Subscribe:

இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்....முடிந்தால் மேலான கருத்திடுங்கள் ....என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, November 25, 2011

என்னை விட்டு உங்களோடு செல்கிறேன்



மூன்றுவயதில் முழுமையாய்
உணர்ந்த தந்தையின் பாசம்
அன்னாரின் இறப்போடு ஏமாற்றந்தந்து
அன்னையின் அரவணைப்பில்
ஓரளவு மறந்திடச்செய்தது


இறைவன் வகுத்த வாழ்க்கைக்கோலம்
வயதுகளின் மாற்றத்தில் வலிகளின்
தொடர்வோடு வஞ்சிக்கப்பட்டேன்
வேதனை தீர்க்க வழி காட்டு இறைவா
என்று ஏந்திய கரத்திற்கு அவனளித்த
இறைவாசலாய் இவ்வில்லமடைந்தேன்


என்போன்ற சகாக்கள் ஆயிரமிருப்பதையும்
பாசத்தைத்தேடிய பட்சிகளாய் அவர்களையும்
கண்டு மனம் கலங்கிநின்றேன்
கருணைவடிவான இறையருளின்
சூழலாயிருந்து கல்வியும் பாசமும்
ஒருங்கே பெற்றிடும் இல்லமாயுணரந்தேன்


இணைந்தபோது எதிர்பார்த்திராத
நட்புறவுகளின் அன்பும் தேவைகளின்
திருப்பதியான நிறைவுமடைந்து
ஈருலக வாழ்வின் வெற்றி நோக்கிய பாதையை
காட்டிநின்ற ஆசான்களை
என் தந்தைகளாய் ஏற்றுநின்றேன்



என்னை நான் மனிதானாய் உணர்ந்த போது
முழுமையாடைந்திட வேலையும் அளித்து
வெகுமதிநிறைந்த வாழ்வுடன்
தலைநிமிர்ந்த குடிமகனாய் மாற்றிய
இவ்வில்லலத்திற்கு இறைவனிடம்
அருளுக்காய் பிரார்த்திக்கிறேன்


காலத்தின் கட்டாயமும் மாற்றமும்
இதுநாள்வரை அறிந்திருந்திடாத
பிரிவின் துயரம் இன்று என்மனதில்
ஆட்கொண்டு அதிரச்செய்கிறது
என் தோழமைகளின் பாசம்
தோற்றுவிட்டதாய் கண்ணீர் மல்கச்செய்கிறது


விட்டுப்பிரிகிறேன் வேதனைகளோடு
எடுத்துச்செல்கிறேன் பாசங்களை
கற்றுச்செல்கிறேன் நேரிய பாதையை
கலங்கிநிற்கிறேன் பிரிவுக்காக மட்டும்
உயிருள்ளவரை உங்களோடிருப்பேன்
இறைவனுக்கே எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்



சகோதரர் றமீஸ் அவர்களின் வேண்டுகோளுக்காக அவரது வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மையமாக வைத்து எழுதிய கவிதை அவரது அனுமதியுடன் பிரசுரித்தேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை! நன்றி நண்பரே!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

atchaya said...

உணர்ச்சிக்குவியல்களாய் உள்ள கவிதை.
நல்ல பதிவு.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...