இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 24, 2016

உமை மாற்றாத அனர்த்தம்


உணர்வால் உயர்ந்தவன் 
கொடையால் மகிழ்ந்தவன் 
கோடிகோடியாய் கொட்டித்தர 
ஏழனம் செய்கிறான்  உலோபி 

பதுக்கலில் பலசாலியாய் 
சுறண்டலில் புத்திசாலியாய் இருந்தவன்
கொடுத்தல் கண்டு பொறாமை கொண்டு 
கொச்சைப்படுத்தும் வாதம் கொள்கிறான் 

கண்டாயா உன் கண்முன்னே 
இவ்வுலகமது நிச்சயமற்றது 
நின் வாழ்க்கையதுவும் நிரந்தரமற்றது 
நல்லறம் நோக்கி நீ வாழப்பழகிடு 

செல்வமென்று சுகங்கண்டு 
சுற்றத்து அனர்த்தமும் உமை 
மாற்றவில்லை மனிதனாய் 
உயிர் சிக்கும் வரை காத்திருக்கிறாயா??

எண்ணங்களையும் அறிந்திடும் இறைவன் 
கேள்விகளோடுன்னை காத்திருக்கிறான் 
எதிர்பார்ப்பற்ற உதவிகளோடு மட்டும் 
உயரிய சுவர்க்கம் அடைந்திடு 

ஜனனமும் மரணமும் 
இறைவனின் தீர்ப்பில் நிகழ்வது 
இடைப்பட்ட வாழ்வு மட்டும் 
எம் விதியின் எழுதுகோல்கள் - உடனே
எது வென்று எழுதிவிடு   

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...