இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, January 27, 2016

அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

அண்மையில் விடுமுறைக்காக நாட்டில் இருந்த போது இறைச்சி வாங்குவதற்காக இறைச்சுக் கடைக்கு சென்றிருந்தேன் அங்கிருந்த வியாபாரியிடம் 1kg இறைச்சி கேட்டேன் அங்கு அளவு செய்து தரப்பட்ட அளவையில் எனக்கேற்பட்ட சந்தேகத்தினை அனுபவ ரீதியாக அவதானித்த விடயத்தனை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும் இவ்வாறானவர்களை அடையாளங்காட்ட வேண்டும் என்பதற்காகவும் இப்பதிவினை இடுகிறேன் சந்தேக முள்ளவர்கள் நீங்களும் அவதானித்து மோசடிக்காரர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள். 

நான் சென்றிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த நிறுவைத்தாரசினுள் ஒரு பக்கம் படிக்கல் வைக்கப்பட்டிருந்தது நான் கேட்ட அளவு இறைச்சியினை வெட்டியெடுத்து மறுபக்க தராசியினுள் இட்டு விட்டு சரியான அளவு படிக்கல் மாற்றம் செய்தார் அளவைக் கல் மேலெழுந்து கதித்ததன் பின்னர் இறைச்சியினை எடுத்து பொதிசெய்து  இன்னுமொரு துண்டினை மேலதிகமாக வெட்டி நிறுக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்துத் தந்தார் (வாங்குகின்ற நமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்  காரணம் மேலதிகமாக அல்லவா நிறுவை செய்து தந்திருக்கிறார்) என் கைத் தூக்கத்தில் எனக்கு சிறு சந்தேகம் ஏற்படவே அருகில் உள்ள இலக்ரோனிக் தராசில் நான் வாங்கிய இறைச்சுப் பொதியை நிறுவை செய்து பார்த்தேன் மேலே உள்ள படத்தில் காட்டிய விடை கிடைத்தது........

சிந்தித்துப்பாருங்கள் இன்றய காலத்தில் 600ரூபாவை தாண்டிய நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறைச்சி இவர்கள் விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு பெறுமதியை மக்களிடமிருந்து கொள்ளை செய்கிறார்கள் இறைவனுக்கு அணுவளவும் பயமில்லாமல் அற்ப பணத்திற்காக பட்டப்பகலில் சூரையாடுகிறார்களே நாளை மறுமையில் இறைவனின் கேள்வி கணக்கிலிருந்து தப்பிவிடுவார்களா.....????????

பிறகொருதினம் வேறொரு கடையில் இவ்வாறே வாங்கிய பின்னர் நிறுவை செய்து பார்த்தேன் அங்கு 1kg ஐ விட அதிகமாகவே இருந்தது ஆக அனைவரும் தவறிழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவில்லை ஒரு சிலர் இவ்வாறான திருட்டுத்தனத்தினை ஆங்காங்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவதானமாக இருங்கள் 

இது அவர்கள் மீது மாத்திரம் குற்றமில்லை இவர்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு மேற்பார்வை செய்யாத அதிகாரிகளின் குற்றம் கண்மூடித்தனமாக வாங்கிச்செல்கின்ற எம்போன்ற பாமரர்களின் குற்றம் இதை மேலோட்டமாக பார்க்கின்றவர்கள் சாதாரணமாகச்  சொல்வார்கள் இது அப்பட்டமான பாவச்செயல் குற்றத்துக்குரிய தண்டனை என்பதை அவர்கள் காதுகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் 

சமுகத்தில் நிலவுகின்ற அத்தனை குற்றச்செயல்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அனைவரும் அடிப்படையாக அமைகிறோம் இப்படியானவர்களை அடையாளங்கண்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் 

இது எமது பிரதேசத்துக் கடை  எந்த ஊர் என்று சில காரணங்களுக்காக குறிப்பிடவில்லை நீங்களும்  அவதானித்துப்பாருங்கள் தனிமையில் தொடர்பு கொள்ளுங்கள் தேவையேற்படின் தகவல் தருகிறேன் 
நன்றி 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

musamil said...

கவலையான செய்தி படைத்தவனை அஞ்சாத மனிதர்கள் அவர்களிடம் இது பற்றி சுட்டிக்காட்ட வேண்டும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில்
நாலு பேர் முன்னிலையில் ஆதாரத்தோடு சொல்லி திருத்த வேண்டும்
தண்டனை தர வேண்டும் அப்போதான் திருந்துவார்கள்
விழிப்புணர்வான தகவல் நன்றி

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...