இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, October 26, 2011

அவர்களெம் குழந்தை....

அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்


கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு


உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை



கடவுளின் விதியொன்று
கவ்விக் கொண்ட பொழுதறிந்தோம்
கஷ்டநிலை என்னவென்று


குறையின்றி குலங்காத்த
அப்பாவுமின்று குறையடைந்து
எங்கழுக்குக் குழந்தையானார்
அவரைக் காத்திட சிந்துகிறோம் வியர்வை


அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது


கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

மிக மிக அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் நண்பரே!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...