இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, November 23, 2010

வரம் தராத வசந்தங்கள்



என் கனவின் பிம்பமாய் 
நான் கண்டெடுத்த முத்தாய் 
என்வாழ்வின் விடிவெள்ளியாய் 
உதித்த உயிரானவனே 


அங்கங்கள் சிலிர்த்திடும் 
காதல் உணர்வுகளைக்
கனிமொழிகளில் நிதமும் 
திகைத்திடச்செய்தாய் 



என் மன்னவன் நீயென்று 
மதியில் நிலைத்திருந்தாய் 
உனையன்றி உலகமே 
சூனியமாய் உணரச்செய்தாய் 


காலக் கோலனால் 
கண்ணாளன் உனைப்பிரிந்து 
காத்திருப்பை சுகமாக்கி 
உன்நினைவுகளே மூச்சானது 


எம் மனங்கள் உணர்ந்த 
உடல்கள் சந்தித்திராத 
சந்தோசக் கோடுகள் 
கைசேரும் நாள் வந்தது 


மங்கலம் பாட மணாளனாய் 
உயிரே வருகிறாய் என்றிருக்க 
வானுர்தியோடு நீயும் 
அமங்கலச் செய்தியானாய் 


உயிரறுந்த செய்தி கேட்டு 
உடல்பிரிந்த உயிர்தேடி
எனை மறந்த பிரம்மையாய் 
அலையவிட்டுச் சென்றாயே..


நான் பெற்ற வரமானவனே
உன்னால் இழந்த வசந்தங்களை
மடியும் வரைத் தேடுகிறேன் 
கிடைப்பாயா? எனைச்சேர்வாயா?


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

கவி அழகன் said...

சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

கவி அழகன் said...

அருமை வாழ்த்துகள்

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்

சுடும் போது சாப்பிடாதீர்கள்
சுட்ட சோறு சாப்பிடுங்கள்
சுடாத சோறும் சாப்பிடாதீர்கள்
சுட வைத்து சாப்பிடுங்கள்

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்

நன்றி நண்பா

சசிகுமார் said...

Nice

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்
நன்றி நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வரம் தராத வசந்தங்கள்... வரம் தரும் வசந்தங்களாய் மாறவேண்டும் அவளுக்கு....

உங்களின் கவிதை எங்களுக்கு வரம்தான்....

சிந்தையின் சிதறல்கள் said...

@தஞ்சை.வாசன்

மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக உங்களதும்தான்

Aathira mullai said...

வரம் தராத வசந்தம்.. வரம் பெற்று விடும் அழகான தன் கவிநயத்தால்.

சிந்தையின் சிதறல்கள் said...

@ஆதிரா

மிக்க நன்றி அக்கா தங்கள் வரிகளில் இதுகேட்பதிலும் என் கவிதை வரம் பெற்றதாகிவிடும்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...