இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, May 9, 2014

நானுந்தான் குற்றவாளி


நெருங்கும் வயதுனக்கு நாற்பது 
நொந்தழும் உன் மனதுக்கெங்கே ஆறுதல் 
கன்னி கழிந்திடாத் துயருனக்கு 
காலங்கடந்த ஆறுதல் வரிகளுமுனக்கு 

உன்விதியின் வழியா இன்நிலை 
சமுகத்துயரா இக்கொடுமை 
சரித்திரத்தில் நிலைக்கின்றாய் 
சமுகத்தின் வடுவாய் இன்றுன்நாமம்  

எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க 
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள் 
முதுகெலும்பற்ற வாலிபர்களின் 
சீதனச் சந்தையில் 
மனங்களை யார்தான் தேடுகிறார்கள் 

உன்குற்றமெதுவென்று நானுந்தான் தேடினேன் 
பிறப்பால் சகோதரிகள் ஏழென்றாய் 
அழகால் உனைவெல்ல யாரென்றேன் 
அன்பான உனையடைய ஆளிங்கு தானில்லையே

இறுதிவரை இப்படியே இருந்துவிட்டு 
மரணமதை எய்திட வேண்டுமென்றாய் 
என் உணர்வுகளலெல்லாம் அப்படியே 
செயலிழந்ததை நீயறியாய் 

நீயறிந்த என்நிலையில் 
நான் செய்திட ஏதுண்டு 
சமுகத்துக் குற்றவாளியாய் 
உன் நீதி மன்றத்தில் நானுமுண்டு 
தீர்ப்பின் அதிபதியாம் இறைவன் 
நல்வழியொன்றைக் காட்டிடட்டும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...