இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, March 5, 2015

சுமையாகும் தனிமை.......!!


வலியின் சுடர்கள் மட்டும் 
சுழல்கிறது சுற்றும்முற்றும் 
சுகமான தருணங்களை 
தேடிக்கொண்டிருக்கிறது மனம் 

உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத 
உறவுகளின் மத்தியில் 
உலகம் ஏனோ 
இருண்டதாய்த்தான் தெரிகிறது 

யார் யாரோ வந்தார்கள் வாழ்வில் 
தங்கியவர் யாருமில்லை 
தங்கியவர்களின் துணைகூட 
தேங்குவதும் எதுவரையோ......!

உலகத்து எதார்த்தம் 
உணர்த்தப்படுகின்ற வாழ்வை 
தாமதித்து உணர்ந்ததால்தான் 
தவிக்கச் செய்திருக்கிறது 

பிறப்பதுவும் இறப்பதுவும் 
துணையின்றியதுதான் 
இடைப்பட்ட வாழ்வில் 
தனிமையின் தவிப்பை 
சுகமாக்கிச் சாதனையாக்கிடு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...