இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, November 30, 2010

தலைவா நானுன் தொண்டன்


சமூகத்தின் தலைவனென்று
உம்மையும் மண்றமேற்றிட
இரவுபகல் தூக்கம் மறந்தவன்
தொண்டனென்று மார்தட்டி
கோசம் எழுப்பி கொடிபிடித்தவன்

முகவரியொன்று தலைவன்பெற்றிட
விலாசங்களேயற்று பயணித்தவன்
தலைவனையொருவன் வைகிறானென்று
தக்கபாடம் புகட்டியவன்


தாணைத்தலைவா
உன்வழியே என்வழியென
தவமிருந்தவன்
மாற்றானின் கல்லெறியை
தலையிலேந்தி கவசமானவன்
சிம்மாசனம் ஏறிய தலைவனைப்பார்த்து
மெய்சிலிர்த்த உண்மையாளன்

ஏழை என்னிலையும்
தலைவன் தலைவனென்று
செத்து மடிந்தாயே
என்னபயன் நீகண்டாயென
எள்ளிநகையாட்டந்தான்

உன்பின்னே நானிருந்தும் 
தகுதிகள் பலயிருந்தும்
தக்கதொழில்யாதுமற்று
தரணியெங்கும் அலைகிறேன்
வயிற்றுப்பசிதான் பொறுத்திடுமா

வருடங்கள் பலகடந்தும் 
கிடைத்திடாத வெகுமதிகளோடு 
விரக்தியின் உச்சத்துடன் 
இளந்துவிட்ட வயதுகளும் 
அடைந்துவிட்ட இன்னல்களும் 
வெறுப்பிற்கு வித்திட்டது 

இருந்து இறப்பதைவிட
இறந்து சிறந்திட நாடினினேன் 
வேண்டாத உலகை  
வெறுத்த தொண்டனாய் 
மரணம் துணைவந்தது 

இவ்வாறான ஒரு தொண்டனின் மரணம் எனை கலங்கச்செய்தது 
அரசியலில் ஈடுபாடுடைய கோடிக்கணக்கான இளைஞர்கள் இவ்வாறு தவிக்கிறார்கள் சரியான வழிகாட்டலில்லாமல் 
இப்படியானவர்கள் மறுமையிலாவது நலம் பெறட்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

சசிகுமார் said...

மிக மிக மிக மிக அருமை ஹசீம் வாழ்த்துக்கள்.

Thangarajan said...

NANRAGA ULLATHU..

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்

மிக்க நன்றி நண்பா என்றும்போல் ஒடிவந்து வாழ்த்திவிட்டுச்சென்றீர்கள்
என்றும் உங்களன்பிற்கு நானடிமை

சிந்தையின் சிதறல்கள் said...

@Thangarajan

தங்களின் வருகையிலும் கருத்திற்கும் என்மனமார்ந்த நன்றிகள்

Riyas said...

VERY GOOD POEM..

சிந்தையின் சிதறல்கள் said...

@Riyas

மிக்க நன்றி நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அரசியல் படுத்தும்பாடு சொல்லமுடியாது.... தொண்டர்கள் படும் அவலநிலைகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துகள்...

அந்த தொண்டனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...

ஹரிஸ் Harish said...

நண்பா இன்று தான் தங்கள் தளத்திற்க்கு வருகிறேன்..கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் அருமையாக உள்ளது..தொடருங்கள்..

சிந்தையின் சிதறல்கள் said...

@தஞ்சை.வாசன்

மிக்க நன்றி தோழா உண்மைதான் தங்களின் தோழ்கொடுக்கும் பண்பினால் என்றும் சந்தோசமே

சிந்தையின் சிதறல்கள் said...

@ஹரிஸ்

மிக்க நன்றி நண்பா தங்களைப்போன்ற நல்ல உறவுகள் என்னைச்சேர்ந்தமையில் எனக்கு என்றும் ஆனந்தம்
இவ்வாறு தட்டிக்கொடுத்ததில் தளிர்விடுகிறேன் என்னாளும்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...