இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 9, 2015

இதயத்தரசி நீ.......

என் இதயத்திருடியாய் மலர்ந்து 
இல்லத்தரசியாய் மாறிய 
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....

இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய் 
வாழ்வின் அந்தமுன் துணையென 
உன்மார்பில்  ஏந்தி நின்கின்றாய்....

இம்மியளவும் குறையாத 
காதலமுதம் பரிகிடச்செய்கிறாய் 
எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கன்னியாகின்றாய் 

இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில் 
மகிழ்வின் உச்சத்தினை 
உளமாற உகந்தளிக்கின்றாய்...

வாழ்வின் வளமெதுவென்று 
மென்மையாகப் புரிந்து 
வன்மையாகப் பாதைவகுத்து 
வளமாக்கினாய் உன்வாழ்வை....

உற்றாரும் சுற்றாரும்  
கூடிமெச்சிடும் குலவிளக்காய் 
அச்சமின்றிய அகல்விளக்காய் 
துலங்கின்றாய் உன் பாதையில்.....

சுதந்திப்பறவயாய் நான் விட்டும் 
அனுமதிக்காய்த் தவமிருந்து 
சாதனை உன்செயல்களால் 
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் 

நல்லதோர் பிள்ளை நீ 
பரிவான சகோதரம் நீ 
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ 

அகல விரிந்தாய் அனைவர் மனதிலும் 
 மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு 
சுவனமே பரிசாய் தந்திட மட்டும் 
வல்லோனை வேண்டுகிறேன்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...