இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, February 11, 2016

வந்துவிடு என்னவனே......

வந்துவிடு என்னவனே 
வயதென்னை வதைக்கிறது 
சீக்கிரம் வருவாயென்று 
சென்றவழி பார்த்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன் உனக்காகவே 
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறேன் 

கலைந்திடாத கட்டுடலை 
கலைத்தென்னைக் கனியவைத்தாய் 
காதல் அமுதென்று 
கனிவுடனே பரிகிடச்செய்தாய் 
காலமுள்ளவரை தொடர்வாயென்றிருக்க 
கனவுகளாக்கிச் சென்றுவிட்டாயே

தொடரும் உன் நினைவுகள் 
தொடர்கிறதிங்கு நிழல்களாய் 
தொல்லை தரும் உணர்வுகளும் 
தொடுதலின்றித் துடிக்கிறது 
துயில் கொள்ளும் தேகமிங்கு 
திடுக்கிட்டு எழுகிறது 

நெருடும் நினைவுகளோடு 
நொடிகளிங்கு வருடங்களாகி 
நித்தம் உன் வரவுக்காய் 
நெஞ்சம் பதை பதைக்க
நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என்
நினைவுனக்கு வரவில்லையா??

குறிப்பு : படம் கண்டதால்  உதித்த வரிகள் படத்தினைப் பகிர்ந்த கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களுக்கு நன்றிகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

நிஷா said...

காதல்ர் தினம் வருகின்றது என காதலர்கள் எல்லாம் சிலிர்த்தெழும்புவது போல் இருக்கின்றது,

நெருடும் நினைவுகளோடு நொடிகளிங்கு வருடங்களாகி நித்தம் உன் வரவுக்காய் நெஞ்சம் பதை பதைக்க நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என் நினைவுனக்கு வரவில்லையா??

நினைவுக்கு வராமல் இருக்குமா? வந்து தான் இருக்கும்! ஹாஹா! ஹாசிம், அத்தனை வரிகளும் அற்புதம் தான், உணர்வைக்கலந்து ஏக்கம் தொனிக்கும் வரிகள்!

சீக்கிரம் வந்து விடுவாள் என நம்புங்கள்


சிந்தையின் சிதறல்கள் said...

@நிஷா

மிக்க நன்றிகள் அக்கா உங்கள் வருகைக்கும் அருமையான கருத்திற்கும்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...