இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 31, 2011

ஈடேற்றம் தருமா புதுவருடம்.....??




வருடங்களின் எண்ணிக்கை
வருகையிலும் செல்கயிலும்
கழிந்து செல்லும் வயதுகளாகிறது


விடியாத இரவுகளும்
இருளாத பொழுதுகளுமாய் - பல
கேள்விக்குறிகளோடு வேதனைகள்


ஈழத்தேவையில் ஏங்கும் இனங்களும்
அழிவில் அகப்பட்ட ஏழைகளுமாய் -இன்னும்
ஈடேற்றத்திற்கான ஏக்கங்களோடு


அதிகாரம் கையிலிருந்தும்
அடிமையாய் ஆட்சிசெய்து
இழிவுறும் ஆட்சியாளர்கள் 

Saturday, December 24, 2011

பிரிவோடு பிரிந்திடாதே.....!!



பிரிவுகளின் ஆரம்பத்தில்
உருவாகும் வாழ்க்கைப் பாதையில்
பரிவுகளின் தேவைகளும்
உணரப்பட்டு உருமாறுகிறது


அன்பே என்றாகிய ஆதரவுறவு
அன்னம் மறந்து அன்பனின் நினைவில்
அவன் உலவிய நிழல்களோடு
உறவாடிக் காத்திருக்கிறாள்


விக்கித்த நினைவுகளை மறக்க முடியாமல்
விதியின் சுமையில் கனத்த வலிகளை
இறக்கி வைத்திட வழிதேடி
போராட்டத்துடன் பொழுதுபோக்கிறான்


குளிரின் நடுக்கமும் சூட்டின் புழுக்கமும்
உணரும் போதெல்லாம் உயிர்பிரிய
உறவானவனின் இறுக்கத்தின் ஏக்கத்தை
ஒவ்வொரு நொடியும் உணர்கிறாள்


Thursday, December 22, 2011

வாழும்போதே இறப்பதேன்.....




இளசுகளின் இன்பக்காதலை 
இன்புறச் சுவைத்திருந்தோம் 
இனியொரு பிறவியற்று - இணைந்தே 
மடிந்திடவும் நினைத்திருந்தோம் 


காதலர்களாய் வாழ்ந்த எம் 
காதலுக்கொரு பரிட்சையாய் - எம் 
செல்வங்களே எமக்கு 
பரிட்சார்த்தம் நடத்துகின்றனர் 


எம்காதலில் உருவானவர்கள் 
எமக்கும் காதலை கற்றுத்தருகின்றனர் 
இணைபிரிய மறுத்திருந்த எம்மை 
பிரித்திணைத்தொரு காதலை 
கண்டிடச்செய்கின்றனர் 

Saturday, December 17, 2011

வாழத்தகுதியற்ற... வாழ்வு


கணவனிழந்த என்தாயும் 
பசியோடழுத சகோதரங்களும் 
ஏக்கத்தோடழுதிருந்தார்கள் 
வாலிபமட்டுமே மூலதனத்துடன் 
வாழ்வளிக்க வழி தேடிநின்றேன் 


அழகுசிலையென்றார்கள் 
அந்தரத்தில் பறந்திருந்தேன் 
இளமையில் அனுபவியென்றார்கள் 
இன்பத்துடன் இணைந்திருந்தேன் 


அங்கம் மின்னுகிறதென்றார்கள் 
அனுபவித்திட பணம் பெற்றிருந்தேன் 
பணமுன் தேவையென்றார்கள் 
பக்கவிழைவு மறந்திருந்தேன் 


நிழல்களையெனக்கு காட்டினார்கள் 
நிஜங்களையெல்லாம் மறந்திருந்தேன் 
சுகமொன்று தந்தார்கள் 
சுமைகளை நானே தாங்கிநின்றேன் 

Monday, December 12, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)



வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை

அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை

ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்ததில்
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை

Wednesday, December 7, 2011

(பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்..


முல்லைப்பெரியார் அணையென்று
முனைப்புடன் மோதல்கள் ஆங்காங்கு
அரங்கேற்றம் நிகழ்ந்துவிட்டது
அரசுகளின் அசமந்தம் எங்கு
அழைத்துச்செல்லவிருக்கிறதுவோ
ஆழ்ந்து சிந்திப்பீராக


கடந்தகாலங்களில் கற்றிருக்கும்
கறுப்பு நிகள்வுகளின் கண்ணீர்கள் 
இன்னுந்தான் ஓயவில்லை 
கருத்துகளோடும் குரோதங்களோடாகும்
குதர்க்கத்தின் வடுக்களெல்லாம் 
விதைத்துவிடும் ஓர் அழிவுநோக்கி 

வீணர்களின் விவேகமற்ற செயலும் 
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும் 
வலிந்து வரளைத்துக்கொள்ளும் 
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும் 
சீர்தூக்கி சிந்திப்பீராக...

Monday, December 5, 2011

எந்த விளைவில் இதுவானது....( பறித்தெறிந்த பிள்ளை..).


அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??


மானத்தின் விளைவிதுவோ 
காமத்தின் விளைவிதுவோ 
வறுமையின் விளைவிதுவோ 
வருந்தாத மனங்களின் 
வறிய செயலிதுவோ..


உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

Thursday, December 1, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 09)


தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை

இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை

உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை

Wednesday, November 30, 2011

வாசித்திடு உனக்காக வாசித்திடு

எழுத்துக்களின் கோர்ப்பும்
உமிழும் மொழிச்சலும்
வாசிப்பின் உயிர்நாடியாய்
வாழவைக்கிறது மொழிகளை

தாய்மொழி பிறமொழியென
உலகம் கண்ட மொழிகளின்
அருமையினை ஊமையனிடம்
வினவிப்பார் விக்கியழுவான்

“அ”முதல் “ஃ” வரை படியடாவென்ற
வாத்தியாரின் விரக்தியை
வீணாக்கிய மாணவனிடம்
இன்று கேட்டுப்பார் விரண்டோடுவான்

வாசிக்கத்தெரியாதவன் வாழ்கிறானேயென்று
வீண்வாதம் சொல்கிறவனே கேளவனிடம்
மாற்றானின் வாசிப்பில்தான்
வாழ்கிறேன் என்றுசொல்வான்

சிந்தையுள்ளவனாய் ஊனமற்றவனாய்
உளரல்களோடு மதிமறந்தவனாய்
உணரப்படாத முழுமனிதனாய்
வாசிப்பில் வளர்க்கப்படுகிறாய்

அறிந்து நில் கற்றுச்செல் என்பதை
ஆய்ந்தறிந்திட வாசிப்பற்றவனாய்
ஆராய்ந்திட முடிவதில்லை
ஆழ்ந்து தேடிட வாசிக்கத்துணிந்திடு

எதைத்தான் வாசிப்பதென்று கேட்கிறதுன் மனம்
இறைவழி குர்ஆனை முழுவதுமாக வாசித்திடு
நபிவழி ஹதீஸ்களை முழுவதுமாகப்படித்திடு
உன்னதமனிதனாய் உருவம்பெற்றிடுவாய்

கணணி மயமான உலகிகைக் கற்றிட
வாசிப்பற்று கால்வைத்திட முவதில்லை
கருத்துகளோடும் அவசியத்தோடும்
மொழியறிந்து வாசிக்க வேண்டாமா??

உலகத்துநடப்புகளை பத்திரிகைகள்
உடல்களாய்த்தாங்கிநிற்கிறது ஊர்ந்துபார்
உண்மையறிந்து உணர்ந்து நடந்திடுவாய்
வாசிக்காமல் முடிந்திடுமா இவை

வாசித்தவன் இன்று விண்ணைத்தொட்டான்
விவாதித்தவன் ஏப்பம் விடுகிறான்
வானமும் பூமியும் பரந்துகிடக்கிறது
வாசித்திடு மனிதா உனக்காக வாசித்திடு
அத்தனையிலும் உயர்விருக்கிறது


கடந்த ஆண்டு வாசிப்பு தினத்திற்கா எழுதப்பட்ட கவிதை தேங்கிக்கிடந்தது தூசிதட்டினேன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள 

Tuesday, November 29, 2011

உயிர்பிழைத்த நாளன்று....

அன்பனும் என்நண்பனும் 
வாவென்று வங்கக்கடலை நோக்கி 
வெறுத்த போதும் வர மறுத்தபோதும் 
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம் 
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று 
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று 
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு 
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர் 

காணுமிடமெல்லாம் நீராகி 
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி 
கால்களையும் கைகளையும் 
வீரங்கொண்ட விசையுடன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 

Monday, November 28, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 08)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)


வாடன்(காவலர்)முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

Sunday, November 27, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)

அவளாகிய அவள் (பகுதி 06)


தொட்டுப்பார்த்து கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை

உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை

இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை

Friday, November 25, 2011

என்னை விட்டு உங்களோடு செல்கிறேன்



மூன்றுவயதில் முழுமையாய்
உணர்ந்த தந்தையின் பாசம்
அன்னாரின் இறப்போடு ஏமாற்றந்தந்து
அன்னையின் அரவணைப்பில்
ஓரளவு மறந்திடச்செய்தது


இறைவன் வகுத்த வாழ்க்கைக்கோலம்
வயதுகளின் மாற்றத்தில் வலிகளின்
தொடர்வோடு வஞ்சிக்கப்பட்டேன்
வேதனை தீர்க்க வழி காட்டு இறைவா
என்று ஏந்திய கரத்திற்கு அவனளித்த
இறைவாசலாய் இவ்வில்லமடைந்தேன்


என்போன்ற சகாக்கள் ஆயிரமிருப்பதையும்
பாசத்தைத்தேடிய பட்சிகளாய் அவர்களையும்
கண்டு மனம் கலங்கிநின்றேன்
கருணைவடிவான இறையருளின்
சூழலாயிருந்து கல்வியும் பாசமும்
ஒருங்கே பெற்றிடும் இல்லமாயுணரந்தேன்


இணைந்தபோது எதிர்பார்த்திராத
நட்புறவுகளின் அன்பும் தேவைகளின்
திருப்பதியான நிறைவுமடைந்து
ஈருலக வாழ்வின் வெற்றி நோக்கிய பாதையை
காட்டிநின்ற ஆசான்களை
என் தந்தைகளாய் ஏற்றுநின்றேன்

Sunday, November 20, 2011

நாசமானவன் நாசமாவான்....

மனிதனைப் புனிதனாக்க 
மதங்கள் வரையறுக்கப்பட்டன 
மதங்களை இழிவுபடுத்த 
மனிதனே துணிந்துவிட்டான் 


உன்துணிவில் சாதித்திடாது 
துயரங்களே உன்வழியில் 
விலைகொடுத்துப்பெற்றவனாகி 
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய் 


சாதாரணமாய் குருதியோட்டும் 
சாத்தான்களின் சங்கமமான உலகில் 
சலசலப்புக்கு வழிசெய்து 
சனியனாய் ஏன் உருவாகினாய் 


நீ துவக்கிவிட்ட வழிகள் 
எத்தனை நல் உள்ளங்களின் 
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி 
சின்னாபின்னமான சடலமாவாய் 


நட்புக்கு வழிகோலும் 
முகநூலின் பாதையில் 
கிரிமிநாசினியாய் நீமாறி 
விபரமான முட்டாளாகினாய் 

Saturday, November 19, 2011

என்னைத் தொலைத்த நான்

நானென்ற அகம்பாவம் 
நானென்றே.. நினைத்தபோது 
நன்மைகளேதும் நோக்கியதில்லை 
நான்தான் சரியென்ற வாதம் 
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது 

காதலே ஜெயமென்று 
கால்வரை பிடித்துவிட்டவனை 
காதலன் என்றுகாணாது 
அடிமையாய் நடத்திநின்று 
அழித்திருந்தேன் காதலை 

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில் 
குனிய மறந்து கும்மாளமடித்ததை 
என்குழந்தைகளும் தொடர்ந்து 
குறையுள்ள பிள்ளைகளாய் 
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை 

Thursday, November 17, 2011

ஹம்னாவெனும் நடத்துனர்

சேனையென்ற எம் ஆகாயவிமானம்
எழ ஆரம்பித்த போதே..
அமைதியாய் ஏறியமர்ந்த
தலைமை விமானி
பயணிகளறிந்திராத
திறமையான நடத்துனர்


இடிமின்னல் சூறாவளி
கார்முகில் பெருமழையென
இன்னல்கள் எதிர்கொண்ட போதும்
நேர்த்தியான பயணத்திற்கு
தலைவன் வழி பின்தொடர்ந்த
முக்கியமான நடத்துனர்


இன்று பயணிகளின் முன்
நடத்துனராய் காட்சி தந்து
தன்னலம் நோக்கிடாத
தங்கையெம் நங்கை
தலைமை நடத்துனரவர்


ஹம்னாவெனும் புனைப்பெயரில்
சேனை முழுதும் சிலாகித்திருந்து
தேனாய் உறவுகளுக்கு
தித்திப்பய்த் திகழ்ந்த
தங்கத் தமிழ் நடத்துனர்


சேனையில் பல அடைவு
15000 பதிவுகளையும் தாண்டிய பெண்
பாராட்டப்பட வேண்டிய
பக்கங்களோ பல்லாயிரம்
மங்கலமாய் என்றும் திகள
நடத்துனரே உமை வாழ்த்துகிறேன்


உம் பாதையில் கற்றுத்தந்தவைகள்
உன்பிள்ளைச்செல்வங்கள் கற்றவையாகும்
உயரிய பணியில் உளமாறப்பிணைந்து
ஈருலக வாழ்வில் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்


Wednesday, November 16, 2011

வஞ்சிக்குமுன் புன்னகை.....



நிழலாடும் உன்புன்னகையில் 
நிஜமாய் உயிர்க்கிறேனடி 
நீ உதிர்த்த புன்னகைப்பூ
என் மனப்பூங்காவில் மலர்ந்ததடி


உன் ஒற்றைக் கண்பார்வையில் 
என்னை உற்றுநோக்கிய பொழுது 
என் பிறப்பின் அடைவை 
முழுதுமாய் உணர்ந்தேன் 


புன்னகை மலர்ந்த உன்முகம் 
என் கனவையும் ஆக்கிரமித்துவிட்டது 
தடுமாற்றத்துடன் நடமாடுகிறேன் 
தவழும் உன் புன்னகைக்காக மட்டும் 


உன் புன்னகையின் விலை 
கோடிகளாயினும் கொடுத்திடலாம் 
கோடிகளையும் அற்பமாக்கி 
மகி்ழ்வு தருகிறதுன்புன்னகை 


வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி 
வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும் 
சாவின் விளிம்பைக்கூட 
சரித்திரம் படைத்து வென்றிடும் 


பர்ஹாத்துக் கோர் வாழ்த்து

பாலமுனை பாறுக்கென்ற 
புகள்பெற்ற கவித்தந்தைக்கு 
மகனாய் அவதரித்து 
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர் 
விழுதாய் அலங்கரிக்கும் 
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன் 


இறைவனருளால் அடைந்த 
திறமைகளின் வாயிலாக 
உலகவலம் இணையங்களினூடே 
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில் 
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன் 

அடைந்த கல்வி 
அயலவர்க்குதவிட 
அயராதுகற்றுத்தந்து 
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து 
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து 
அன்பனாய் ஓர் வலம் 
சேனைக்காக வாழ்த்துகிறேன் 

கேட்டவற்றுக்கதிகமாக 
கேளாதவற்றையும் நுட்பத்துடன் 
மனமேற்று மகிழ்வுடன் 
தோழமைகளுக்குதவும் 
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன் 

ஆயிரம் உன்பயணத்தில் அற்பம் 
பல்லாயிரம் உன்னால் சேனையடையும் 
சேவகனாய் உன்னால் 
நண்பர்கள் மகிழ்வர் 
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன் 

Sunday, November 13, 2011

காதலின் காணிக்கை


காதலெனும் புனிதம் 
காதலெர்களால் கெட்டுவிடுகிறது 
காதலென்று சொல்லி 
ஏமாற்றமங்கு நடக்கிறது 


விழுந்து விழுந்து 
காதல்வலை வீசியதில் 
காதலுக்கே ஹீரோவென்று 
கானமங்கு இசைக்கிறது 


கண்டதும் முத்தம் 
கை பட்டதும் அணைப்பு 
தொட்டதும் ஈர்ப்பு 
தொடர்ந்ததும் அனுபவிப்பு 


மயங்கிய காதலர்கள் 
நம்பிக்கையை காணிக்கையாக்கி 
ஈருடல் ஓருயிரென்று 
ஈனமங்கு அரங்கேறுகிறது 

Friday, November 11, 2011

தோழமையின் மகிழ்வுடன்.....

அன்புத் தோழனே நீரும் எதிர்பார்த்திராத 
இறைவனின் தீர்ப்பாய் உன் மனம் மகிழ 
மங்கலக் குத்துவிளக்காய் வந்துதித்தாள் 
செல்லக்குழந்தை உன் செல்வக்குழந்தை 

தினமது சிறப்பென்று தித்திப்புடன் காத்திருக்க
தித்திப்பின் மிகையென்று மலர்ந்தாள் மகளாக 
அன்னை மடி சுமைதீர்த்து அவதரித்த அன்புக்குட்டி 
அகிலம் போற்ற இறைவன் துணை நிற்கட்டும் 

உன் முகமலர்வை கண்டு மகிழ்ந்தேன் 
உள்ளத்துக் குமிறலின் உணர்வை அறிந்தேன் 
பிரிவோடு பிணைந்த வாழ்வுடன் - மகளை 
காணத்துடித்த வலி உணர்ந்தேன் 

பெற்றது பெண்குழந்தையென 
பெருமிதத்துடன் மார்தட்டினாய் 
உன்தாயென தாங்கிடுவாய்யென்று 
உறுதி கூறினாய் - உனக்கு மகளானதில் 
மகிழ்ந்திடுவாள் இனிவரும் காலத்தில் 

இறைவன் உனக்களிக்கும் தேகாரோக்கியத்தில் 
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும் 
மகிழ்வுடன் வாழ்ந்திடவும் 
எல்லாவளமும் இனிதாய் அடைந்து 
ஈருலக வெற்றி அடைந்திடவும் 
ஏகவல்லோன் துணைபுரிவானாக 
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன் 

Thursday, November 10, 2011

உண்மைக்காதலிது



உனக்காக நான் நடக்கிறேன்
எனக்கா நீ கைகொடுக்கிறாய் 
ஒற்றுப்போன உணர்வுகளோடு
ஒருங்கிணைந்த உள்ளம்


ஊனமற்ற உள்ளத்தினால்
உயிர்பெற்ற காதலுக்கு
குறைகளற்ற குணமதிகம் 
நிறைவான திருப்பதியும் காண்கிறது


இறைவனின் எடுத்துக்காட்டிது 
வாதங்களற்ற வாழ்வியலுக்கு 
உள்ளத்தின் திருப்திகாண 
ஊனமொரு குறையில்லை 


மனதில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் 
நினைவில் ஒன்றும் நிஜத்தில் ஒன்றுமாய் 
நிறம்மாறும் ஊனக்காதலர்களுக்கு 
கதை சொல்லும் உண்மைக்காதலிது 

Saturday, November 5, 2011

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகள்



மகிழ்ச்சிக்கு மகுடம் சூட 
மலர்வது பெருநாள் 
மகிழ்வுடன் தியாகத்தையும் 
உணர்த்துவது ஹஜ்ஜூப் பெருநாள் 


உலகத்து ஒற்றுமைக்கு 
ஒரே யொரு உதாரணம் இத்திருநாள் 
உலக மாதாவின் வயிற்றுக்குழந்தைகளின் 
ஒன்று கூடல் இத்திருநாள் 


அன்று உருவான சரித்திரத்தை 
இன்றும் நினைத்திடச்செய்கிறதின்நாள் 
தன்னை மறந்து பிறருக்காய் 
துணிந்துதவிட திணிப்பதுமின்நாள் 


ஏழை எழியவருக்காய் 
ஏகவல்லோனின் ஏற்பாட்டில் 
உழுகியாவெனும் கடமையில் 
புசித்துமகிழும் இத்திருநாள் 


பெருநாளின் மகிழ்வுடன் 
நட்பினில் பிணைந்து 
அன்பினில் ஜெயித்து 
என்றும் திருநாளாய் மலர்ந்திட 
இன்நாளில் பிரார்த்திப்போம் 
அனைவருக்கும் எனது 
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் 

Thursday, November 3, 2011

ஏதுமில்லா வாழ்வு...



பணந்தான் வாழ்வென்று
பகட்டு வாழ்விற்காய்
துறந்த நாடு பிரிந்த வீடென 
நகர்த்திய வாழ்வு 


பிரிவின் ஆரம்பத்துடன் 
தனிமையின் தவிப்புடனும் 
தேடலின் ஏமாற்றத்துடன்
பரிதவிக்கும் வாழ்வு 


அடைவதில் திருப்தியற்று 
அடைந்தவைகள் மீதமற்று 
ஏனிந்த வாழ்க்கை என்ற 
கேள்விகளே வாழ்வு 

Monday, October 31, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 06)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)


சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஓதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை

இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை

ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை

Sunday, October 30, 2011

கருணைக் காதல்


பள்ளிநாள் வகுப்பறைமுதல்
பக்குவமெனை சேருமுன்னே
காதல் வலை விரித்து - என்னை
வீழ்த்திவிட்ட விந்தையானவளே...

கொண்டு விட்டேன் காதலென்று
நள்ளிரவு நடுநிசியிலும்
பத்திரமாய்க் காதல்தூது
பக்குவமாய் படைத்திருந்தேன்

அடைந்த எம் காதலுக்காய்
ஒருநாளேனும் உன் மடி துயில
காத்திருந்து பலவருடத் தவமிருந்து
ஏந்திக்கொண்டேன் மலராக

காதலில் வென்றவெர்களென
மார்தட்டி பெருமையும் கொண்டு
வாழ்வின் இன்பமாக
அடைந்தோமிரு கண்கள் - ஆதலால்
காய்த்த மரமானோம்

Wednesday, October 26, 2011

அவர்களெம் குழந்தை....

அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்


கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு


உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை

Saturday, October 22, 2011

இன்று யார் சர்வாதிகாரி....??



ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று 
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல் 
உள்நோக்கம் ஊமையாக்கி 
ஒலிக்கிறது உலகெங்கும் 


42 வருட அரசாட்சியில் 
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான் 
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார் 
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில் 
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார் 


குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை 
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன் 
உலகின் முக்கியமான சர்வாதிகாரி 
திரும்பிக் கேட்டவர்கள் யார்??

Friday, October 21, 2011

முனாஸ் என்ற என்தோழனுக்கு.....


முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
இன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகமே நீ வாழீர் 


துடிப்பான மாணவனாய் 
சிறந்த சாரணணனாய் 
கற்றதை கற்றவாறு 
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர் 


குடும்பச்சுமையும் தானுணர்ந்து 
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன் 
சரிந்திடாத குடும்பத்திற்காய் 
இரவுபகல் உழைத்திருந்தவனே நீ வாழீர் 


சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய் 
பிணைந்திருந்த வேற்றுமைகளை 
களைந்திடவும் துடித்து நின்றாய் 
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய் 
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர் 

Wednesday, October 19, 2011

காத்திருப்பின் வெகுமதி...


கண்களுனைத் தேடுகிறது 
காத்திருக்கிறேன் கானகத்தில் 
காதல் எனக்களித்து 
தவிப்பை பரிசளித்தாய் 


உனக்காகக் காத்திருக்கும் 
ஒரு நிமிடத்தவிப்புக்கூட 
தசாப்தங்களாய்த் தெரிகிறதே 
காதலின் தெய்வீகமிதுவோ...


மரங்களும் பட்சிகளுமாய் 
ஏளனப்பார்வையில் எம் காதலை 
குற்றம் சொல்கிறார்கள் 
என்னுள்ளம் பரிதவிக்கிறது 

Tuesday, October 18, 2011

சொன்னபடி நீ கேள்....


நான் பெற்றெடுத்த பிள்ளை நீ 
பேறுகளனைத்தும் எனக்கே சொந்தம் 
குறையதிகம் கண்டாலும் - நான் 
சொன்னபடி நீ கேள்....


என்னாசை தீர்ந்திடனும் 
என்விருப்பம் நடந்திடனும் 
உனக்காக அத்தனையுமென்று - பிள்ளையிடம் 
பறித்தெடுக்கும் சுதந்திரங்கள் 


உனக்கென்றொரு மனமில்லை 
அதிலொரு காதல் உதிப்பதில்லை 
அகந்தை மனம் அழுக்கானாலும் - விரல் 
நீட்டிய பெண்ணை மணந்திடனும் 

Monday, October 17, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)

அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்

அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்

எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்

உன் தொடுகையைத் தேடுகிறது....

அந்திமாலை அகல்விளக்கினூடே 
நாம் பேசிய காதல் மொழிகேட்டு 
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான் 

இயற்கை தந்த காதலோடு 
இயற்கையின் ஸ்பரிசங்களுடன் 
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும் 

நீரில் பட்டுவந்த தென்றலும் 
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும் 
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா 
இதுநாள்வரை பெற்றதில்லை 
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...

Sunday, October 16, 2011

வாடும்நெஞ்சம் அழுகிறது....



கைவிட்ட கணவனும் 
கைநழுவிய உறவுகளென 
தனிமை தந்த வாழ்வுடன் 
எதிர்நீச்சல் ஆகிறதென் நாட்கள் 

தான்கொண்ட வேதனை 
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற 
சுமந்தனன் முதுகிலே....

கடப்பாறை கைபிடித்து 
கடினபணி செய்துவிட்டு 
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன் 

வாழ்வோரெல்லாம் வாழுகிறார் 
வாடும்நெஞ்சம் அழுகிறது 
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...

Thursday, October 13, 2011

பற்றிக் கொண்டது காதல்






மலரின் இதளைப் பதம்பார்த்த 
வண்டுக்குத் தெரியவில்லை 
அம்மலரின் கிறக்கம் என்னவென்று 

மலர் கொண்ட கவர்ச்சியில் 
மதிமயங்கிய வண்டுக்குத் தெரியவில்லை 
மலர் மீதுள்ள காதலதுவென்று 

சேர்ந்து மலர்ந்து வகுத்த முகத்திதை 
ஈர்த்துக்கொண்ட மனதையல்லவா
பற்றிக் கொண்டது காதல்




Related Posts Plugin for WordPress, Blogger...