இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 8, 2012

(காதல்)எதிரிக்குத் தூக்குமேடை....!!



உலகக் காதலர்களின்
உரிமையான கூக்குரல்
ஒலித்திருக்கிறது ஓரிடத்தில்
காதலை எதிர்ப்போருக்கு
தூக்குமேடை காத்திருக்கிறதாம் 


காதல் ஒரு பாவமென்றும்
காதலர்கள் பாவியென்றும்
காலாகாலம் எழுப்பிய ஒலிகளுக்கு
சாவுமணி அடிக்கிறார்களாம் 


தன்மனம் ஏற்றவனை/(ளை)
தன்நிலை சரிகண்டு 
காதலித்துக் கரம்பிடிக்க 
எத்தனை காலம் தான் போராடுவது 

Monday, July 2, 2012

அடைந்திடா ஓட்டமெதற்கு....?





ஒடுகிறாய் ஓடுகிறாய் 
எதைத்தேடி ஓடுகிறாய் 
உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் 
நீ பயந்த உன் எதிர்காலம் 
உன்னை துரத்துகிறதென்று 
உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா??

துர்ப்பாக்கிய சாலியாய் 
துயர்களைக் கண்டும் 
துன்பங்களைக் கண்டும் 
துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா??

இல்லை நிம்மதி வேண்டுமென்றும் 
நிலையான சுகம் வேண்டுமென்றும் 
வேறுலகில் கிடைப்பதாய் கண்ட 
கனவின் பின்னால் ஓடுகிறாயா??

Sunday, July 1, 2012

உனக்கென உதிர்ந்த வரிகள்


ஒவ்வொரு வருடமும்
ஓயாது உணர்த்திடும்
உன் மலர்வு நாளை
மகிழ்வோடு கடந்திடப்
போராடுகிறது மனம்


ஏக்கம்தான் வாழ்வாவென
எண்ணத்தோன்றுகிறது
ஏனிந்த ஏமாற்றங்களென
எய்த்து நிற்கிறது மனம்


அத்தனை தந்தைக்கும்
அகம் நிறைத்திடும் செல்வம்
அன்னையாய் மலர்ந்திட்ட
அருமை மகளின் நிகள்வல்லவா


தாய், தாரம் கடந்த பாசம்
தங்க மகளின் திகட்டாத நேசம்
தரணியை வென்ற தற்பெருமை
தளரந்திடா வாழ்விற்கு
(இறைவனை) வேண்டுகிறது மனம்





Related Posts Plugin for WordPress, Blogger...