இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 29, 2010

புத்தாண்டே...புதுவரவே.


ஈராயிரத்துப்பத்து வருடங்கள் 
ஒரு நொடியில் கடந்ததுபோல் 
புத்தம் புதியதுவாய் 
மலர்வதோடு மறைகின்றாய் 

உன்னுள் அகப்பட்ட 
உயிர்களின் அலறல்களும் 
சீற்றங்களில் சிதறிய 
மனிதர்களின் ஆசைகளும் 
அங்காங்கே ஒலிக்கிறதே..

Tuesday, December 28, 2010

எதிர்பார்த்திருக்கிறேன் .....

அன்புநிறைந்தவனே எனை
ஆட்சி செய்தவனே உன்
பிரிவைத் தந்து என்றும் உன்
தவிப்பில் தத்தளிக்க விட்டாயே...


நீ வேண்டும் என்னருகில் 
உன்மார்மீது சாய வேண்டும் 
உன்விரல்கள் தலைகோர வேண்டும் 
உன் பாசமுத்தம் என்
நெற்றி தழுவ வேண்டும்

Monday, December 27, 2010

மாமியாரான தாயவள்

மாமியென்ற பந்தமும் 
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்


கணவனின் தாயவளை 
என்தாய் போன்றவளென்று 
நண்மை செய்துவிடின் 
நலம் காணலாமதிகம் 

Sunday, December 26, 2010

சிறகொடிந்த பறவைகள்


சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்


தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்

Thursday, December 23, 2010

நீபோதும் இவ்வுலகில்

அன்பே உன் வதனமலர்வில் 
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில் 
உனையடைந்து மகிழ்கின்றேன்

உன்னாசை தீர்த்திட 
உயிராய் நானிருப்பேன் 
உத்தமனாய் வலம்வந்து 
ஊடலோடு கலந்திடுவேன் 

Wednesday, December 22, 2010

அதிகாரியாயிரு

மனமே இல்லாத அதிகாரியாய்
மனிதனை மேய்த்து 
மனிதன் பிழைக்கிறான் 
உழைப்பைச்சுறண்டி உயர்வடைகிறான் 


ஏய் மனிதா......
இன்றையதினம் உனதானதால் 
ஆட்டிப்படைக்கிறாய் முடியும்வரை
தொழிலாழியானவனும் மனிதனடா

Monday, December 20, 2010

அச்சங்கொண்டு அடங்கிடாதே....


சொல்வதற்கு துணிந்துநில் 
வெல்வதற்கு எழுந்துநில் 
மாற்றானின் செய்கையில் 
அச்சங்கொண்டு அடங்கிடாதே


ஆளப் பிறந்தவனென்று 
ஆட்டிப் படைப்பவனையோ
வாதப் பிறவியென்று
விவாதம் செய்பவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே...

Sunday, December 19, 2010

கறிவேப்பிலையான மனிதம்......


தேவை என்றறிந்தேன் 
மருத்துவம் உன்னில் கண்டேன் 
உன் வாசத்தில் நலங்கொண்டேன் 
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்


சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய் 
உண்ணும் போது ஒதுக்கிவிட 
மனமேன்தான் கோணுவதில்லை

Thursday, December 16, 2010

மடிப்பிச்சை தாராயோ....


அன்பே உருவமாய் அடைந்தேன்
பாசமே உயிராய் தொடர்ந்தாய்
சுவாசமே நீயாய் சுவாசிக்கிறேன்
உலகமே நானாய் கொள்கிறாய்


மெய்மறந்த காதலை உணர்கிறேன்
அமுதமாய் என்றும் தித்திக்கிறாய் 
வாழ்வின் வெற்றியாய் கொள்கிறேன் 
மங்கிடா ஒளியாய் மிளிர்கிறாய் 

Tuesday, December 14, 2010

என்னிதயத்தைப் பறித்தாய்....



கபடங்களறியா மனதுடன் 
இதய சுத்தியோடும் 
கவலைகளற்ற நாட்களோடும் 
காலங்கள் கரைந்தன 


இதயந் தேடிய
இனிய காவலனாய் 
சுகங்கள் நிறைந்த 
சுகமானவனாய்....
என் இதயத்தை திருடிவிட்டாய் 

Sunday, December 12, 2010

வைரக் கண்ணீர்கள்.....(aids)

உன் தந்தைவழி தவறோ 
உன் தாய்விட்ட பிழையோ 
தங்கமே உனக்கும் 
AIDS என்ற கொடியநோய்

உன்பார்வையின் ஏக்கத்தில் 
பலகோடி வரிகளுண்டப்பா 
பிறந்தது உன்தவறா?
படைத்தவனைத்தான் கேட்கலாமா......?

Saturday, December 11, 2010

மன்னித்தது என்மனம்....



வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை 
தங்கம் என்ற குணமென்று 
தாங்கினேனே என்நெஞ்சில் 


என் காதலியாகவோ 
எனைச்சேர்ந்த தாரமாகவோ 
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

Thursday, December 9, 2010

நா...காத்து நலம்பெற



நான் செய்திடுவேனென்று 
சொற்களோடு மறந்து 
நாள்முழுக்க காக்கவைத்து 
வாக்குறுதியும் மறந்துவிடுவதேன்


சொன்னபடி நடந்திடுவானென
நாளெல்லாம் காத்திருந்து 
பலதிட்டம் இவனடைந்து 
பரிதவித்து தோற்கின்றான் 

Tuesday, December 7, 2010

தரணியில் பிறந்தபயன்...

பசிக்குக் கையேந்திய 
பச்சிளம் குழந்தைக்கு
இல்யென்று மனமும் 
எப்படியப்பா சொல்கிறது 
யாரோ விட்டதவறில் 
வீதிக்கு வந்துவிட்ட 
மனித(உன்)குலத்தின் அவலமிது
உன்கடமை மறந்துவிட்டாய் 
ஏற்றத்தாழ்வு 
இணைந்திருக்கும் வாழ்க்கையில் 
ஏழை நிலை உணர
ஏனுள்ளம் நாடவில்லை
வாகனப் பவணியுன் 
வருகையென்றும் நிலைத்திடுமா
வழியிலுள்ள ஓர்தடங்கல்
உன்நிலையும் மாற்றிடுமே...
நீயறியா கஞ்சத்தனமுன் 
அகத்திரையினை மறைத்திருக்கு 
கண்மூடும் வேளையிலே
கைசேதப் படுவாயே...
தயவுதேடுகின்ற ஓருயிரை
தத்தெடுத்தேனும் வழிசெய்திடு
தரணியில் பிறந்தபயன் 
அடைந்தபலன் கிடைத்துவிடும்

Monday, December 6, 2010

அனாதையெடி உன்னால்......

அனாதையடி நானும்
அதாரமில்லையெடி உன்னால்
நீ மறுத்த அன்பைத்தேடி
அனாதரவாய் தவிக்கிறேனடி

குழைந்து வழைந்து
நகம்கடித்து நாணித்தாய்
குழந்தை மனமுனக்கென
உள்ளமுனை தரிசித்தது

Sunday, December 5, 2010

உணர்ந்த நட்பு....



உதிரும் பொழுதுகளை 
பசுமை நினைவுகளோடு 
உயிர்ப்பித்து மறைந்தவளே
உன் தரிசனம் எப்போது..


கபடமற்ற உள்ளத்திற்கு 
காதலை காவலனாக்கி 
பூட்டிவைத்துச் சென்றாயே
விடுதலையும் தாராயோ...

Thursday, December 2, 2010

கைகொடுக்கும் நட்புலகம்



தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து 
தவழ்ந்து வரும் தங்கமேயுனை
அன்புக்கரம் நீட்டி 
அகமகிழ்வுடன் காத்திருக்கிறேன்


அஞ்சாநெஞ்சமுனக்கு 
ஆனதெல்லாம் சொல்லிவிட்டாய்
ஆற்றல் இருந்தமையால்
அறிவுக்கண் திறந்துவிட்டாய்

Wednesday, December 1, 2010

மனங்கலங்காதே...


காதல் என்றுரைத்து
திசைமாறும் வாழ்வற்று
சிதைந்திடா உணர்வுகளுடன்
காத்திருக்கிறாய் உன்துணைக்காக

காண்போரை நாடவில்லை
கைகோர்த்தும் நடக்கவில்லை
சமூகத்திரையினில்
உன்சரித்திரம் சிறந்ததே..

Tuesday, November 30, 2010

தலைவா நானுன் தொண்டன்


சமூகத்தின் தலைவனென்று
உம்மையும் மண்றமேற்றிட
இரவுபகல் தூக்கம் மறந்தவன்
தொண்டனென்று மார்தட்டி
கோசம் எழுப்பி கொடிபிடித்தவன்

முகவரியொன்று தலைவன்பெற்றிட
விலாசங்களேயற்று பயணித்தவன்
தலைவனையொருவன் வைகிறானென்று
தக்கபாடம் புகட்டியவன்

Monday, November 29, 2010

உனை ஆடச்செய்த நிகழ்வெது....



பெண்ணே நீயும் 
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய் 
நிறுத்தாது நிதானமாய்...
நீயாடக்காரணம் கூறாயோ....

அழகுச் சிலையே....
உன்னையும் சிறைபிடித்து 
அதிரும் இசைகொடுத்து 
ஆடச்செய்த நிகழ்வெது...

Sunday, November 28, 2010

மனதை மயக்கும் மலர்கள்

இரு மலர்கள் இங்கே
இதயம் தொடுகிறது
ஒவ்வாமையற்று இரண்டும்
உருவம் பெறுகிறதே...


மலரில் வடித்தெடுத்த மலரே
மங்கை உன்னழகில் மலர்கூட
நாணிக்கிறது ஏன்தெரியுமா?
அழகின் நித்திலம் நீ என்பதால்

Saturday, November 27, 2010

சந்தி சிரிக்கிறது....


அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று

அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே

Thursday, November 25, 2010

பட்டிணிச்சாவு....

அந்தோ பரிதாபம்
மனிதம் ஒன்றின் மரணமிது
கொடுமையிலும் கொடுமையிது
பட்டிணியால் மரணமிது

எண்சாண் வைற்றுக்கு
எள்ளளவேனும் உணவிருந்தால்
இச்சாவு இருந்திருக்குமா?
ஏன் உலகம் தூங்குகிறது

Wednesday, November 24, 2010

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.....

அம்மா என்றழும் எனை
ஆரத்தழுவி அணைத்து 
உச்சி மோர்ந்து பாசத்துடன் 
பாலூட்டு அன்னையே..

அகமகிழும் உள்ளத்துடன் 
பசிதீர்க்கும் உனை ஏந்தும் 
பாலகனாய் வளர்ந்திடுவேன் 
உன்பாசமே என்னுள்ளும் 
உதிரமாய் ஓடிடுமே...

Tuesday, November 23, 2010

வரம் தராத வசந்தங்கள்



என் கனவின் பிம்பமாய் 
நான் கண்டெடுத்த முத்தாய் 
என்வாழ்வின் விடிவெள்ளியாய் 
உதித்த உயிரானவனே 


அங்கங்கள் சிலிர்த்திடும் 
காதல் உணர்வுகளைக்
கனிமொழிகளில் நிதமும் 
திகைத்திடச்செய்தாய் 

பணமென்ற பேயுனக்கு....


எதையும் வெல்லும் ஆற்றலுனக்கு
உனக்காக ஏங்கும் மனங்களுண்டு
உன்னால் கண்ட துயர்களுண்டு
உனக்காக மூண்ட போர்களுண்டு


பணமென்ற காகிதமே
உன்சக்திக்கு நிகர் நீயேதான்
உன்னை அடைந்ததை விட
இழந்தவைகளிதிகமே...

Monday, November 22, 2010

காதலுக்காக சாவடிப்பதா?



பருவமுனை அடையுமுன் 
காதலெனும் மாயைக்குள் 
கட்டுண்டு கைசேதம் 
தேடிக்கொண்டாய் பெண்ணே


உனையீன்ற தாயவளுடன் 
உனை ஏந்திய நேசர்களை 
துச்சமென தூக்கி எறிந்து 
துணைஒன்று - தானே தேடினாயே

Sunday, November 21, 2010

மரணமில்லக் காதல்....


எங்கும் காதல் 
எதிலும் காதல்
உயிராய் அவதரித்தால் 
காதலை சுவாசித்திட வேண்டுமே


காதலில்லா வாழ்வும் 
அன்பில்லாக் காதலும் 
மனிதனுக்கே உரித்தான 
அற்புத உணர்வன்றோ..

Sunday, November 14, 2010

தியாகம் வேண்டும்....

வாழ்க்கை நிலைகளை 
வாழும்போது உணர்ந்துபார்
தியாகங்கள் பல செய்து 
திடம் பெறுவாய் நிலைத்து


பசிக்கின்ற நிலைதனிலும் 
உணவின்றி காத்திருந்தாய் 
தீயவழி நாடாது தியாகியாய்
நல்வழி தேடுகிறாய்....

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்



அனைத்து இணைய நண்பர்களுக்கும் 
என் இதயம் கனிந்த ஈதுல் அல்ஹா 
ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் 
அனைவரும் சாந்தி சமாதானத்துடன் 
கவலைகளற்ற சந்தோசமான வாழ்கை 
வாழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Saturday, November 13, 2010

உனைவெல்வேன்.....



கண்டேனடி பல உறவு 
கொண்டேனடி பல நட்பு
அனுபவம் உலகையாள 
எனையாள்கிறாய் நீயடி 


உன்னருகில் நானற்று 
உணர்வுகளை உறங்கச்செய்து 
எதிர்பார்ப்பை விதியாக்கி 
காத்திருபில் எனை வெல்கிறாய் 

இன்பம் தேடி...

சுகமதிகம் உண்டென்று 
கரம் தொட்டு - உன்
பூவான இதள்பதித்து 
இதமாக புகைவிடுகிறாய் 


குலவிளக்கு நீயென்று
உன் புகளும் பாடுகிறார் 
மூட்டிய புகை கொண்டு 
புகைவிட்டு நிருபிக்கிறாய் 

Thursday, November 11, 2010

வண்ண நிலவென்று....


வண்ண நிலவொன்று 
வானில் மின்னுவது போல் 
எட்டிடா தூர நின்று 
சில்மிசம் செய்கிறாய் 


பால் நிலவொளியில் 
கூடி மகிழ்வது போல் 
உன் பார்வை வீச்சில் 
என்மனம் கனக்கிறது

ஏங்கவைக்கும் எதிர்பார்ப்புகள்..


மனதின் ஆசைகளை 
அடைந்திட நாடி 
துடித்த நிமிடங்களுக்கு 
விடைகளற்ற தோல்விகள் 


வலிமையற்ற மனதுக்கு 
தோல்விகள் துயராகிட 
தாங்கிடா வேதனையில் 
ஏக்கங்களே எதிரியாகுறது 

Monday, November 8, 2010

கற்பனைக்காதல்...

கற்பனையில் நான் 
வரைந்து வைத்த ஓவியமடி நீ 
கண்கள் உனை அடைந்த மட்டும் 
காதலும் பற்றியதடி 


சிற்பமாய் உனை கொண்டபோது 
விலை மதிப்பில் உயர்ந்து நின்றாய் 
பேரம் பேசியதால் உனை 
அடைவதென்பதும் கனவானதே 

Thursday, November 4, 2010

அன்னையின் கண்ணீரில்......

தங்கம் என்று தாவி அணைத்து 
அங்கம் சிலிர்த்திட்ட பாசம் கலந்து 
உதிரத்தினை அமுதமாக்கி 
உச்சி மோர்ந்து ஊட்டுகிறாள் அன்னை 

எட்டி நடந்து காலூண்டி 
தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து 
வீறு கொண்ட வேங்கையாய் 
எழுந்திட்ட பெருமிதம் அன்னையால் 

Monday, November 1, 2010

அன்பின் உலகம்...

அங்கங்கள் சிலிர்க்கிறது 
உன் அன்பின் ஆழத்தில்
எப்போதும் இப்படியே
இருந்திட வேண்டுமே...

அழிந்திடும் உடல்களோடு 
மடிந்திடா உணர்வுகளுடன் 
உலகில் இணைவதில் 
எத்தனை இன்பங்கள் 

Saturday, October 30, 2010

தனித்துச் சென்றாயே...

அன்பை அள்ளித்தந்தாய் 
ஆதரவுடன் இருந்தாய் 
உலகில் எனக்காக 
உதித்தவன் நீயானாய் 


உள்ளம் நிறைந்திருந்தாய் 
உறவால் கலந்திருந்தாய் 
அறிந்தது முதல் ஆற்றாமை வரை 
சகலமும் அறிந்திடச்செய்தாய் 

Thursday, October 28, 2010

உன் நினைவுகளோடு...

கண்ட நாள் முதல் - அடைந்து 
கண்டிரா இன்பங்கண்டேன் 
கண்ணயரும் பொழுதாகினும் 
கண்ணெதிரில் உன்னோடு 


தித்திப்பின் உச்சத்தில் 
திகிலுரிக்கும் முத்தங்கள் 
திண்டாடும் இறுக்கத்தில் 
திழைத்திருந்த சுகங்கள் 


Monday, October 25, 2010

ஏங்கவைத்த பொற்காலம்...


இளமையில் கல் என
இயற்றிய மொழி மறந்து 
இயல்புதான் வாழ்வென
இனித்ததுவே துடினம் 

படி என்று ஊரும் உரைக்க
பகட்டுக்காய் புத்தகத்துடன் 
படிமம் காட்டி நின்று 
பலரையும் ஏமாற்றினேன் 

Saturday, October 23, 2010

சொல்லாட்சி செய்......

மனதின் ஆழுமையில் 
மதியில் உருவாகி 
மலரும் வரிகளாக 
மட்டற்ற வார்த்தை பரிமாற்றம் 


சொல்லாட்சி என்றும் 
சொன்னபடி அமைந்திட்டால் 
சொற்களின் அதிகாரத்துடன் 
சொரக்கம் கண்டிடலாம் 

Thursday, October 21, 2010

காதலின் தவிப்பில்....


தேவதையே... உன்னை 
தேடினேன் உலகமெங்கும் 
தேடாத என் உள்ளத்தில் 
தேராய் அமர்ந்துவிட்டாய் 


கற்பகச்சிலை என்பேன் 
கருவிழியின் மணி என்பேன் 
கலியுகத்தில் நான் கண்ட 
கவியருவி நீயாவாய் 



Sunday, October 17, 2010

வென்றவனே விலைபோகாதே...

ஏழை மாணவனாய் 
ஏகவல்லோன் துணையில் 
ஏற்றம் கொண்டு கற்றதில் 
ஏறினான் பல்கலைக்கழகம் (பொறியியலாளனாய்)

கடந்த பாதையில் கிடந்த 
கற்களும் முட்களுமாய் தடங்கள் பல
கண்ணீருடன் அயராது - கல்வியை 
கற்றுத்தேறியவன் 

Saturday, October 16, 2010

வீணான கண்காட்சி...

வாலிபம் கடந்தும் 
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு 
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க


மணாளனின் பட்டாளமாம் 
மடைதிறந்த வெள்ளமாய் 
மனிதர்கள் கூட்டமொன்று 
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

Wednesday, October 13, 2010

பதவியை படித்திடு....

பல அடைவுகள் கண்டு 
பதவிகள் பல கொண்டு 
பலரதும் கவனம் வென்று 
பண்பால் நிலைத்து நின்று 


அடைந்த பதவியினைக்காத்து
அழகுகள் பல சேர்த்து
அறிவுகளை தேடி இணைத்து
அஞ்சாமல் துணிந்து நடத்து 

Monday, October 11, 2010

ன்புச் சிறையினிலே....

அன்பெனும் சிறையிலடைத்து 
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால் 
அல்லல் படுவதில் அனலாகிறேன்

அன்பின் அவதியை 
அருந்தும் பொழுதுகளில் 
அகிலம் மறந்திருந்து 
அடிமையாகிறேன் உன்மடியில் 

அச்சமறியாக் காதலை 
அஞ்சாமல் பரிமாறியதில் 
அந்தம் காண்கிறேன் 
அதுவும் இன்பமாகிறது 

Sunday, October 10, 2010

நேரத்தையாண்டிடு நேர்த்தியாக..

நீ பார்க்கும் நேமென்ன
நீ கடந்த நேரமென
நீ அடைந்த நேரமாய்
நீ தொலைத்த நேரங்களாய்


வாழ்வில் நீ கண்ட நிமிடங்கள்
வாழும்போதே மடிந்துவிட
வாழ்கிறேன் என்று மறந்து
வாழ்ந்தபின் துலைத்த நிமிடத்தை தேடுவாய்

Wednesday, October 6, 2010

மின்னலாய் வந்தவளே


மின்னல் கீற்றில்
மிளிர்ந்த சக்தியாய்
மினுங்கலில் வசீகரித்து - எனை
மின்னலாய் பற்றினாய்

மீளாக்காதலை அழித்து
மீட்டும் வீணையாய் தொடர்ந்து
மீதமற்ற அன்பினை
மீண்டும் மீண்டும் பகிர்ந்தாய்

Tuesday, October 5, 2010

மாய உலகம் மடிந்திடாதே...


பொல்லாத வாழ்க்கையடா 
போதுமிந்த வாழ்க்கை 
வயது அறுபது கடந்துவிட
வயதுகள் நாற்பது தனிமரமாய் 

இத்தனை காலத்தில் 
இருபது தடவை உறவுகண்டு 
இன்பங்கள் மூன்றரை வருடமட்டும் 
இதுவும் வாழ்க்கை பொறுக்குதில்லை மனம் 




Related Posts Plugin for WordPress, Blogger...