்கி நீ வாழப்பழகிடு 

செல்வமென்று சுகங்கண்டு 
சுற்றத்து அனர்த்தமும் உமை 
மாற்றவில்லை மனிதனாய் 
உயிர் சிக்கும் வரை காத்திருக்கிறாயா??

எண்ணங்களையும் அறிந்திடும் இறைவன் 
கேள்விகளோடுன்னை காத்திருக்கிறான் 
எதிர்பார்ப்பற்ற உதவிகளோடு மட்டும் 
உயரிய சுவர்க்கம் அடைந்திடு 

ஜனனமும் மரணமும் 
இறைவனின் தீர்ப்பில் நிகழ்வது 
இடைப்பட்ட வாழ்வு மட்டும் 
எம் விதியின் எழுதுகோல்கள் - உடனே
எது வென்று எழுதிவிடு   

Thursday, May 19, 2016

காத்திடு எங்கள் தேசத்தை


அனர்த்தங்களின் அழிவுகளால் 
பாமரர்களின் பரிதவிப்புகள் 
வல்லவனே யா அல்லாஹ் 
காத்திடு எங்கள் தேசத்தை 

சக்தியற்ற இம் மானிடனுக்கு 
உன் சிறு அசைவும் பேரிடியாகும் 
இயற்கையைப் படைத்த உன்னால் 
இயக்கங்களையும் நிறுத்திட முடியும் 

உன் நினைவின்றித் துதிமறந்து 
தன் கடமை மறக்கின்ற மாந்தருக்கு 
ஆங்காங்கு நினைவூட்டி - நீ
இருக்கிறாய் என்பதை உணர்த்துகிறாய் 

உணர மறுக்கும் மனிதனோ 
தான் வாழ்ந்தால் போதுமென்று 
தூங்குவதாய் துயில்கொள்கிறான் 
தனக்கும் நாளை உண்டென மறந்தவனும் 
கேளிக்கைகளோடு நடனமாடுகிறான் 

அருளாளனே யாரப்பே 
இம் மனிதர்களை மன்னித்தருள்வாயாக 
உன் தயவின்றி எதுவுமில்லை 
உன்னிடமே மண்டியிட்டுக் கேட்கிறோம் 
காத்திடு எங்கள் தேசத்தை 

Friday, May 13, 2016

நித்திரையும் அவளும்





வேதனை தரும் இரவுகள்
என்னை சிறைவைத்திருக்கிறது
சோதனைக் காலமாய் என் வாழ்வு
சுகமான தூக்கம் தேடி அலைகிறது 

பதமான பஞ்சணை மெத்தையுண்டு
இதமான தென்றலின் துணையுமுண்டு
தூக்கம் மட்டும் தூர நிற்கிறது  தொடரும் 
துக்கம் மட்டும் துணை வருகிறது 

நித்திரை செய் மனமே என்று 
நிந்தித்து நிலை தடுமாறுகிறேன் 
மந்திரித்து மாத்திரை தர
மாது அவளும் மறுத்துவிடுகிறாள் 

போதை தரும் பேதையானவள் 
வேதனை தரும் வலிகளானாள் 
உறக்கம் மட்டும் அவளாலின்றி 
உலரந்து கிடக்கிறதென் வாழ்வு  

என் வாழ்வை ஆக்கிரமித்திருக்கும் 
நித்திரையும் அவளும் ஒன்றுதான் 
அவளின்றி உள்ளம் தடுமாறி 
நித்திரையின் வாயிலாக நிந்திக்கிறாள் 

Thursday, April 14, 2016

வயதென்பது வரமா??


வறண்ட வயதுகளிங்கு 
வெருண்டோடுகிறது
வாலிபத்தின் அந்தமும் 
முதிர்வின் தொடக்கமுமாய் 
வயதுகளுக்குள் போராட்டம் 

சாதித்தவைகளைத் தேடி
சோதிக்கும்  நாட்களாக்கி 
விடைதேடும் வேதனையில் 
இழந்தவைகளின் பட்டியல் 
இறந்தாலும் தீரந்திடாது  

சுடர்விடும் மெழுகாய்த் தானுருகி 
சொந்தங்களுக்கு சுகமளித்தபோதும்  
சுற்றும் முற்றும் சுவர்களின் நடுவில் 
சுகமின்றித் தணலாய் எரிகிறது மனம் 

கட்டியவளையும் காத்திருக்கச்செய்து 
தொட்டில் கண்மணிகளையும் 
எதிர்பார்த்திருக்கச்செய்து 
திருப்த்தியற்ற வாழ்வில் 
நிதமும் திண்டாட்டந்தான் 

உலகத்து ஜனனத்தில் 
கணக்கிடப்படாத வயதுகளை
கருத்திலெடுத்து என்னபயன் 
உள்ள காலம் வரை - அனைவரதும் 
உளம் மகிழ வாழ்ந்திடணும் 

Thursday, March 31, 2016

இஸ்லாத்தின் பார்வையில் APRIL FOOL

பொய் சாட்சி கூறல்ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக்  கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர்.
 இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
 அபூபக்ரா (ரலி) கூறியதாவது:
"பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
 நூல்: புகாரி 5976  முஸ்லிம் 126
ஏமாற்றுதல்
➖➖➖➖➖➖➖➖➖
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள்
இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும்.
உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
நூல்கள்: முஸ்லிம் 147
திர்மிதீ 1236
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6178
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும்.
நூல்: முஸ்லிம் 3271
முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.
கேலி செய்தல்
➖➖➖➖➖➖➖➖➖
 மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர்.
இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம்
(ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் 
பட்டுள்ளது
அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர்.
(இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள்.
அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
அல்குர்ஆன் 2:212
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர்.
அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
 அல்குர்ஆன் 9:79
இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான்
எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இழிவாகக் கருதுவது
➖➖➖➖➖➖➖➖➖
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்?
ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்?
என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள்
எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான்.
நூல்: புகாரி 10, 6484
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன்
ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மை விசுவாசிகளாக வாழ அருள் புரிவானாக.
நன்றி.
இனையம்.

Sunday, March 20, 2016

ஹசன் அலி சேர் அவர்களே சற்று நில்லுங்கள்.....


பெருமதிப்புக்குரிய ஹசன் அலி சேர் அவர்களுக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹ்

நீங்கள் வளர்த்தெடுத்த பல்லாயிரம் போராளிகளின் சார்பாக அதன் அடிப்படை உரிமையுடன் சில விடயங்களை பரிமாறிக்கொள்ள நாடுகிறோம்.  
பாலமுனையில் இடம்பெற்ற மகாநாட்டில் உங்களைக் காணததையிட்டு பெரும் ஏமாற்றம் அடைந்தோம். அதையொட்டியதாக தலைவர் ஹக்கீம் அவர்களின் உரையின் சாடல்களில் ஒரு பெரும் ஊடல் உங்களுக்குள் இருப்பதாக உணர்ந்தோம். உங்களுக்குள் இருக்கின்ற மனக்கசப்புகள் பிரச்சினைகள் என்ன என்பதை நாங்கள் அறிந்திட வாய்ப்பில்லை அவைகளை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பது எங்களது முதல் விண்ணப்பம். 

எமது முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் இத்தனை காலம் இணைந்து செயல்பட்ட நீங்கள் மரணிப்பதும் அதனோடுதான் இருக்கவேண்டும் என்று ஆவல்கொள்கின்றோம் உங்களின் மரணத்தின் பின்னர் துரோகி என்ற பட்டம் சூட்டப்படாது  தியாகி என்று அழைத்திட நாடுகின்றோம். மறைந்த எம் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் வழியொட்டி தியாகத்தோடு செயல்பட்ட நீங்கள் பல வழிகளில் கௌரவிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இப்போது இருக்கின்ற சுயநலக் காரணங்களை முன்வைத்து விலகிச்செல்வீர்களானால் அது மிகப்பெரும் அழியாத தழும்பாக பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. எமது கட்சியின் வரலாற்றில் எத்தனை துரோகிகளை அடையாளங்கண்டிருக்கும் நீங்கள் அவர்களின் வரிசையில் நீங்களும் சேர்நதிடாதீர்கள் என வினயமாக வேண்டிநிற்கிறோம்.  

எமது தாரக மந்திரம் ஒற்றுமை அதற்குப் பங்கம் உங்கள் வாயிலாகவும் ஏற்றபடுகிறதே என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உங்களுக்குத் தெரியும் அடிப்படைப்போராளிகளாக எம் பிரதேசங்களில் வலம் வருகின்ற அனைவரும் அதே நிலையில் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் .கவனம் செலுத்தப்படாத அபிவிருத்திகளாலும் கரிசனை காட்டப்படாத தொழில் வாய்ப்புகளாலும் மாற்றமில்லாத வாழ்வாதார நிலைகளோடு தின்பது பாதி தின்னாதது மீதியென தியாகிகளாகவே மாற்றங்களில்லாத வாழ்வோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தில் கட்சி விட்டு கட்சி மாறி சுயநலத்தை நோக்காகக்கொண்டவன் சுகமாக வாழ்கிறான் இன்று இல்லை நாளை எம் சமுகத்திற்கு விடிவுகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அத்தனையையும் குழிதோண்டிப் புதைப்பது போல் உங்களைப்போன்ற எங்களது தந்தையர்களின் செயலில் இவ்வாறான மாற்றங்களைக் காணும்போது மனம் வெடித்துவிடும்போல் பதறுகிறது. 

தசாப்பதங்களைக் கடந்த போதும் உங்களது நிலைகளின் நிலமைகளைப் புரிந்துகொண்டு அழுதங்களை உங்கள் மீது செலுத்தாது எங்களது வாழ்நிலைகளை சமாளித்து வாழ்கிறோம் உங்களால் முடியாமல் போனதன் சுயநலங்கள் என்ன?? 

தற்போதய நிலையில் எங்களுக்கு எழுகின்ற சந்தேகம் என்னவெனில் பாராளுமன்றத்தின்கான பதவிகள் மறுக்கப்பட்டபோது உங்களால் கட்சில் இருக்க முடியவில்லை அதற்காகத்தான் இத்தனை காலம் இந்த மு.காங்கிரஸை ஏமாற்றி சுகபோகங்களை அனுபவித்து வந்திருக்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது இவ்வாறான சந்தேகங்களுக்கும் அவப்பெயர்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்திடுங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையோடு கலந்தாலோசித்து காத்திரமான முன்னேற்றங்களை மக்களுக்கா மேற்கொள்ளுங்கள் அதன்பால் இறைவனிடத்திலும் உங்களக்கு உயரிய நிலை கிடைத்திடும் இறைவன் எம் அனைவரையும் ஒற்றுமையோடு வாழச்செய்திடுவானாக நன்றி வஸ்ஸலாம் 

Saturday, March 19, 2016

புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு

விழிகள் பல வியக்கின்ற 
படோபகாரப் பந்தல்களில் 
பாலமுனை மண் - பால்நிலா 
இரவுகளாய் மிளிர்கின்றது!

மார்ச் 19 என்னும் சரித்திர நாள்
பாலமுனை வரலாற்றுக்கே 
கிடைத்த பொன்னாடைத் திருநாள் 
புகழ் பெறுகின்றதின்னாள்! 

பெருந்தலைவனின் வழியில்
எம் தலைவனின் துணிவில் 
எம் பொன்னூராம் பாலமுனைக்குச்
சூடிய மகுடமாய் இந்நாள் 

எம் மண் ஈன்ற இளவல் அன்சீலின் 
சாதனைக்கொரு சவாலாய் 
அமைந்ததின்னாளை - பரிவாரங்களின்
பக்கபலங்கொண்டு சாதனையாக்கி 
வெற்றியாளனாய் வீற்றிருக்கிறான் 

சீறிய சில குரல்களையும் 
சிணுங்கிய சில மனங்களையும் 
செல்லாக் காசுகளாக்கி 
சிலிர்த்து நிற்கிறதின்னாள் 

தலைவன் உத்தரவென்று பணிந்து 
தளபதிகளெல்லாம் தூக்கம் தொலைத்து 
உழைத்திருந்த இரவுகள் - இன்று
பகல் நிலவாய் மகிழ்ந்து மின்னுகிறது

விருந்தினர்களின் வருகைக்கு 
போராளிகளின் பெருவெள்ளம் 
தாகம் தீர்ப்பதாய் அமைந்துவிட 
தார்மீகப் பொறுப்புகள் உணர்த்தும் 
சந்தர்ப்பமாய் அமைகின்றதின்னாள்  

முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் 
தசாப்தங்கள் கடந்த வரலாறு கண்டும் 
ஏக்கங்களின் கேள்விகளோடின்னும் 
ஏழைகளாய் எம் போராளிகள் 

தேன் கூடு கலைக்கும் எட்டப்பராய் 
ஒற்றுமை குலைக்கும் எம் சகாக்கள் 
ஒவ்வாமை நிகழ்வுகளை நோக்கி 
காய் நகர்த்தல்கள் செய்கிறார்கள்

என்ன சதி யார் செய்தாலும் 
சோரம் போகாத சொந்தங்கள் 
மாமனிதனின் வழியில் உள்ளவரை 
வீழாது எம் மரம் வாழும் 
இவ்வுலகின் முடிவுவரை  

எம் தலைவனை நோக்கி
இட்டுக்கட்டப்படும் அவதூறுகள் 
மலையளவு குவிந்து கிடந்தாலும்  
மாறிடா மனங்களோடின்னும்
வேங்கைகளாய்க் காத்திருக்கிறோம் 

இருப்பவர்களை அணைத்தெடுத்து 
பிரிந்து நிற்பவர்ளை சேர்த்தெடுத்து 
முஸ்லிம் என்ற ஓர் கொடி நாட்டி 
புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் 

கடந்தவைகளை மறந்தவைகளாக்கி 
காலத்தின் கட்டாயத்திற்கேற்ப 
கண்ணிய மார்க்கம் சொல்லும் வழியில்
ஒன்று சேருங்களேன் சகோதரர்களே 

கூடிக் கலைந்ததாய் மட்டும் இந்நாளை(19) 
அநாதையாக்கி அவமதித்திடாதீர்கள்
பாலமுனை மண் எழுதிய புதிய வரலாறாய் 
நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்லுங்கள்!

Thursday, March 17, 2016

புறப்படுங்கள் போராளிகளே.....




கைநழுவும் எம் தருணங்கள் 
எமைத் தவித்திடச் செய்திடும் 
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு 
இழந்தவைகளை உணர்த்திடும் 

வகுக்கப்படும் வியூகங்களும் 
கொடுக்கப்படும் வாக்குறிதிகளும் 
நிறைவேற்றாதவனுக்குச் சுமையாகி 
ஏமாறியவன் அதன்பால் உயர்ந்து நிற்கிறான் 

எமக்குள்ள காலம் பொன்னானது 
எதற்காகவும் வெறுத்திட முடியாதது 
எமக்கான சோர்வுகளெல்லாம் 
எம் சந்ததிகளுக்காவது சுகங்களாகட்டும் 

எமைப் படைத்தவனுக்குத் தெரியும் 
எம் தேவை எதுவென்று 
மானிட சக்திகளுக்கப்பால் 
அவன் நாட்டத்தில் நிறைவு பெறும் 

எவர் மீதும் குறைகூறி 
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து 
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய் 
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள் 

அபிவிருத்தி மாயைக்கும் 
சுயநலத்தின் போதைக்கும் 
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட 
தயாராகுங்கள் தோழர்களே....

வீணர்களின் வியாபாரம் 
விலைகளற்ற பதறுகளென 
நாம் கூறும் அல்லாஹூ அக்பரில் 
நாசமாகிடணும் - இன்றே
புறப்படுங்கள் போராளிகளே....

ஜனசமுத்திரமாய் எம் ஒன்றுகூடல் 
ஆற்றாமைகளை அகற்றிடும் 
எதிர்கால நிகள்வுகளின் 
ஏடுகளாய் பதிவேற்றப்படும் 
நீங்களும் அதிலொரு அங்கமாகிட 
புறப்படுங்கள் பாலமுனை நோக்கி



கருத்து வேறுபாடென்னும் 
கறையான்கள் வந்துங்கள் 
புரிந்துணர்வை சீரழிக்கும்!மிகவும் 
புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் 

என்னும் மறைந்த எம் தலைவர் அஷ்ரஃபின் வரிகளுக்கொற்ப கருத்து வேறுபாடுகளை தூர வைத்துவிட்டு எம் சமுகத்தின் ஒற்றுமைக்காகவும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வுக்காகவும் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது மகாநாட்டுக்காக அனைத்து தரப்பினர்களையும் வருக வருகவென பாலமுனை மண் சார்பாக மனமகிழ்வுடன் வரவேற்கிறோம் 

Wednesday, March 16, 2016

“நான் முதல்வனானால்”

படைத்தவனைத் தொழுதெழுந்து 
பெற்றவர்களை ஆரத்தழுவி 
போற்றும் உலகொன்று காண
புதுமைப் புரட்சிக்காய் உழைத்திடுவேன் 

சட்டங்களைச் சீர்செய்து 
குற்றங்களை ஒழித்திடுவேன் 
பேதங்களை மறக்கச்செய்து 
மனிதர்களென உணர்த்திடுவேன் 

துறைசார்  அபிவிருத்தியென்று 
நாட்டையே செழிப்புறச்செய்து  
சூழல் குற்றவாளிக்குத் தண்டனை தந்து 
சுற்றத்தின் சுகந்தம் காத்திடுவேன் 

வேலையற்ற  நிலைமாற்ற 
தொழிற்சாலைப் பேட்டைகளமைப்பேன் 
பிறக்கும் குழந்தையானாலும் 
அழு குரலுக்கும் சம்பளம் தருவேன் 

உலகம் சிறக்கும் கல்விதந்து 
நாடு துறக்கும் நிலை மாற்றுவேன் 
சுதந்திரம் அனைத்திலும் தந்து 
தேசப் பற்றாளர்களை உருவாக்குவேன் 

அமைச்சர்களை மக்களுக்காய் அமைத்து 
நேரடித்தொடர்பும் என்னுடாக்கி 
மக்களின் தேவைகளகற்றி 
மக்களுக்காய் வாழ்ந்து மடிவேன் 



"கவிதைப் பட்டறை- 2016-ஏப்ரல் கவிதைப் போட்டி"
தலைப்பு: "நான் முதல்வரானால்"




Tuesday, March 8, 2016

மகளீர் மட்டும்.....!!!


ஓர் தாய் வயிற்றில் பிறந்த நாம்
உலகத்தாய் மடியில் தவழ்கிறோம்
எம் தாய்களின் மகிழ்வில்தான்
உலகமிது சாந்திபெறும்

பெண்கள் எம் கண்களென
பெயரளவில் மொழிந்து விட்டு
பெற்றவளையும் வதைத்திடும்
பேய்கள் வாழும் உலகமிது

படைப்பால் மென்மையானவளை
மகிழும் மலர்களாய் ஏந்திடாது
வெறுத்தொதுக்கி வேரோடழித்திடும்
வக்கிரப் புத்தியாளர்களின் உலகமிது

ஆதியும் அந்தமும் அன்னைகளிடமே
ஆணவமும் அசிங்கங்களும் களைந்து
ஆதரவும் பெண்களாலடைந்து
ஆறறிவாளர்களாய் மாறிட வேண்டும்

உணரும் உள்ளங்களாய் மாறி
மகளீரை மட்டும் மகிழச்செய்து
வாழ்வளித்து வாழ்வார்களானால்
வாழும் இவ்வுலகம் வசந்தமாகிடும்

Wednesday, March 2, 2016

முதிர்கன்னி என்தவறா.....????


வயதிங்கு உரமாகி 
உணர்விங்கு உயிராகி 
அடங்கிய ஆசைகள் 
அனலாய் எரிக்கிறது 

ஏந்தி நின்ற ஏழ்மையில் 
சீர்வரிசைச் சாசனங்களால் 
சிற்பமாய் இன்னும் 
சிறை வைக்கப்பட்டிருக்கிறேன் 

முனைந்திடாக் காதலும் 
முடிந்திடா மணவாழ்வும் 
முதிர்க்கன்னி எனையாக்கி 
ஒப்படைத்திருக்கிறது முதுமையை 

கனிந்திடா என் கற்பு
உதிர்ந்திடும் காலமாகியும் 
ஒடிந்து கிடக்கின்றேன் 
ஒவ்வாமை நிகழ்வுகளோடு 

குமுறச் செய்த என்சமுகம் 
குற்ற உணர்வு ஏதுமின்றி 
குலப்பெருமை பேசுகிறது 
இக்குறை நிவர்த்திக்க மறந்து 

Saturday, February 27, 2016

காதல் சாம்ராஜ்யம்..... பாகம் 02



வேண்டுமொரு துணையெனக்கு 
காதல் வேதனைகள் தீர்த்திடத்தான் 
சாதலானாலும் என்னோடு 
சேர்ந்தே கடந்திடணும் 

காதலென்ற பவணியெனக்கு 
வாழ்வாக அமைந்திடணும்
இவ்வழியில் எனைத்தொலைத்து 
புலம்புவதற்கு நாடவில்லை 

கண்டவுடன் காதலென்கிறாய் 
உன் கருணையின்னும் காணவில்லை 
காதலில் நான் கனியும் வரை 
காதலொன்றும் தேவையில்லை 

காதலென்று கைபிடித்தவன் 
கழட்டிவிட்டு சென்றுவிட்டானாம் 
நொந்தவளும் தூக்கிலிட்டு 
மாய்த்துவிட்டாள் தன்னுயிரை 

பொல்லாத காதலெனக்கும் 
பொல்லாப்பாய் மாறிடுமோ 
பொங்கும் என் காதலையும் 
பொத்திவைத்து காக்கின்றேன் 

சிறப்பான ஒருவனென்று 
திறம்பட அறியும் வரை 
கற்சிலையாய் இருந்தாலும் 
காதலை மட்டும் ஏற்கமாட்டேன் 

                                                                               தொடரும்.......



Tuesday, February 23, 2016

ஆணவம் அழித்துவிடும் மகனே........


என் அன்பு மகனே.... 
அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று 
ஆணவத்தை ஏன் தலையிலேந்துகிறாய் - அதன் 
சுமையில் உன் தலை கவிழ்ந்துவிடாதா...??

ஆணவப் பேய் கொண்டு 
அழிந்தவர் அகிலத்திலதிகம் 
அறிவாளியாய்த் தானிருந்தும் 
அறிவிலிபோல் நடந்து 
அவமானப் பட்டவரும் அதிகமதிகம்

உன் அன்னையும் ஆசானும் 
கற்றுத் தந்த அடக்கமெங்கே 
அதிரும் உன் வார்த்தைகளால் 
அவதியுண்டு அவர்களுக்கும் 
அறிந்திடு அகமகிழ்வாய் 

என் தங்க மகனே.....
சுற்றத்துச் சூழல் 
சுழலும் உன் வாழ்வில் 
அணைந்திடாச் சுடராய் - என்றும் 
இருள் மட்டும் அகற்றி விடு 
சுட்டரித்திடத் துணிந்திடாதே - அதில் 
வெந்து நீ அழுவது நீயாவாய் 

விண்ணில் நீ பறந்தாலும் 
அடங்குவது ஆறடி மண்ணில்தான் 
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி 
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு 

எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட 
எம் குணம் ஒரு கண்ணாடி 
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி 

இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும் 
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது 
எதிரியாக்கிடா வார்த்தைகளை 
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு 

Sunday, February 21, 2016

வாழவைக்கும் என் காதல்


என் கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
செல்லும் இடமெல்லாம் நானும் உன்பின்னே
அடைந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கிறேன்
யாருமற்ற  அனாதரவாய் நான்

நீ மட்டும் உலகமென்று நடந்தேன்
சூழ இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன்
அற்புதம் அத்தனையிலுமிருக்க
எதையும் நான் காதலிக்கவில்லை

உன் காதல் மட்டும் கட்டிவைத்திருந்தது
தித்திப்பும் அது காட்டிநின்றது
திகைத்திடும் இன்நாளையும்
திடமாய் எனக்கு உணர்த்திவிட்டது

பதட்டம் என்னை அர்ப்பரித்திருக்கிறது
வெடித்துவிடும்போல் மனம் வேதனைப் படுகிறது
உனைக் காதலித்த என் இதயம் - உன்
சொல்லம்புகளால் சுக்குநூறாகியிருக்கிறது

பெண்ணை மட்டும் காதலித்துப் பேதையானேன்
பார் துறக்கும் தருணத்தை நாடலானேன்
பாவை அவளுக்கும் இதயமொன்று இல்லையென
எனைப் பார்த்து அவளும் பரிகாசம் செய்கிறாளே

நாசமே எனக்கு இக் காதலால்தானே
காதலே என்னை மட்டுமேன் யாசகனாக்கினாய்
எனைத்துறந்து வாழத்துடிக்கும் அவளுக்காவது
ஜெயமொன்று கிடைத்திடட்டும் என் காதலால்

Thursday, February 11, 2016

வந்துவிடு என்னவனே......

வந்துவிடு என்னவனே 
வயதென்னை வதைக்கிறது 
சீக்கிரம் வருவாயென்று 
சென்றவழி பார்த்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன் உனக்காகவே 
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறேன் 

கலைந்திடாத கட்டுடலை 
கலைத்தென்னைக் கனியவைத்தாய் 
காதல் அமுதென்று 
கனிவுடனே பரிகிடச்செய்தாய் 
காலமுள்ளவரை தொடர்வாயென்றிருக்க 
கனவுகளாக்கிச் சென்றுவிட்டாயே

தொடரும் உன் நினைவுகள் 
தொடர்கிறதிங்கு நிழல்களாய் 
தொல்லை தரும் உணர்வுகளும் 
தொடுதலின்றித் துடிக்கிறது 
துயில் கொள்ளும் தேகமிங்கு 
திடுக்கிட்டு எழுகிறது 

நெருடும் நினைவுகளோடு 
நொடிகளிங்கு வருடங்களாகி 
நித்தம் உன் வரவுக்காய் 
நெஞ்சம் பதை பதைக்க
நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என்
நினைவுனக்கு வரவில்லையா??

குறிப்பு : படம் கண்டதால்  உதித்த வரிகள் படத்தினைப் பகிர்ந்த கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களுக்கு நன்றிகள் 

Wednesday, February 3, 2016

அவமானச் சின்னமா ???? குழந்தை


மறுக்கப்பட்ட அன்பைத்தேடி 
வெறுக்கப்பட்ட அருகாமை தேடி 
ஏமாற்று வலைகளுக்குள் சிக்குண்டு 
உள்ளத்தின் ஏக்கங்களின் வழியில் 
அவமானச் சின்னங்களாய் குழந்தைகள்

பணமே வாழ்வென்றலைந்து 
பிணங்களாய் வாழ்ந்தென்ன லாபம் 
அடக்கியே வளர்க்கிறோமென்று 
அசிங்கங்களை அறிந்திடச்செய்யவில்லை 
அருவருப்பாய் உருவெடுத்திருக்கிறது 

குழந்தையின் தேடலென்ன 
குமரியாய் ஆகிவிட்டாளா??
மார்க்கத்தின் போதனைகளென்ன 
அதன் வழிகளை பின்பற்றுகிறாளா??
என்றெதையும் நோக்கவில்லை 
அறிவிலியாய் வளர்ந்திருக்கிறது 

அன்னியனொருவனின் அரவணைப்பிற்குள் 
சென்றுவிடத் தூண்டியிருப்பதென்ன 
கொன்றுவிடுமளவு பாதகமாய் 
அமைந்துவிட்டிருப்பது எதனால் 
ஆராய்ந்தெவரும் பார்க்கவில்லை 
அசிங்கமென்று அழுகிறோம் 

தவறொன்று நடக்கின்ற போதுதான் 
தவறிவி்ட்டோம் அனைத்திலுமென 
தடுமாறித் தத்தழிக்கிறோமே 
வருமுன் காத்திடத்தான் 
என்ன வகை செய்திருக்கிறோம்!!

வயதிற்கேற்ற வரயறைகளை
வகுத்தறிவித்து வளர்த்து 
அன்பு கலந்த நட்போடு 
அன்னியோன்யமாய்க் கலந்து 
அரிய செல்வமாய் நோக்கிடுங்கள் - நாளை 
விலை மதிப்பற்ற வைரங்காளய் மிளிரும் 



குறிப்பு: அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் சாடல் கருவானது அன்னிய ஆடவனின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவன் மாற்று மதத்தவன் என்றும் பாராது அவன் பின்னே சென்று குடும்பத்திற்கும் சமுகத்திற்கும் களங்கத்தினை ஏற்படுத்தி அனைவரையும் தலைகுனிவுக்குள்ளாக்கியிருக்கின்ற அந்த குற்றவாளிகளை யாராலும் மன்னித்துவிட முடியாது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடந்திடாமல் அனைவரும் விளிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்  ( அந்த குற்றவாளி தற்போது விளக்க மறியலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருபதாக செய்திகள் இவன் இன்னும் பல சம்பவங்களோடு தொடர்பு பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது எது எவ்வாறாகினும் இவர்களை அடையாளங் கண்டு கொள்ளாத எம்மவர்கள் மீதுதான் குற்றமே) 

Wednesday, January 27, 2016

அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

அண்மையில் விடுமுறைக்காக நாட்டில் இருந்த போது இறைச்சி வாங்குவதற்காக இறைச்சுக் கடைக்கு சென்றிருந்தேன் அங்கிருந்த வியாபாரியிடம் 1kg இறைச்சி கேட்டேன் அங்கு அளவு செய்து தரப்பட்ட அளவையில் எனக்கேற்பட்ட சந்தேகத்தினை அனுபவ ரீதியாக அவதானித்த விடயத்தனை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும் இவ்வாறானவர்களை அடையாளங்காட்ட வேண்டும் என்பதற்காகவும் இப்பதிவினை இடுகிறேன் சந்தேக முள்ளவர்கள் நீங்களும் அவதானித்து மோசடிக்காரர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள். 

நான் சென்றிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த நிறுவைத்தாரசினுள் ஒரு பக்கம் படிக்கல் வைக்கப்பட்டிருந்தது நான் கேட்ட அளவு இறைச்சியினை வெட்டியெடுத்து மறுபக்க தராசியினுள் இட்டு விட்டு சரியான அளவு படிக்கல் மாற்றம் செய்தார் அளவைக் கல் மேலெழுந்து கதித்ததன் பின்னர் இறைச்சியினை எடுத்து பொதிசெய்து  இன்னுமொரு துண்டினை மேலதிகமாக வெட்டி நிறுக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்துத் தந்தார் (வாங்குகின்ற நமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்  காரணம் மேலதிகமாக அல்லவா நிறுவை செய்து தந்திருக்கிறார்) என் கைத் தூக்கத்தில் எனக்கு சிறு சந்தேகம் ஏற்படவே அருகில் உள்ள இலக்ரோனிக் தராசில் நான் வாங்கிய இறைச்சுப் பொதியை நிறுவை செய்து பார்த்தேன் மேலே உள்ள படத்தில் காட்டிய விடை கிடைத்தது........

சிந்தித்துப்பாருங்கள் இன்றய காலத்தில் 600ரூபாவை தாண்டிய நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறைச்சி இவர்கள் விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு பெறுமதியை மக்களிடமிருந்து கொள்ளை செய்கிறார்கள் இறைவனுக்கு அணுவளவும் பயமில்லாமல் அற்ப பணத்திற்காக பட்டப்பகலில் சூரையாடுகிறார்களே நாளை மறுமையில் இறைவனின் கேள்வி கணக்கிலிருந்து தப்பிவிடுவார்களா.....????????

பிறகொருதினம் வேறொரு கடையில் இவ்வாறே வாங்கிய பின்னர் நிறுவை செய்து பார்த்தேன் அங்கு 1kg ஐ விட அதிகமாகவே இருந்தது ஆக அனைவரும் தவறிழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவில்லை ஒரு சிலர் இவ்வாறான திருட்டுத்தனத்தினை ஆங்காங்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவதானமாக இருங்கள் 

இது அவர்கள் மீது மாத்திரம் குற்றமில்லை இவர்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு மேற்பார்வை செய்யாத அதிகாரிகளின் குற்றம் கண்மூடித்தனமாக வாங்கிச்செல்கின்ற எம்போன்ற பாமரர்களின் குற்றம் இதை மேலோட்டமாக பார்க்கின்றவர்கள் சாதாரணமாகச்  சொல்வார்கள் இது அப்பட்டமான பாவச்செயல் குற்றத்துக்குரிய தண்டனை என்பதை அவர்கள் காதுகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் 

சமுகத்தில் நிலவுகின்ற அத்தனை குற்றச்செயல்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அனைவரும் அடிப்படையாக அமைகிறோம் இப்படியானவர்களை அடையாளங்கண்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் 

இது எமது பிரதேசத்துக் கடை  எந்த ஊர் என்று சில காரணங்களுக்காக குறிப்பிடவில்லை நீங்களும்  அவதானித்துப்பாருங்கள் தனிமையில் தொடர்பு கொள்ளுங்கள் தேவையேற்படின் தகவல் தருகிறேன் 
நன்றி 

Tuesday, January 26, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் (போட்டிக்காக)



காலாகாலத்து அனர்த்தங்கள்
உணர்த்துகிறது மனிதாபிமானமெதுவென்று
ஈரமற்று வற்றிக்கிடந்த மனிதாபிமானத்தினை
பெருமழை வந்து ஊற்றெடுக்கச் செய்திருக்கிறது

ஜாதிமத பேதங்களால் அன்னியமாகி
அன்பறுந்த குரோதங்கள் வளர்த்து
அயலவனின் அவலங்களில் மகிழ்ந்து 
அகம் நிறைந்து சாதித்தவருமுண்டு 

தனக்கென அனைத்தும் வேண்டுமென 
தமையனானாலும் தர மறுத்து
தஞ்சம் தன் சொத்தெனப் பதுக்கி 
கஞ்சன்தானென ஏற்றவருமுண்டு 

வானத்து ஓர்குடையின் கீழ் பிறந்த 
மனிதர்கள் நாம் ஒன்றே என்று 
மழையும் கண்ணீராய்ப் பெருக்கெடுத்து 
அனைத்தும் இழந்தோராய் ஒன்றுசேர்த்தது 

இளகிடா மனங்களும் வருந்தி 
இரங்கிடா மனிதங்களும் இரக்கம் கொண்டு 
இதுதான் மனிதாபிமானமென்று 
நிரூபித்தனர் வள்ளல்களாய் அன்று 

Wednesday, January 6, 2016

தனயனின் தவிப்பு........


தாய் தாயென்று தனயனிங்கு தவிக்கிறேன் 
தரணி உள்ளமட்டும் உன்மடியில் 
துயில்கொள்ளத் துடிக்கிறேன் 
தருவாயா தாயே உன் மடி தருவாயா???

தஞ்சம் உன்னுடனாகி - என் 
நெஞ்சில் உனைத்தாங்கி 
தாலாட்டிச் சீராட்டிட -  தாயே 
வந்துவிடு என்னுடனே வந்துவிடு 

ஒத்தையாய் பெத்தெடுத்து 
ஒய்யாரமாய் வளர்த்தெடுத்து 
உலகறியச் செய்தவளே உன் 
உளம் மகிழக் காத்திடுவேன் 

என்னுள் உனக்கான ஏக்கங்களுடன் 
உன் உதிரம் ஓடிக்கொண்டிருக்கிறது 
நீ என்னோடு இல்லையென்று 
என் உணர்வுகள் உணர்விளந்திருக்கிறது   

அம்மா நீ என் உலகம்மா 
இல்லையென்றால் நான் இல்லையம்மா
எத்தனை உயர்வினை அடைந்தாலும் 
நீயின்றி அது துச்சமம்மா 

தாலாட்டு உன்மொழியிலின்றி 
துயில்கொள்ளவும் பிடிக்கவில்லையம்மா 
நீயின்றிய மரணம் கூட - எனை 
சேர்க்கவிருப்பதும் நரகத்தில்தானெயம்மா 

இறைவனை முன்னிறுத்தி
மன்றாடிக் கேட்கிறேன் உன்னிடமே
வரமொன்று தந்துவிடு மடிவதற்குள் 
வாழும்வரை வந்துவிடு என்னோடு

Tuesday, January 5, 2016

சின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்


சின்னப்பாலமுனை ஹிக்மா பாடசாலை சம்பந்தமான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சில விடயங்களை எத்திவைத்திட கடமைப்பட்டிருக்கின்றேன் ஒரு சிலரின் விதண்டாவாதமும் இட்டுக்கட்டான தகவல்களும் அங்குள்ள சமுகத்திற்கும் பிரதி அதிபரான முகா அவர்களுக்கும் இழுக்கு வரும் விதமாக facebook போன்ற தளங்களில் பகிரப்படுவதையும் கண்டேன் அக்கருத்துகளை முழுவதுமாக மறுக்கிறேன் எதிர்கிறேன்.

கரையோரப் பிரதேசமான இக் கிராமத்தின் ஐந்து தசாப்தங்கள் கடந்த பழமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறு யாவரும் அறிந்ததே பின் தங்கிய பிரதேசமானதாலும் பிரதான வீதியிலிருந்து 1 KM தொலைவில் அமைந்திருப்பதாலும் பல பின்னடைவுகளை இப்பாடசாலை சந்தித்திருக்கிறது என்பது சத்தியம் இந்த ஒரு காரணத்தினாலேயே பிற பிரதேசங்களில் இருந்து வருகின்ற திறமையான ஆசிரியர்களாலும் அதிக காலம் இப்பாடசாலையுடன் தொடர முடியாத இக்கட்டான நிலை காணப்படுகிறது அதே நேரம் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை  பயிற்சி ஆசிரியர்கள் கூட இப்பாடசாலைக்கு வழங்கப்படுவதும் விரும்பி வருவதும் மிகமிகக் குறைவு ஆசிரியர்கள் தங்கி சேவை செய்யக் கூடிய பௌதிக வளங்களும் இங்கில்லை ஒரு பாடசாலையின் மிக முக்கியமான தேவையான ஆசிரியர் நியமனம் சரியாக இல்லாததன் காரணமாக பாடசாலையின் வளர்ச்சி பின்தங்கிச் செல்கிறது

அரிதாகக் கிடைத்த வளங்களைப் பயன்படுத்தி இத்தனை காலமும் இப்பாடசாலை 9ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்து பல திறமையான மாணவர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதில் அச்சமுகத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்பாடசாலையுடன் ஒப்பிடும் போது ஏனைய உயர்தரப்பாடசாலைகள் மிகவும் தூரப்பிரதேசங்களில் அமைந்திருப்பதால் 09ம் ஆண்டுடன் வெளியேறுகின்ற அனைவரும் தங்களது கல்விகளைத் தொடர்வதில்லை அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் தூரப் பிரதேசம் சென்று கற்றுவருவதில் உள்ள அசௌகரியங்கள் காரணமாக பெற்றோர்கள் சிறப்பாக கற்கின்ற பிள்ளைகளைக் கூட இடைநிறுத்தி விடுகிறார்கள் அதேபோல் கடற்கரையை அன்மித்த பகுதியாதலால் சில ஆண்பிள்ளைகள் கடற்கரையுடன் எதிர்காலத்தினைக் கடத்தக் கூடியதாக மாற்றிக்கொள்கிறார்கள் இவ்வாறான நிலையினைக் கருத்தில் கொண்டதால்தான் ஹிக்மா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரைக்குமாவது தரமுயர்த்த வேண்டும் என்று பாடசாலைக் சமுகத்தவரால் கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை

எதிர்வருகின்ற வருடத்துடன் அதனை ஏற்படுத்தித் தருவதாக கல்விப்பணிப்பாளர் வாக்குறிதி அழித்திருப்பதாக அறிகிறேன் அது நடந்தேற இறைவனப் பிரார்த்திப்பதோடு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் வினையமாக கேட்டுக்கொள்கிறேன்

இவை தவிர இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதும் அவற்றை நிவர்த்திப்பதும் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது மேலே குறிப்பிட்டது போன்று ஆசிரியர் பற்றாக்குறை கட்டிட வசிதிகள் தங்குமிட வசதிகள் மலசல கூட வசதிகள் என்பவைகளைத் தாண்டி அதிபர் பிரச்சினை இருக்கிறது.  கடந்த சில வருடங்களின் முன்னர் ஒரு அதிபரின் வழிகாட்டலில் புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் ஆசிரியர் விடயங்களில் மிகவும் முன்னேற்றகரமான சூழல் காணப்பட்டது அந்த அதிபரின் மாற்றுதலின் பின்னர் தற்போதய அதிபருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சபைக்கும் இடையேயான முறுகல் நிலையும் தற்போதய அதிபர் நியமனத்தின் பின்னரான பாடசாலையின் பின்னடைவு மேலும் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது என்பது ஒரு முக்கிய விடயம் அதிபரின் திறமையான அழுகையில் ஒரு பாடசாலையின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது என்பது தெட்டத்தெளிவான விடயமாதலால் அனைவரும் அதிபரை மாற்ற வேண்டும் அதனுடன் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பாரக்கிறார்கள்.

இந்த விடயத்திற்கும் இந்த சமுகத்தைச் சார்ந்த பிரதி அதிபருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை சமுக அக்கறையினை நோக்கமாகக் கொண்ட அனைவரது நடவடிக்கைகளுமே தவிர யாருடைய எந்தவித குரோதங்களோ தனிப்பட்ட கோபங்களோ அல்ல எதிர்கால எம் சமுகத்தின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் அதற்கான அத்திவாரங்கள் சிறப்பாக அமைத்திட வேண்டும் என்கின்ற நல்ல நோக்கமே என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகின்றேன் தற்போதய அதிபர் எனது உற்ற தோழன் அவருக்கு எதிரான எனது கருத்தென்று பதிவு செய்யாது இந்த உண்மை விடயத்தினை அவரும் புரிந்து கொண்டு இச்சமுகத்தின் தேவையினை முடியுமான வரை நிவர்த்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன்

அனைத்து தரப்பினரிடமும் எனது வினையமான விண்ணப்பம் என்னவெனில் பின்தங்கிய இப்பிரதேசக் குழந்தைகளை மாத்திரம் கவனத்தில் கொண்டு இறைவனுக்கா யாரும் யார் மீதும் அவதூறுகளை விதைக்காது உங்களாலான உதவிகளை மாத்திரம் செய்து தாருங்கள் இறைவன் சுவனத்தில் உங்களை சேர்த்துக்கொள்வான் மிக்க நன்றி




Related Posts Plugin for WordPress, Blogger...