இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, August 15, 2011

அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)

எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை

யாருமற்ற எனக்கு யாரெழுதிய மடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை

மொட்டைக் காகிதமா - அல்லது
வீணனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுளேனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை கண்ட தோழி
உனக்குள் காதலோ 
அதற்குரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டசெய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை


எதற்காக ஓடினாள்...............???

அவளாகிய அவள்........(தொடர்கவிதை 02)
அவளாகிய அவள்... (தொடர்கவிதை 04 )

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

செய்தாலி said...

கவிதை அருமை நண்பா தொடருங்கள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...