இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 24, 2020

சிறுநாளாகிய பெருநாள்


காரிருளில் அடர்ந்த காட்டில் 
கண்களைக் கட்டி விட்டதுபோல் 
தளர்ந்த மெய்யுடனும் 
சோர்ந்த உள்ளத்துடனும் 
கண்விழித்த நாளிது....!!

பூட்டிய அறையினுள் 
புத்தாடை  ஏதுமின்றி 
புத்துணர்வுக் குறைவுடன் 
உற்றார் உறவுகளற்று
 புலர்ந்து விட்ட நாளிது ...!!!

மரணப்பயத்தினால் 
அஸ்தமித்த உலகத்தில் 
எதிர்காலக் கேள்விக்குறிகளோடு 
நிகழ்காலக் கொலைகளாக்கிய
நிம்மதியற்ற நாளிது......!!

றகுமத்தான நோன்புகளை 
சுமந்து வந்த றமழானுக்கு 
விதியாக்கிய நடமுறைகளுடன்
வேதனைகளோடு விடைகொடுத்த 
வெறுமையான நாளிது.....!!!


என்றும்  குதூகலமாய் 
எல்லோருக்கும் சுபீட்சமாய் 
மலர்ந்து வந்த பெருநாளே 
என்றுமில்லா சாதனைகளோடு 
சிறுநாளாய் ஆனதேனோ......????

படைத்தவனிடமே மண்டியிடுவோம்  
அவனின்றி அணுவுமசையாது 
நடந்தவைகள் கடந்துவிட 
இனிவரும் நாட்களையாவது 
பெருநாளாய் மாற்றிடு இறைவா....!!

Thursday, May 21, 2020

உள்ளத்...தீ பிரளயமாகும்


மரணம் எய்திய மனிதர்களை 
மனிதமற்று எரித்து நீங்கள் 
சாதித்தது எதுவோ.....??
சரித்திரத்தில் சர்வாதிகளானீர்கள் 

உயிராகிய எங்களின் மார்க்கத்தினை 
உரமாக்கிய உங்களின் சுயநலத்தை
உலகமே உமிழ்கிறது இன்னுமா....???
உணரவில்லை உங்கிளின் புத்திகள் 

சுதந்திர நாட்டில் மதச் சுதந்திரத்தின் மறுப்பு 
அறம் விரும்பும் அப்பாவிகளை 
அல்லலலுறச்செய்து ஆட்டிவைக்கிறீர்கள் 
அருவருப்புகளால் அலறுகிறது உள்ளம் 

மானிடப்பிறவிக்கு மரணத்திலும் 
மாசுபடைத்து வாழும் மனிதர்ளுக்கும் 
தீயிட்டிருக்கிறீர்கள் கொழுந்துவிட்டெரிகிறது 
உள்ளத்....தீ பிரளயமாகினால் 
நாளைய நாசம் நிச்சயமாகிவிடும் .........

வல்லரசுகளே ஆட்டங்கண்டிருக்க 
பேரரசன் அல்லாஹ்வின் நாட்டத்தில் 
சிற்றரசர்களான உங்களின் ஆட்டம் 
நிறுத்தப்படும் நாள்வரும்....
ஆசுவாசத்தோடு காத்திருக்கிறோம்...

Wednesday, May 20, 2020

உன்னுள்ளும் நான்.......

என் உணர்விழந்து
உன் நினைவில்
எனைத் தொலைத்தேன்
உளம் ஏனோ தடுமாறுகிறது
காதலென்று மனம் சொல்ல
வயது என்று புத்தி உரைக்கிறது
இப் போரினை வெல்லவென்று
காதலம்பெய்துகிறேன்
உனை வீழ்த்த....
உன்னுள்ளும் நான்
உறைந்து கிடைக்கிறேன்
உருகும் நிலையற்று
மறைந்து கிடக்கிறேன்
மறந்து போகுமுன்
மலராய் ஏந்திடு என்னை
காதல் விதைப்பதோடு
கனியும் நாளுக்காய்
காதலியாய் கூட வர
காத்திருக்கிறேன் அன்பே..
விடை கொடு சீக்கிரமே....




Related Posts Plugin for WordPress, Blogger...