இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 24, 2016

உமை மாற்றாத அனர்த்தம்


உணர்வால் உயர்ந்தவன் 
கொடையால் மகிழ்ந்தவன் 
கோடிகோடியாய் கொட்டித்தர 
ஏழனம் செய்கிறான்  உலோபி 

பதுக்கலில் பலசாலியாய் 
சுறண்டலில் புத்திசாலியாய் இருந்தவன்
கொடுத்தல் கண்டு பொறாமை கொண்டு 
கொச்சைப்படுத்தும் வாதம் கொள்கிறான் 

கண்டாயா உன் கண்முன்னே 
இவ்வுலகமது நிச்சயமற்றது 
நின் வாழ்க்கையதுவும் நிரந்தரமற்றது 
நல்லறம் நோக்கி நீ வாழப்பழகிடு 

செல்வமென்று சுகங்கண்டு 
சுற்றத்து அனர்த்தமும் உமை 
மாற்றவில்லை மனிதனாய் 
உயிர் சிக்கும் வரை காத்திருக்கிறாயா??

எண்ணங்களையும் அறிந்திடும் இறைவன் 
கேள்விகளோடுன்னை காத்திருக்கிறான் 
எதிர்பார்ப்பற்ற உதவிகளோடு மட்டும் 
உயரிய சுவர்க்கம் அடைந்திடு 

ஜனனமும் மரணமும் 
இறைவனின் தீர்ப்பில் நிகழ்வது 
இடைப்பட்ட வாழ்வு மட்டும் 
எம் விதியின் எழுதுகோல்கள் - உடனே
எது வென்று எழுதிவிடு   

Thursday, May 19, 2016

காத்திடு எங்கள் தேசத்தை


அனர்த்தங்களின் அழிவுகளால் 
பாமரர்களின் பரிதவிப்புகள் 
வல்லவனே யா அல்லாஹ் 
காத்திடு எங்கள் தேசத்தை 

சக்தியற்ற இம் மானிடனுக்கு 
உன் சிறு அசைவும் பேரிடியாகும் 
இயற்கையைப் படைத்த உன்னால் 
இயக்கங்களையும் நிறுத்திட முடியும் 

உன் நினைவின்றித் துதிமறந்து 
தன் கடமை மறக்கின்ற மாந்தருக்கு 
ஆங்காங்கு நினைவூட்டி - நீ
இருக்கிறாய் என்பதை உணர்த்துகிறாய் 

உணர மறுக்கும் மனிதனோ 
தான் வாழ்ந்தால் போதுமென்று 
தூங்குவதாய் துயில்கொள்கிறான் 
தனக்கும் நாளை உண்டென மறந்தவனும் 
கேளிக்கைகளோடு நடனமாடுகிறான் 

அருளாளனே யாரப்பே 
இம் மனிதர்களை மன்னித்தருள்வாயாக 
உன் தயவின்றி எதுவுமில்லை 
உன்னிடமே மண்டியிட்டுக் கேட்கிறோம் 
காத்திடு எங்கள் தேசத்தை 

Friday, May 13, 2016

நித்திரையும் அவளும்





வேதனை தரும் இரவுகள்
என்னை சிறைவைத்திருக்கிறது
சோதனைக் காலமாய் என் வாழ்வு
சுகமான தூக்கம் தேடி அலைகிறது 

பதமான பஞ்சணை மெத்தையுண்டு
இதமான தென்றலின் துணையுமுண்டு
தூக்கம் மட்டும் தூர நிற்கிறது  தொடரும் 
துக்கம் மட்டும் துணை வருகிறது 

நித்திரை செய் மனமே என்று 
நிந்தித்து நிலை தடுமாறுகிறேன் 
மந்திரித்து மாத்திரை தர
மாது அவளும் மறுத்துவிடுகிறாள் 

போதை தரும் பேதையானவள் 
வேதனை தரும் வலிகளானாள் 
உறக்கம் மட்டும் அவளாலின்றி 
உலரந்து கிடக்கிறதென் வாழ்வு  

என் வாழ்வை ஆக்கிரமித்திருக்கும் 
நித்திரையும் அவளும் ஒன்றுதான் 
அவளின்றி உள்ளம் தடுமாறி 
நித்திரையின் வாயிலாக நிந்திக்கிறாள் 





Related Posts Plugin for WordPress, Blogger...