இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 28, 2012

நிரந்தரமாய் இடங்கொடு.......!!!



சுதந்திரம் கண்ட நாட்டை 
சுடுகாடாய் மாற்றியதில் 
எஞ்சியது ஆறடி நிலம் 
அதிலுமா கூறுவேண்டுமுனக்கு 


எங்கள் நாடென்று 
எண்ணி உள்ளோரையும் 
ஏய்த்துப் பிழைக்க நினைத்த
ஏழனப்பாவியாய் நீங்கள் 


பிறந்த மண்ணைக் குறிவைத்து 
பிறந்த போதே கழுத்தறுத்து 
நிம்மதியற்ற வாழ்வளித்து 
நிறுவயதுதானென்ன....??

Thursday, June 14, 2012

தரங்கெட்ட காமம் தரணியில்........!!!!



காமத்தின் வாயிலாக 
கலியுகம் கண்ட மானிடமே 
காமம்தனை கருத்துள்ளதாக்கி 
மாசற்ற காமத்தில் மகிழாயோ...??


மதிகெட்ட உன் காமத்தில் 
உறவு மறந்த நேரத்தில் 
மிருகமாய் மாறுகின்ற 
மானிடப்பிறவியா நீ 


அரிய மானிடப்பிறவியாய் 
அவதரித்த நீ 
ஐந்தறிவு ஜீவராசிபோல் 
ஆறாமறிவை மறந்து 
அனுபவிக்கத் துடிக்கிறாய் 

Sunday, June 3, 2012

கற்பை பறித்த காதல் வாழுமா...???


தேன் சொட்டும் வார்த்தைகள் 
நம்பிக்கை தரும் நடத்தைகளென 
மயக்கும் மந்திரங்களுடன் 
மங்கையே உனைக்கவர 
மன்னவனாய்த் தொடர்கிறான் 

நீ சிந்தித்திருந்த கட்டுப்பாடுகளையும் 
பயந்திருந்த எதிர்காலத்தினையும் 
துச்சமாய் உனக்கறிவித்து 
துணிவுடன் வலை வீசுகிறான் 

காதலென்ற காந்தமெடுத்து 
இரும்பாயிருந்த உனைக்கவர்ந்து 
சுற்றமும் மறந்திடச்செய்து 
சில்மிசங்களில் உனையாழ்த்தி 
அவனைத்தொடர வசியம் செய்கிறான் 

பெண்ணே நின்று நிதானித்துக்கொள் 
அற்பம் அவனின் ஆசைதீர்க்க 
பணயமுன் கற்பைக்கேட்கிறான் 
அவனின் கழிவகற்றும் (குப்பைக்)
கிடங்காய் மாற்ற நினைக்கிறான் 





Related Posts Plugin for WordPress, Blogger...