இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, November 28, 2015

சென்னை மழை........


மழை வேண்டுமென்று 
மடிப்பிச்சை வேண்டியோரும் 
மழைத்தூறலின் மத்தாப்பில் 
மகிழ்ந்து மனம் நிறைவடைந்தோரும் 
மண்டியிட்டு அழுகிறார்கள் 

இறைவனின் அருளாய் வந்து 
வறட்சியென்னும் நோயகற்றி 
செழுப்பின் அழகுகளோடு 
அலங்காரமிடும் பூமித்தாய் -இன்று
என்று நீ ஓய்வாயென அழுகிறாள் 

உலகமெல்லாம் மழைபெய்தும் 
சென்னை மழையென்று அவலமாகி 
அன்றாடத்தவிப்புகளோடு மக்களை 
அல்லல் படச்செய்தமையால் 
கண்ணீர் மழையின்னும் ஓயலியே......

இறைவன் நாடினாலன்றி 
சரிசெய்திட முடிந்திடாத 
இயற்கை அனரத்தமிது 
வல்ல நாயன் இரக்கமுடையவன் 
மனமுருகி மன்றாடுங்கள் அவனிடமே....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...