இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 26, 2015

சுனாமி உலவுகிறது இன்றும்........


பல்லாயிரம் வருடங்களில் 
ஓரலையாய் வந்து 
பேரலையாம் சுனாமியாய் 
இன்றும் நினைவலைகள் தொடர்கிறது 

அமைதிக் கடலனப்போற்றி 
அன்னை மடி அன்னம் தேடிய 
ஆயிரமாயிரம் உயிர்களை 
இழந்த நாள் மறந்திடுமா  

இறைவன் எழுதிய தீர்ப்பு அது 
அறிந்திடாத காரணி எது 
வல்லவன் வழி மறப்பை 
உணர்த்திவிட்ட நிகள்வுதானோ......

நெஞ்சங்கள் பதைத்திருந்தது 
நெடு நாட்கள் உண்ண மறுத்து 
நித்தமும் நடு நடுங்கி 
அங்குமிங்கும் சுனாமியென 
கனவிலும் ஓடிய நாட்களாகியது 

வடுக்கள் தடங்களாகி 
அதன் எச்சங்கள் மிச்சமாகி 
எத்தனை உயிர்கள் மந்தமாய் 
மகிழ்வின்றித் துவண்டர்கள் 

காலத்தின் வேகம் கடத்தியது வருடங்களை 
கட்டளைகள் மறந்த அதே மானிடங்கள் 
அனியாயங்களின் உச்சியில் 
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள் 

பாத்திருக்கிறான் இறைவன் 
பகுத்தறிவு மனிதன் திருந்துவானென்று 
உணர்த்தும் வடிவம் எச்சுனாமி என 
அவனையன்றி யாரறிவார்

ஆகு என்றாலாகிவிட - அவன் 
கட்டளைக்காய் காத்திருக்கிறது பிரபஞ்சம் 
ஆகு நீ மனிதமாய் என 
சிறுசிறு சுனாமிகள் உலவுகின்றது இன்றும் 


qatar : 1:20am

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
காலம் உணர்ந்து கவிதை வடித்த விதம் சிறப்பு...எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...