இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, January 22, 2015

மதிப்பற்ற உயிர்கள்......‘!!


உறையும் குளிரில் 
உள்ளமும் நடுநடுங்குகிறது 
உறவுகளின் உணவுகளுக்கு
உயிரும் இங்கு பிரிகிறது 

தேசமிது பாலைவனந்தான் 
பணத்தின் சோலைவனமானதில் 
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய் 
அவதிகளால் அல்லலுமதிகம் 

முப்பது வயதானவருக்கு 
மூச்சு முட்டியதால் - இவ்
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம் 
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது....

அச்சம் எதிர்காலத்திலாக்கி 
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால் 
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மனதை கனக்க வைத்த வரிகள்.. அதுவும் உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seeni said...

வேதனைதான் சகோ..

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...