இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 7, 2013

பாலைவனத்துப் பெருநாட்கள்.....


மலரும் வருடங்களை 
மகிழ்விக்க வரும் 
திருநாட்களில் பெருநாட்கள் 
எம் அருட்கொடைகள்.

பசித்திருந்து தாகித்திருந்து 
நோன்பு நோற்றோருக்கு 
வெகுமதியாய் மலரந்து 
மகிழ்விக்கிறது இன்நாள் 

உறவுகள் பிரிந்து 
பல துறவுகள் கடந்த 
தனிமை வாழ்வில் 
தாகமதிகம் இன்நாளில் 

எத்தனை பெருநாட்கள் 
இதுநாள் வரை கடந்தும் 
தனிமையில் கிடந்த நாட்கள் 
வெறுமையில் முடிந்தன 

நாளையும் மலர்கிறது 
நன்நாளாய் ஒரு பெருநாள் - ஆனால் 
பாலைவனத்துப் பெருநாட்கள் 
பாலைவனங்களாய் எம் வாழ்வில் 

தேசங்கள் கடந்து பாசங்கள் தேடும் 
தவிப்போடுள்ள பெருநாட்களை 
தரமுள்ளதாய் மாற்றிட..... 
வல்லோன் துணை அனைவருக்குமாய் 
கிடைத்திட பிரார்த்திக்கிறேன். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

வல்லோன் துணை அனைவருக்குமாய்
கிடைத்திட பிரார்த்திக்கிறேன்.

பெரு நாள் வாழ்த்துக்கள் சகோ!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...