இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, December 14, 2010

என்னிதயத்தைப் பறித்தாய்....



கபடங்களறியா மனதுடன் 
இதய சுத்தியோடும் 
கவலைகளற்ற நாட்களோடும் 
காலங்கள் கரைந்தன 


இதயந் தேடிய
இனிய காவலனாய் 
சுகங்கள் நிறைந்த 
சுகமானவனாய்....
என் இதயத்தை திருடிவிட்டாய் 


காத்திருப்பின் பிரதிபலனோ
கடவுளின் நிர்ணயமோ..
கதிரவனாய் காட்சிதந்து 
கவ்விக்கொண்டாய் என்னையே..


ஏங்கிய காதலை 
மிகைத்து அருந்திடச்செய்து
எப்போதுமுனையே.....
எதிர்பார்த்திட வைக்கிறாய் 


ஏக்கத்தினைத் தாங்கிய
உணர்வுகளின் குவியல்களோடு
என் இதையமுனை நாடி
மலர்கிறது நாட்கள்.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

Nice

ஆமினா said...

சூப்பர்!!!

ரசிச்சு படிச்சேன் :)

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...