இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 18, 2014

ஏமாறியது யார்...............??


பனிக்கூட்டங்களைக் கண்டு 
மழைச்சாரலென நம்பினேன் 
உறவுக் கூட்டங்களுள்ளதென்று 
சுற்றத்து உயிர்களை நம்பினேன் 

கொடுமையிலும் கொடியது கண்டேன் 
சுயநலக் காரர்களாய்க் கண்டேன் 
என்னுள்ளம் துடிதுடிக்கக் கண்டேன் 
ஏமாற்றிய நட்புகளைக் கண்டேன் 

ஏற்றமுள்ள நட்புதனைக் கொண்டேன் 
ஏனவர்கள் எரித்துவிட்டனரென்னை 
எதிர்பார்ப்பற்ற நேசத்தினைக் கொண்டேன் 
நேசத்திற்கே யாசித்திடச்செய்தனரே...

சில்லென சிதறியதென்னுள்ளம் 
சீர்செய்திடத் தொடர்கிறார் சிலர் 
கண்ணாடித்துகள்களில்  விம்பங்கள் போல் 
நிளல்களை மாத்திரம் காண்கிறேன் 

ஏமாற்றம்.....ஏமாற்றம் - இது 
எனக்கு மட்டுமான ஏமாற்றமா.........??
ஏமாறியது நானாயிருந்தால் 
ஏமாற்றியவர்களை என்ன சொல்வேன்.. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...