இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, August 18, 2011

அவளாகிய அவள்... (தொடர்கவிதை 04 )


கண்ணடைத்து இருண்டிருக்க 
கட்டிலில் கிடந்த உணர்வு 
முடியாமல் கண் திற்நத போது 
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு 
அதிர்ந்ததை மறக்கவில்லை 

என் பார்வையில் கேள்வியறிந்த தோழி 
சாந்தி பெறு குணமாகிடுவாயென்ற சைகையில் 
என்காலின் வலியுணர்ந்து 
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை 

எதிர்பார்த்திருந்த காகிதம் 
காத்திருக்கிறதென்றறிந்து 
கால்கள் விரைந்தபோது 
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து 
எனைத் தேற்றியதை மறக்கவில்லை 


காலமும் வைத்தியமும் 
எனக்களித்த ஆறுதலோடு 
எட்டுவைத்து நடக்க 
எழுந்துநின்ற மாலைப்பொழுதில் 
வந்துநின்ற ஆடவனைக்கண்டு 
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை 

மலர்ச்சென்டு கையிலேந்தி 
மலர்ந்த முகத்துடன் 
என்வினவல்களுக்கு விடையாய் 
அவனின் மொழிச்சல்கள் 
என் காதுகளுக்கு கவிதையாய் 
ஒலித்ததை மறக்கவில்லை 


எவ்வாறு இவளை அவனடைந்தான்........காத்திருங்கள் வருவாள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை அருமை.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...