இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 16, 2011

பர்ஹாத்துக் கோர் வாழ்த்து

பாலமுனை பாறுக்கென்ற 
புகள்பெற்ற கவித்தந்தைக்கு 
மகனாய் அவதரித்து 
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர் 
விழுதாய் அலங்கரிக்கும் 
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன் 


இறைவனருளால் அடைந்த 
திறமைகளின் வாயிலாக 
உலகவலம் இணையங்களினூடே 
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில் 
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன் 

அடைந்த கல்வி 
அயலவர்க்குதவிட 
அயராதுகற்றுத்தந்து 
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து 
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து 
அன்பனாய் ஓர் வலம் 
சேனைக்காக வாழ்த்துகிறேன் 

கேட்டவற்றுக்கதிகமாக 
கேளாதவற்றையும் நுட்பத்துடன் 
மனமேற்று மகிழ்வுடன் 
தோழமைகளுக்குதவும் 
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன் 

ஆயிரம் உன்பயணத்தில் அற்பம் 
பல்லாயிரம் உன்னால் சேனையடையும் 
சேவகனாய் உன்னால் 
நண்பர்கள் மகிழ்வர் 
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...